நவம்பர் 28, 2010

ஐம்பதிலும் ஆசைவரும்

ஐம்பதாவது இடுகை

இப்போதைய வாழ்வில் போராட்டங்களே நிறைந்துள்ளதால் வாழவேண்டிய அகவையில் வாழமுடியாமல் தவிக்கின்றனர் . மனிதன் பிறந்ததின் பொருளென்ன ? கேட்டால் விழிப்பார்கள் .
நம் வாழ்க்கை எதற்க்கு? நாம் என்னவாக இருக்கிறோம் . என்னவாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவில்லை

எது வழக்கை

இது குறித்து எமது விடியலை உடைப்போம் என்ற நூலில் பருண்மையாக எழுதியுள்ளோம் விரைவில் வெளிவரும் .
வழக்கை குறித்தான கற்பிதங்கள் மனிதனுக்கு மனிதன் மாற்றம் கொள்ளும் போலும் . அதுதான் ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு கசக்கிறது. இருக்கும் வரை மகிழ்வோடு இருப்போம் என எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நுகரத் தொடங்கி விடுகின்றனர் .இப்படி பட்ட எண்ணங் கொண்டவர் விரைவில் மூப்படைந்து மறித்து போகின்றனர் .இப்படி பட்ட
எண்ணம் பிழையானதே . நூறாண்டுநோய் இன்றி மனிதன் வழவியலும் .

ஐம்பதில் ஆசைவரும்

எமது மருத்துவ நடுவத்திற்கு ஐம்பதை கடந்த இளஞர்கள் வருகின்றனர் . சில பாலியல் குறைபாடுகளோடு ... அவைகள் எல்லாம் எளிதில் தீர்க்க கூடிய சிக்கல்களே அவைகள்
.குறி எழுச்சி இன்மைய
.விரைவில் விந்து வெளிஏறல்.
.முழுமையாக இன்பம் பெறஇயலாமை ...
இப்படி சிறிய குறைபாடுகள் எல்லாம் தீர்கக்கூடியவைகள் என நம்பிக்கையூட்டி வருகிறோம் .

நூறாண்டு வழக்கை ...

இந்த காலத்தில் நூறாண்டு வாழ்வதாவது... அதெல்லாம் இயலாத செயல் ,முப்பது அகவைலேயே மூப்படைந்துவிடுகின்றனரே, சர்க்கரைநோய் , இதயநோய் ,மூட்டுவலி நோய்களின் இதயநோய் ,மூட்டுவலி நோய்களின் படடியல் நீளுகிறதே என்பாருமுண்டு இந்தஎண்ணம் பிழையானது நூறாண்டு வழவியலும்

தளர்ச்சி நீங்குமா

உளம் செம்மையானால் எல்லாமே சரியாகும் . உளவியல் காரணங்கள்தான் மனிதனை ஆட்டிப்படைக்கிறது . இரண்டுபாலினரும் முறையாக உடலை பாதுகாத்து வந்தால் எல்லாமே இயலும் .
பெண்களைப் பொறுத்தவரை நாற்பது அகவைக்கு மேல்தான் அவர்களின் பாலுறவு நாட்டம் அதிகமாகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம் . இந்த வேட்கையை தீர்க்க வில்லை என்றால் போராட்டமாக வெடிக்கிறது என்பதும் உண்மையே .

வாழதொடங்குவோம்

எல்லா நோய் களுக்கும் தமிழ மருத்துவமான சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது போல் பாலியல் குறைபாடுகளுக்கும் முழுமையான தீர்வு உண்டு . தீர்வு கண்டு விட்டால் ஐம்பதில் மட்டுமல்ல தொன்னுரிலும் முழுமையான இன்பம் கண்டு வாழ முடியுதனே ?
அடுத்து :

பிறப்பு உறுப்புகளை பாதுக்கக்கும் முறைகள்
More than a Blog Aggregator

நவம்பர் 25, 2010

இயற்கையாக ஒரு அழகு கலை





அழகை விரும்பாதார் யார் ? அதுவும் இயற்கையான அழகு என்றால் ?
நமது சித்த மருத்துவம் அழகிற்கு அழகு சேர்க்க நல்ல வழிமுறைகளை வழங்குகிறது பார்ப்போமே

முதலில் பெண்களின் கூந்தல் பற்றியது . கூந்தல் என்றல் பேன்தொல்லை இருக்கத்தானே செய்யும்
அவற்றை எப்படி சமாளிப்பது ?
துளசி மூலிகையே சிறந்தது இம் மூலிகையை அரைத்து தலையெல்ல்லாம் பூசி சற்று நேரம் விட்டு குளிக்க பேன்தொல்லை தீரும் .
சிறிதளவு படிகாரத்தை (நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் ) பொறித்து தூளாக்கி நீரில் கலக்கி தலையில் பூசி இரண்டு மணிநேரம் விட்டு குளிக்க பேன் தொல்லை போயே போச்சு .

செம்பட்டை நிறம் மாற (மயிர் )

தமரைபூ குடிநீராக்கி நாளும் குடிக்க வேண்டும் .

கரிசாலை நூறு கிராம் , கொட்டை கரந்தை மூலிகை நூறு கிராம் , நன்கு உலர்த்தி காலை மாலை அரை
தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட நல்ல பலன் .

மயிர் நன்கு செழிக்க

வெந்தயத்தை நன்கு ஊற வைத்து அரைத்து தலயில் பூசி குளிக்க நல்ல பலன் .
சடாமஞ்சில் கொண்டுவந்து தேவையான எண்ணெய்யில் போட்டு காய்ச்சி வடித்து தலைமுழுக நல்ல பலன் .

பருக்கள்

மூஞ்சில் பரு இருந்தால் எவர்தான் விரும்புவர் ? அதை நீக்க முடியுமா ? நீக்க முடியும் உறுதியாக சொல்லலாம் . என்ன செய்ய வேண்டும் என்பதுதானே வினா?
தலையில் பொடுகு இருந்தால் மூஞ்சியில் பருவுக்கு கொண்டாட்டம்தான் . அதை முதலில் நீக்குக . அதற்க்கான தீர்வு நம் பதிவில் உள்ளது காண்க .
வேம்பு நல்ல மருந்து வேம்பின் துளிரை கொண்டுவந்து அரைத்து மூஞ்சியில் பூசி குளிர்ந்த நீரில் கழுவுக . நாளும் செய்ய வேண்டும் .

படிகாரம் கொண்டு தேய்க்கலாம் . நல்ல பலன் . பருவிர்க்கு மலசிக்கல் முகமையான காரணம் அதை நீக்குக .
நாளும் இயற்க்கை உணவுகளை காலையில் எடுக்கலாம் . இதனால் மூஞ்சி அழகாகும்.

மூஞ்சிப் பகுதியில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் வீங்குவதலும் , நாளங்கள் அடைபடுவதலும் பரு உண்டாகிறது . பதின் பருவத்தில்
(டீன் ஏஜ் )பாலுணர்வு கூடுவதாலும் இந்த காரணங்களினால் எண்ணெய் சுரப்பிகள் தூண்டப்பட்டு சீபம் என்ற எண்ணெய் சுரப்பை அதிகமாக்குகிறது . அளவிற்கதிகமான கொழுப்பு உணவுகளும் நோவை தூண்டுகிறது .காபி , தேநீர் , புகைப்பழக்கம் ,செரியாமை , போன்றவைகள் நோயை தூண்டும் .

உணவு கட்டுப்பாடு தேவை .
இயற்க்கை உணவுகள் அதிகம் எடுக்க வேண்டும் .
பப்பாளி பழம் அடிக்கடி எடுக்கலாம் .
எலுமிச்சை சாரு எடுத்து மூஞ்சிஇல் பூசி குளிர்ந்த நீரில் கழுவலாம் .
பருக்களினால் ஏற்ப்படும் கரும் புள்ளி நீங்க படிகாரம் நல்ல பலனை
தரும் .
உருளை கிழங்கின் சாரு எடுத்து பூசி கழுவலாம் .
உளவியல் போராட்டங்களை நீக்குவதும் அவசியம் .

நரை காரணங்கள்
அடிப்படை காரணம் மாறுபாடான உணவு பழக்கம் , அளவுகடந்த உள சிக்கல் .
வைட்டமின் B குறைபாடு , இரும்பு சத்தின்மை , செம்பு சத்து குறைவு ,இவைகள்தான் அடிப்படை கரணங்கள் .
இந்த சத்து நிறைந்த உணவுகள் சேர்க்கவும் வண்டும் .
கவலை தலையில் இருக்கிற மயிர் கால்களின் அனைத்து பகுதி களையும் ஒரு இறுக்கத்தை உண்டாக்குகிறது . எனவே கவலையை நீக்க வேண்டும் ,
நரைத்தபின் அவற்றை நீக்க நல்ல மருந்துப்பொருட்கள் மூலிகைகள் உண்டு அவற்றை கொண்டு நரையை நீக்கி மகிழ்வுடன் வாழலாம் .

நூறு அகவைவரை பல்லை பதுகப்பதெப்படி.?
More than a Blog Aggregator

நவம்பர் 15, 2010

கண்களை பாது காப்போம்


கண்களை பாது காப்போம்

இன்றைய
அவசர உலகத்தில் பொறுமையாக உடலை பாது காக்க வேண்டும் என் எண்ணம் குறைந்து போனது எனலாம் . இப்போது கண்ணுக்கு கண்ணாடி
போட்டுக் கொள்வது பெருமைகுரியதாகும் என எண்ணுகின்றனர் . இது பிழையான ஓன்று . பொதுவாக குறைபாடு நோய் அல்ல நோயை உருவாக்கிக் கொள்ளுகின்றனர் .

கண்குறைபாடு ஏன் ?

கண்களை பொறுத்தவரை இப்போது பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து போய்விட்டது எனலாம் . தலையில் எண்ணெய் வைக்காமை ,அதிகாலையில் எழுந்திருக்கமை, முறையில்லாத உணவு பழக்கம் ,எண்ணெய்தேய்த்து குளிக்கமை, இப்படி பல காரணங்களை அடுக்கலாம் . கண்கள் , அதாவது கண் , இதயம் , சிநீரகம் , இவை ஒவ்வொன்றிற்கும் தொடர்பு உள்ளதை நாம் அறிவோம் . இந்த அரச உறுப்புகள் அவளவு எளிதில் கெடுவதில்லை . கெட்டுப்போனால் அவ்வளவு எளிதில் குணப்படுத்த முடிவதில்லை .


கண்களை பாதுகாத்தல்

௧. கண்களை பாதுகாக்கும் முருங்கை , சிறுகீரை , பொன்னாங்கண்ணி , போன்ற முலிகைகளை முறைப்படி மருந்தாக அல்லாமல் உணவாக உண்ணுதல் .

௨. அதிகாலை துயில் எழுதல் .

௩. கண்களுக்கான பயிற்சிகள் செய்தல் . தண்ணீரில் கண்களை முழுகவைத்து தண்ணீரில் கண்களை நினைத்து கண்களை மேலும் கீழும் அசைத்தல் .

௪. நேராக நின்றுகொண்டு தலையை அசைக்காமல் கண்களை சுற்றுதல் இதையே வலம் இருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் மூன்று சுற்றுகள் சுற்றுதல் .

௫. கேரட் , நெய் அளவுடன் சேர்த்தல்

௬. திரிபலா எண்ணெய் தலைக்கு தேய்த்து தலைக்குளித்தல் .
போன்றவற்றை முறைப்படி செய்யலாம்

கண்கள் கெடுவதர்க்கானகாரணிகள்

அதிகலையேல் நாளும் எழுந்திருக்காமையால் நன்கு ஆதவன் உதித்தபின் நாளும் எழுவதால் ஆதவனின் கதிர்கள் பட்டுப்பட்டு கண்கள் கெடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது . மிகுதியாக காரம் மிகுதியாக புளி சேர்த்தல் (புலி எப்போதும் மனிதர்களுக்கு நன்மையே செய்யும் அது எந்த புலியாக இருந்தாலும் ) அளவிற்கதிகமாக உப்பு சேர்த்தல் மயக்கப் பொருட்கள் (மது , புகை ) கண்களை கெடுக்கும் என்கிறார்கள் . இவற்றை தவிர்க்கலாம் .


கண்படலத்திர்க்கு மருந்து

முன்னாள் அறமன்ற நீதிபதி பலராமையா சித்தமருத்துவம் செய்தவர் அக்காலத்தில் வைத்தியரத்தினம் பட்டம் பெற்றவர் . அவரின் நுலில் இருந்து கண் படலத்திற்கும் (cataract) என்ற கண்மரைத்தல் போன்ற நோய் களுக்கு இம்மருந்தை பயன்படுத்தலாம் .

தூய்மையான தேன் இருநுற்றைமபது மிலி
தூய்மையான நெய் முந் நூறு மிலி
தேனையும் நெய்யையும் ஒரு ஏனத்தில் விட்டு மற்றொரு ஏனத்தில் தண்ணீர் விட்டு அதன்மீது மருந்துகள் உள்ள ஏனத்தை வைத்து நாளும் ஒரு தூய்மையான தென்னை ஈர்க்கில் கலக்கி வரவேண்டும் . தண்ணீர் நாளும் மாற்றவேண்டும் இதை ஆதவன் (சூரியன் ) வெம்மையில் வைக்கவேண்டும் . இப்படிசெய்ய மருந்து ஒருகட்டத்தில் மெழுகு மதிரியகிவிடும் இதை தூய்மையான புட்டியில் அடைத்து நாளும் கண்களில் தீட்டிவர கண்படலம் மாறும் அறுவை செய்ய தேவை இல்லை. பயன்படுத்துவோம் .
சித்தமருத்துவம் காப்போம் நோய்வென்று நீடுவழ்வோம்


அடுத்து : நீரிழிவு நோயா நீக்க முடியுமா ?More than a Blog Aggregator

நவம்பர் 14, 2010

சித்தமருத்துவக்கலை உலக நலன்


சித்தமருத்துவக்கலை உலக நலன்
இது ...
தமிழ் மண்ணின் கலை ...
சித்த மருத்துவக்கலை...
பழமையான கலை


இன்றைக்கும்
நிற்கும் கலை ...
அறிவியலில் உதித்த கலை ...
எல்லா நாட்டுக்கும்
ஏற்ற கலை.

இதை
நாம் பாராட்டுகளுக்காக
படைக்கவில்லை...
இது ...
வக்கலை மறுத்து

உலகோர் நோயின்றி வாழவே ...
எம்கனவை
சிறகாய் விரித்து ...
விண்ணில் பறக்கிறோம் ...


ஏற்ப்பவர் ஏற்க்கட்டும் ...
நோய் வென்று வாழட்டும் .

பாரட்டுகளைவிட ...
குறைகளை உண்மையாக
பட்டியலிடுவதையே
விழைகிறோம் .

உண்மையாக ...
குறைகளை சுட்டிக்காட்டும்
போதுதான் ...
மனிதம் சொழுமையடைய முடியும்
என்பதை
அப்பட்டமாக நம்பித்தொலைக்கிறவன்.


காலம் கடந்துதும் ...
நிற்கும் ...
நம் சித்தமருத்துவம்
மருத்துவ மெய்மம் ...


அடுத்த தலைமுறைக்கும்
அதன் ஆற்றலோடு ...
கடத்தி ...
பதியமிட அழைக்கிறேன் ...


அறியாமையில் இருப்போர் ...
அறிவை ஏற்ப தில்லை ...

கேள்வி எழலாம் ...
வேள்விதான் இது ...


புரியும்படி சொன்னால்
புறக்கணிக்கவாசெய்வார்கள் ?


நாம் வெட்டியாகவா
பொழுதை கழிக்க
சொன்னோம் ...


விடியலைத்தேடி ...
ஏற்க்கதனே சொன்னோம் ...

நான் ...
வினையோ ...
வினையூக்கியோ ...
எதாகிலும் இருக்கட்டும் .
நம் மக்கள்
நோய் வென்று நீடு வாழட்டும் .



More than a Blog Aggregator

நவம்பர் 04, 2010

அந்த மூன்று நாட்கள் .


அந்த மூன்று நாட்கள் .
மாறிவரும்
சூழலில் நோய்கள் எளிமையாகிப் போனது . இந்த நோய்கள்
எல்லாமே இயல்பானவை என எண்ணம் கொண்டு நோயை சுமப்பதை இனிமையாக கருதுகின்றார்கள் போலும் . இன்று நல்ல மனிதர்கள் அருகிப்போனத்தால் கல்லிடம் முறையிடும் வழக்கம் அதிகரித்துப் போனது .
அறிவுத்துறையினர் தம் வழித்தடத்தை மாற்றிக்கொண்டு விட்ட படியால் பூசையடிகள் பூரித்துப் போகிறனர் .

முறை இல்லாத உணவுகள் பல நோய்களை உண்டக்குக்வது போலவே பெண்களின் தாய்மையின் சுமையும் கூட்டி பெண்மையை படாத படு படுத்துகிறது . பழங்காலங்களில் தாய்மையை வளர்க்க பெரிதும் உணவுமுறைகள் காரணமாக இருந்தது . அதனால் தான் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றும் நூறாண்டு நலமேடு வாழ்ந்தனர் . இன்று அப்படி எல்லாம் இருக்கவில்லை . மிகவும் இளைய வயதில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் படாத பாடுபடுவதனை தாய்கள் வேதனைப்பட்டு அதை தவிர்க்க முடியாது என்று குழந்தைகளை ஆற்றுப் படுத்துகின்றனர் .
அந்தமூன்று நாட்கள் சுமையானவைதனா ?

பழங்கால உணவுமுறை இரசாயன கலப்பில்லாத இயற்கையோடு இணைந்த உணவுமுறைகள் . இன்றைய பரப்பான வாழ்க்கை முறை கட்டுப்பாடில்லாத உணவு முறையினை கொண்டதாக இருக்கிறது . அளவிற்கதிகமான . மென் குடிநீர் , குளம்பி(காபி ) கோக் , கலந்த உணவுகள் அளவிற்கு அதிகமான கொழுப்பு உணவுகள் . உணர்வுகளை கிளர்ந்து எழச்செய்யும் படக்கசிகள் போன்றவை நோவை வளர்க்கிறது . இது பெண்களுக்கு தெரிவதில்லை கடப்பாறையை முழுங்கிவிட்டு சுக்கு குடிநீர் குடிப்பதைபோல ஊசி போட்டு நோவை பெரிதாக்கு கின்றனர் .
குழந்தை களுக்கு இளமையிலேயே எலும்புகளை வளப்படுத்தும் உணவுகளை கொடுக்கவேண்டும் . எள், வெல்லம், உளுந்து , போன்றவை கொடுக்க வேண்டும் . வாரம் இரண்டுநாள் எண்ணெய்க் குளியல் . செய்யவேண்டும் .பரபரப்பையும் அமைதி இன்மையும் நீக்கிக் கொண்டு எரியோம்ம்பல் (ஆசனபயிற்சி ) செய்து உடலையும் மனதையும் அமைதியாக்கிக் கொள்ள வேண்டும் . முறையில்லாத உணவுகளை விட்டு ஒழித்து கீரைகள் , காய்கள் , பழங்கள் அதிகமாக எடுக்க வேண்டும் .
வீட்டு விலக்கு நாட்களில் கடுமையான வலி சோர்வு தலைவலி போன்றவை இருப்பின் இயற்கையான முறையான உணவுகளை எடுக்கவேண்டும் . கடுமையான வலி இருப்பின் முருங்கைகீரை சாறு 25மிலி சிறிது பெருங்காயம் போட்டு தேவையான அளவு உப்பு கலந்து குடிக்க வலி நிற்கும் . தொடர்ந்து வலி இருப்பவர்கள் வீட்டு விலக்கு வரும்மூன்று நாட்களுக்குமுன்பே நாளும் மேற்கண்ட மருந்தை அருந்த நல்ல பலனை காணலாம் ....
அடுத்து


முறையற்ற வீட்டு விலக்கு ....
அதிக இரத்தப்போக்கு .....
மேலும் வீட்டு விலக்கு சிக்கல்கள் ......
உங்களின் கேள்வி கணைகளோடு ....

தொடர்வோமா ......More than a Blog Aggregator

நவம்பர் 02, 2010

அச்சப்பட்டே சாவானேன்......
வரட்டுத்தனமான கோட்பாடுகளையும் குருட்டுத்தனமான சிந்தனைகளையும்
கொண்டிருப்பதையும் அதை மக்கள் மீது திணிப்பதையும் . விரும்பாதவன் நான் .
எதாவது ஒரு கருத்து பகிரப்பட்டால் அது இந்த மக்கள் கூட்டத்திற்கு நன்மையே செய்வதாக இருக்கவேண்டும் என எண்ணுபவன் நாம் .
நண்பர்கள் இருவர் பேசிக்கொள்வதை தற்செயலாக கேட்க நேர்ந்தது அது மருத்துவம் தொடர்பாக இருக்கவே நாம் காதுகளை தீட்டிக் கொண்டோம் .நண்பர்களில் ஒருவருக்கு சாதாரண கட்டி அதாவது கொழுப்புக் கட்டி என்று மருத்துவ உலகம் அதை அழைக்கும் அந்த கட்டி வந்த நண்பர் ஒருமருத்துவரிடம்
சென்று வுள்ளார் மருத்துவரோ அச்சப்பட தேவையில்லை என சிலமருந்துகளை கொடுத்து அனுப்பியுள்ளார் .ஆங்கிலமருத்துவர்களில் உள்ள நேர்மையான மருத்துவர் போலும் எதாவது சிக்கல் இருந்தாலும் வளர்ச்சி இருந்தாலும் வர சொல்லி அனுப்பி வுள்ளார் . ஆனால் வீட்டிற்கு வந்ததும் தான் அவருக்கு சிக்கலே தொடங்கியது எனலாம் . வீட்டிற்கு வந்ததும் பக்கத்து வீடு ,எதிர்வீடு , தெரிந்தவர்கள் என அவரரவர்களுக்கு தோன்றியதெல்லாம் சொல்லி குழப்பியுள்ளனர் . இவரும்குழம்பித்தான் போனாராம் . அதைத்தான் நண்பர்களிடம் கதைத்துக்கொண்டிருகிறார் .
ஒரு அறிஞரிடம் மற்றொருவர் சொன்னாரம் ஐயா இவர் ஒரு செய்தியை மூன்று கோணத்தில் சிந்திப்பார் அவரிடம் பேசுங்கள் என்றதற்கு முதல் அறிஞர் சொன்னாரம் தேவையில்லை ஏன் என்றால் நான் குழப்ப வாதிகளிடம் பேசுவதில்லை என்றாராம் . எதற்க்கு இதை இங்கு சொல்கிறேன் என்றால் ஒரு செய்தியை இரண்டு கோணத்தில் சிந்திப்பது தான் சிறந்தது . ஒன்று நன்மை மற்றது தீமை தேவையில்லாமல் மூன்றாவது கோணத்தில் சிந்திப்பதால் மனிதன் குழப்ப வதியவன் என்பது உண்மையன்றோ ?
நண்பர்களில் ஒருவருக்கு கட்டிவந்தது ஒன்று . மருத்துவரிடம் சென்று மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் இல்லைஎன்றால் அறுவை சிகிச்சை செய்து கொண்டுவிட்டு போகவேண்டியதுதானே ? அதைவிட்டு தானும் குழம்ம்பி மற்றவர்களையும் குழப்பி என்ன அறியாமை அறுவை செய்து கொள்ள சொன்னாரம் ஒருமருத்துவர் அவருக்கு தமிழே தெரியாதாம். மருந்து தந்து அச்சப்படதேவை இல்லை என்ற தமிழ் பேசும் மருத்துவர் மீது நம்பிக்கை இல்லை காரணம் அவர் எளிமையானவர் அதே சமயம் நேர்மையானவர் . அதுதான் அறியாமையில் உள்ளவர்களுக்கு தெரியாதே .
எந்த நோய்க்கும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்பது சித்தமருத்துவம் . முறையான மருந்து உண்டுவந்தால் எல்லா நோய்களையும் நீக்கிக் கொள்லாம். மருத்துவம் தொடர்பாக செல்லும் முன்பாக எந்த மருத்துவம் சிறந்தது எந்தமருத்துவர் சிறந்தவர் என்பதை எல்லா வகையிலும் பேசி சிந்தித்து அதில் உள்ள நன்மை தீமை எல்லாவற்றையும் ஆய்வு செய்க .
மற்றவர்களின் வீண் தலையீடு களை அனுமதிக்க வேண்டாம் . அதேபோல
மருந்தளுனரை மருத்துவராக ஆக்கும் பழக்கமும் காணப்படுகிறது .
எந்தநோயும் நோய் அல்ல நோய்களுக்கான தொடக்கம் . கண்டபடி தானே மருந்து வங்கி நோயை பெரிதாக்கிக் கொள்வதையும் தவிர்க்கலாம் . சாதாரண எந்த வலியும் இல்லாத வளர்ச்சியும் இல்லாத கட்டிகளை கண்டு அச்சப்படுவனேன் .
சித்த மருத்துவம் காப்போம் நோய் வென்று நீடு வாழ்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...