செப்டம்பர் 20, 2010

வாழையின் மருத்துவ குணங்கள்

நம்மில்  பலராலும்  விரும்பி  உண்ணப்படும்  வாழையின்  பொருட்கள் எல்லாமே  மருத்துவ  குணம்  நிறைந்து  உள்ளது  என்பதை  நாம் அறிவோமா ?  வாழை பொருட்களான  பிஞ்சு , காய் , தண்டு ,இலை  , பட்டை, என  அனைத்து  பொருள்களுமே  மருத்துவ  குணம் நிறைந்தவை .  வாழையின்  அனைத்து  பொருட்  களிலும்  நோய்  நீக்கும்  தன்மை  உள்ளன .
வாழைப்பழம்   
     பொதுவாக  எந்தப்  பழங்களையும்  உணவுக்கு  முன்தான்  உண்ணவேண்டும் 
அப்படி எடுத்துக்  கொண்டால்தான்  அதில் உள்ள  முழுமையான  சத்துகள்  நமக்கு  கிடைக்கும் ..  மேலும்  வாழைப்பழம்  உடல்  சூட்டை தணிக்கும் .  மலசிக்கலை தீர்க்கும் .
குருதியை  உண்டாக்கும்  ஆற்றலும்  உண்டு . இது உடலை  வளர்க்கும்  தன்மையும்  உண்டு . இதில்    " எ " சத்து  நிறைந்து  உள்ளதை  நாம்  அறிவோம் .   இதனால்  பல், கண் ,
போன்ற  உறுப்புகளுக்கு  சக்தியை  தரும் . நேந்திரம்  பழம்  நல்ல  பசியுண்டக்கி  என்பதால்  பசி  குறைந்தவர்கள்  நாளும்  மேற்கண்ட்ட  பழத்தை   உண்டுவர  நல்ல பலனை  காணலாம் . வாழை  பழத்தை   பொறுத்தவரை  கோழையை  உண்டாக்கும்
என்பதால்  கோழை  நிறைந்தவர்கள்  உண்பதை  குறைக்கலாம் .
   
வாழை  பழத்தில்  அடங்கிய  சத்துகள் .
ஈரம்  61 .4 % ,  புரதம்  1 .3 % கொழுப்பு  0 .2 % தாது   0 .7 % சர்க்கரை  பொருட்கள்  36 .4 %
சுண்ணாம்பு 0 . 01 % என  கண்டறியப்பட்டுள்ளது .    
வாழைப்பூ   
    பழத்தை  போலவே  பூவிலும்     மருத்துவ குணங்கள்  நிறைந்துள்ளது .  வெப்பம்
நீங்கும் , காசம், கைகள் எரிச்சல்  மூலநோய் , நீரிழிவு , வயிட்ற்று  கடுப்பு ,  வெட்டைநோய் ,  போன்றவைகள்  நீங்கும் , ஆண்மை பெருகும்  .சீதக்  கழிச்சல்  காலங்களில்  பிட்டை  போல்  அவித்து  சாரை கறிவேப்பிலை  சேர்த்து  எருமை  தயிரில்
கொடுக்க  நல்ல பலனை  காணலாம் .
      பெண்களுக்கு  வாழைப்பூ மிகவும்  நல்லது  பெரும்பாடு காலங்களில்  அதிகமாக  பயன் படுத்த    நல்ல பலனை காணலாம் .

வாழைப்பிஞ்சு 
         துவர்ப்பு  சுவை  உடைய  வாழை  பிஞ்சு  வயிற்று  புண்ணை  நீக்கும் .குருதி கடுப்பு
உள்ள மூல நோய்   நீரிழிவு   போன்றவை    குணமாகும் .
 வாழைக்காய் .
      நீரிழிவு  உள்ளவர்கள்  அதிகம்  சேர்க்கலாம் . நோய் கட்டுப்படும்  வாயு  தொந்தரவு 
உள்ளவர்கள்  குறைத்து  உண்ணலாம் . பூப்பெய்திய  பெண்கள்  வாழை  காய் தோல்  நீக்கி  உண்ண  குருதி பெருக்கு கட்டுப்படும் .
 
வாழைஇலை 

               வாழைஇலையில்  உண்பதை  அனைவரும்  விரும்புவர்   இதனால்  மென்மை உணர்வுகள்  மிகும்  உடல் சூட்டை  தனிக்கும்  . கோப குணம் கொண்டவர்கள்  தொடர்ந்து   இலையில்  உண்ண  கோபம் குறையும் . தீசுட்ட  புண்ணில்  இலையை   வதக்கி  கட்டலாம்  வாழை  இலையில்  படுக்கவைக்கலம் .


வாழைத்தண்டு
       உடலில்  உள்ள கொழுப்பை  குறைக்க  நினைப்பவர்கள்  வாழைத்தண்டை  ஒன்று  விட்டு ஒருநாள்  உண்ண  நல்லபலனை  காணலாம் . நீரடைப்பு , நீர்  எரிச்சல்  சிறுநீரககள்
போன்றவை  நீங்கும் .     ஆக  எளிதில்  கிடைக்கும்  வாழையை  பயன்படுத்தி  நோய்  வெல்வோம் . சித்தமருத்துவம்  காப்போம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...