பிப்ரவரி 27, 2011

சரிவிகித உணவும் நோய்கள் இல்லா வாழ்க்கையும்








சரிவிகித உணவும் நோய்கள் இல்லா வாழ்க்கையும்
(Balanced diet )
இப்போதைய விரைவு
வாழ்க்கை முறையில் உடலுக்கு தேவையானதை முறையாக தேடி சேமித்து உண்ணும் வழக்கம் இருப்பதில்லை . அதற்க்கு நேரமும் வாய்ப்பதில்லை .முறையான அறிவிகித உணவு என்பது என்ன?எந்த விழுக்காட்டில் எந்த உணவை எப்படி உண்பது ? இதைப்பற்றி கதைப்பதே இந்த இடுகை .

சர்க்கரை சத்து

இது
மாவு சத்து என்றும் ,சர்க்கரை சத்து என்றும் (carbohydraret ) என்றும் அழைக்கப்படும் .இந்த உணவே நமதுபெரும் பான்மையான உணவு எனலாம் .உடலுக்கு தேவையான அதிவிரைவான சக்தியை அது தருகிறது என்பதால் இந்த உணவை தேடி எடுத்துக்கொண்டான்மனிதன் .இந்த சக்தி இனிப்பில் இருந்து மட்டுமல்லாமல் தவசங்கள் (தாணியம்) கிழங்கு வகைகள் போன்றவற்றில்இருந்தும் பெறப்படுகிறது . இந்த உணவுகள் இரைப்பையில் சென்ற உடன் நொதிக்கப்பட்டு (enzymes ) உடைக்கப்பட்டு குளுக்கோசாகமாற்றப்பட்டு மனித பொறி (இயந்திரம் )சிறப்பாக இயங்க எரியூட்ட படுகிறது .இந்த குளுக்கோசு உயிர்அணுக்களில் விரைந்து புகுந்து சக்தியாகமாறிமனிதத்தை இயக்குகிறது .இதனால்தான் உடலுக்கு (நோயிலிருக்கும்போது) விரைந்து சக்திதர குளுக்கோசு தரப்படுகிறது ஒருகிராம் சர்க்கரை சக்தியில் இருந்து நான்கு கலோரிவெப்பம் கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர் .ஒருகிரம்தன்நீரை ஒருடிகிரி செல்சியசு அளவு சூடு படுத்த தேவைப்படும் வெப்பமே ஒருகலோரி எனப்படும் .சர்க்கரையைவிட வெல்லமே சிறந்த உணவு எனலாம் .நூறு கிராமில் (சர்க்கரை )புரதம் 0 .1 கி , கால்சியம் 12 மிகி பசுபரசு 1 மிலி
(வெல்லம்) புரதம் 0 .4 கால்சியம் 80 மிகி பாசுபரசு 40 மிகி தமிழர்களின் உணவு முறை எவ்வளவு சிறந்தது என்பது தெரிகிறதல்லவா ?

கொழுப்பு சத்து


இது நிலைத்திணை (தாவர),மாமிச , எண்ணைகளில் ,இருந்து கிடைக்கிறது .கொழுப்பு சத்துக்களில் கார்பன் ,ஹைட்ரஜன் , உயிர்வளி (ஆக்சிஜன் ),ஆகிய மூன்றும் , பாசுபரசு ,கந்தகம்,நைட்ரஜன் ,போன்ற வையும் காணப்படும். உணவுமுறைகளில் (FAT )எனப்படும் கொழுப்பே மிகையாக உண்ணப்படுகிறது. ஒருகிராம் கொழுப்பில் இருந்து ஒன்பது கலோரி சக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர் .உடலுக்கு சக்தி வெளியில் இருந்து கிடைக்காத போது சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் கொழுப்பில் இருந்து எடுத்து கொள்ளபடுகிறது .

கொழுப்பு நிறைந்த உணவுகள் ஊண்,(மாமிசம் )தேங்காய்,எள்,நிலக்கடலை , பனை,சூரியகாந்தி, கடுகு, சோயா,ஆமணக்கு,வெண்ணை ,நெய்,அரிசிதவிடு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.

புரதம்

சர்க்கரையும் ,கொழுப்பும் சக்தியை தருகிறது அனால் புரதம் தான் உடலின் வளர்ச்சிக்கும் ,உடலின் வளர்ச்சி நிலைக்கவும் தேவைப்படுகிறது.பின்தங்கிய (கொள்ளையடித்து ஒருசிலரே வைத்து கொள்ளும் நம் நாட்டைப்போல்)இடங்களில் இந்த புரத பற்றாக்குறை நோய் பெரிதும் காணப்படுகிறது .இந்த புரத பற்றாக்குறை காரணமாகவே பெரிதும் நோய் காணப்படுகிறது . கோடிகணக்கான உயிர் அணுக்களினால்ஆனது இந்த உடல் இந்த உயிர் அணுக்களின் அமைப்பில் மூகாமையனது இந்த புரதமே .ஒருகிராம் புரத்தத்தில் நான்கு கலோரி வெப்பசக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர். அரிசியில் உள்ள புரதத்தில் லைசின் (Lysine ) குறைந்தே இருந்தாலும் பருப்புவகைகளில் மித்தியோனின் (methionine )குறைந்தே இருந்தாலும் இந்தஇரு வகைகள் சேர்த்து உண்ணுவதால் சக்தி ஈடு செய்யபடுவதாக கூறுகின்றனர் .
நிலைத்திணை (தாவர )உணவு உண்ணுபவர்கள் பலவித தவச (தானிய) வகைகள் , கனிவகைகள்
கீரைகள் ,பால் போன்றவைகள் சேர்க்கபடுவதால் அவற்றினின்று தரமான புரதம் கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர் .
புரத உணவுகள் மொச்சை , குதிரை மசால்,பாசிபயறு , வேர்கடலை , பருத்தி சோளம் , போன்ற வற்றில் தரமான புரதம் கிடைக்கிறது என்கிறனர்

நார்சத்து
இந்த நார் சத்தை பொறுத்தவரை உடலுக்கு எந்த சக்தியையும் கொடுப்பதில்லை என்றாலும் மிகையாக உண்ணப்படும்
மாவு சத்து ஒட்டும் தன்மை கொண்டதாகையால் ஈற்றுணவு (மலம் )வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும் என்பதாலும் மிகுதியான கொழுப்பை வெளியேற்றும் என்பதால் நார் சத்து தேவையாகிறது . எனவே நார் சத்து நிறைந்த உணவு எடுக்க வேண்டியதும் தேவையாகிறது.

உயிர் சத்துகள்

இவைகள் உடலின் சீரான வளர் ,சிதை மாற்றத்திற்கு துணை செய்கிறது . இது நம் உணவில் சேர்க்கவேண்டிய அங்கக வேதிபொருலாகும். இந்த பொருட்கள் உணவில் குறைந்தால் எந்த பொருள் பற்றாக்குறை உண்டாகியதோ அதற்க்கு ஏற்ற உணவு பற்றாக்குறை நோய் உண்டாகிறது .
வைட்டமின் பி 1 இது கைகுத்தல் அரிசி , மாமிசம் போன்ற வற்றில் உள்ளது .

வைட்டமின் பி 2 நிலைத்திணை (தாவர )உணவில் காய் ,கனி ,கீரைகள்,நிறைந்து உள்ளது.
வைட்டமின் பி 12 இது மாமிசத்தில் ஈரல் பகுதியில் உள்ளதாக கணக்கிட்டு உள்ளனர் . மரக்கறியில் குறைந்தே காணப்படுகிறது என்கிறனர்.

போலிக் அமிலம் (Folic acid )இலத்தீன மொழியில் போலிக் என்றல் இலை என்று பொருள் தாவர உணவில் இது மிகையாக காணப்படுகிறது என்கிறனர் . இது நாளும் 30 முதல் 400 மைகிரோகிரம் அளவு எடுக்க வேண்டும் என்கிறனர்
.
வைட்டமின் சி இது எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த பழங்களான அரஞ்சு ,சாத்துக்குடி, போன்றவற்றிலும் ,தக்காளி பச்சைமிளகு ,கோசு, போன்றவைகளில் காணப்படுகிறது இருப்பினும் இவைகள் உணவுக்காக வேகவைக்கும் போது வெப்பத்தில் அழிந்து போகிறது . அனால் நெல்லி கையில் இருந்து கிடைக்கும் இச்சத்து எவ் வகையிலும் கெடுவதில்லை.
இவைகள் நாளும் 35 மிகி முதல் 60 மிகி வரையில் உணவில் சேரும்படி பார்த்து கொள்ள வேண்டும்
.
வைட்டமின் A இது பால் ,முட்டை , மீன் கல்லீரல் போன்றவற்றில் இருந்து கிடக்கிறது

வைட்டமின் D வெய்யல் படாமலே இருக்கும் மனிதர்களிடம் மிகையாக குறைந்து காணப்படுகிறது . இது மாலை வெய்யிலில் இருந்து கிடைகிறது .

வைட்டமின் E இது கோதுமை , அரிசி தவிட்டு எண்ணெய் போன்ற வற்றில் உள்ளது .

வைட்டமின் K தாவர எண்ணெய் ,காய், கொதுமைதவிடு போன்றவற்றில் உள்ளது
.
இந்த சத்துகள் நிறைந்த உணவுகளை முறைப்படி எடுத்து கொண்டாலே நோய்களில் இருந்து விடுபட முடியும் முயல்வோம்

குறிப்பு : சராசரியாக நம் நாட்டை பொறுத்தவரை கடுமையான உழைப்பாளிகள் என்பதால் அவர்களுக்கு ஏற்ற உணவுமுறைகளை கூறுகிறோம் .

நாளும் கலோரிகள் தேவை 3900

புரதம் 55 கிராம் , கால்சியம் 5 மிகி , இரும்பு 20 மிகி , வைட்டமின் A 750 மைக்ரோ கிராம் , தயமின் 1 .2 மிகி ,ரைபோ பிளேன் 1 .3
மிகி , நிகோடின் 16 மிகி , C 50 மிகி , போலிக் 100 மைக்ரோ கிராம் ,B 12 1 மைக்ரோகிராம் ,வைட்டமின் D 200 மைக்ரோ கிராம் .

தமிழர் கலைகளை காப்போம் நோய் வென்று நீடு வாழ்வோம் .
More than a Blog Aggregator

பிப்ரவரி 21, 2011

சுய இன்பம் சரியா தவறா?


சுய இன்பம் சரியா தவறா?
( MASTERBATION)

இன்றைய இளைஞ்சர்களுக்கு பாலியல் தொடர்பான சிக்கல்கள் மட்டுமல்லாது இது தொடர்பான பல்வேறு தவறான கற்பிதங்களும் பெரிதும் இருப்பதாக அறியலாகிறது . பல்வேறு இளைஞ்சர்கள் சுய இன்பம் சரியா தவறா என கேட்கின்றனர் . இந்த எண்ணம் அவர்களுக்கு எங்ஙனம் தோற்றம் கொள்ளுகிறது எங்கோ தவறாக வழி நடத்தப்படுவதினால் தானே
நானே வீராதி வீரன் என்று கூறிக்கொள்ளும் வைத்திய சிகாமணிகள் கொஞ்சம் கூட சிந்திக்கும் திறன் இல்லாமல் வெறுமனே ஏட்டு ,மனப்பாட
முறை கல்வியை கற்றுவிட்டு சுய இன்பம் தவறு இல்லை என போதிக்கிறனர் .அப்பாவிகளான இளையோர்கள் வழிதெரியாமல் நோயாளி யாகின்றனர் .

எது அறிவு அறிவியல்

எந்த ஒரு செயலையும் நுட்பமாக ஆய்வு நோக்கு இல்லாமல்குருட்டுத்தனமாக எதிர்க் கின்றவ்ர்களும் முண்டு ,ஏற்க் கின்றவர்களும் முண்டு.இந்த இரண்டும் பெரும் பிழையே. கண்மூடித்தனமாக போற்றுதல் அல்லது தூற்றுதல் நோயின் அறிகுறி என்பார்கள் அறிஞ்சர்கள். அது போல எந்த ஒன்றையும் அறிவியல் நோக்கில் ஆய்ந்து இந்த குமுகத்திற்கு அளிக்க வேண்டும் , முறையில்லாமல் இந்த குமுகத்தை முடமாக்க நினைக்க கூடாது .

இயற்க்கை வழங்கும் கொடை உயிரிகளின் மறு உற்பத்தி

இயற்கையின் படைப்பு தன் கால்வழியை (சந்ததியை ) பெருக்குவதுதானே இதை இயற்கையோடு இணைத்து வைத்தால்தான் முறையாக உயிரிகள் பெருக்கமடையும் என்றெண்ணிய இயற்க்கை அமைப்பே இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது. அனால் வலுக்கட்டாயமாக பாலுறுப்புகளை தூண்டிவிட்டு இன்பம் காணுவது இயற்க்கைக்கு முரணானதும் பிழையானதும் ஆகாத? என் இப்படி மஞ்சள் ஏடுகளைப்போல் மட்ட ரகமான கருத்துகளை இளையோரின் மீது திணிக்கபடுகிறது என்பது விளங்காமலில்லை. நோயாளியாக்கதனே ? அப்போது தானே பணப்பை நிரம்பி வழியும் .

உண்மையின் குரல் ஈன குரலா
இன்று உண்மையின் குரல் ஈன குரலாகவே எல்லோருக்கும் கேட்கிறது .
உண்மையை விற்ப்பது போராட்டமாக இருப்பதாக காண முடிகிறது . பெரும்பான்மை மக்கள் போலித்ததின் பின்னர் அணியமாகின்றனர் . இதன் பின்னர் கவர்ந்திழுக்கபடும் மக்கள் விட்டில் பூசிகளாக விழுந்து மடிகின்றனர் .

தன்னின்பத்தில் (சுய இன்பத்தில் ) எந்த கெடும் நிகழுவதில்லை அந்த செய்கையில் எந்த பிழையும் இல்லை . என்று பிழையாக போதிக்கப்படுகிறது . விந்துப் பொருள் என்பது ஈற்றுணவு (மலம் ) ,சிறுநீர்,எச்சில் போன்றது என தவறான வழிகாட்டுதல்செய்யப்படுகிறது கற்பிக்கப்படுகிறது
எச்சில் உமிழ,உமிழ வற்றிபாய் விடுமா என்ன? என்று கேட்கிறார்களாம் இது மேம்போக்காக பார்த்தல் பிழை இல்லாமல் படலாம். தொடர்ந்து வலுக்கட்டாயமாக எச்சிலை துப்பி கொண்டே இருந்து பார்க்கட்டும் எச்சில் வற்றி போய் மனிதனே நோயில் விழுந்து போவான். பாலுறுப்பு களையும் இப்படி வலுக்கட்டாயமாக தூண்டி விட்டு இன்பம் காணுவது மனிதனை நோயாளி யாக்குமே யன்றி வேறென்ன நிகழும்?

உளவியல் ரீதியில் ...

இப்படி சுய இன்பத்தில் ஈடுபடுகின்றவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கபடுவதென்னவோ உண்மை . குற்ற வுணர்வு தோன்றி தன்னம்பிக்கை இழந்து போவர்கள் இப்படி பல சிக்கல் களுக்கு ஆளாகின்றனர் இதன் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட வர்கள் உடலில் சக்தி குறைந்து போவதாகவும் கண்கள் குழிவிழுந்து பல்வேறு நோய்களால் பாதிக்க படுவதாகவும் கூறு கின்றனர்.பாதிப்படைந்த வர்கள் .

மனிதனே விலங்குகளாகி

இப்போது பலரிடம் கதைக்கும் போது மனிதன் விலங்குகளாகி வருகிறான் என்கின்றனர் . எந்த விலங்கு தன்னை யொத்த விலங்கு களின் பாலியல் தொடர்பான படங்களை பார்த்து நேரத்தை செலவிடுகிறது? தெரியவில்லை அதேபோல மனிதனைத் தவிர எந்த விளங்கும் பாலியல் இன்பத்தில் முகிழ்த்து கிடைப்பதில்லை . பாலுறவு நேரம் முடிந்ததும் அதன் தேவை தீனியை தேட தொடங்கிவிடும் .
முறையில்லாத வகையில் பெறப்படும் அறிவினால் பாலியல் தெடர்பான சிந்தனையில் நேரத்தை செலவிட்டு உடலையும் சூடேற்றிகொண்டு உலவாற்றலையும் கெடுத்து கொள்ளு கின்றனர் .

முறை இல்லது அளவிறந்து விந்து இழப்பாகி பின்னர் முறையான திருமண வாழ்க்கையில் துன்பத்தை நுகருகிறனர் . இப்படி பட்டோரின் குழந்தைகளும் சக்தி குறைந்தவர்களாக இருக்கின்றனர் . என்கிறது ஒரு புள்ளி விவரம்.
ஆக இத்தகு செயலைசெய்கின்றவர் ஆண் , அல்லது பெண் யாராக இருந்தாலும் உடல் கெடும் என்பதில் எள் முனையளவும் ஐயம் வேண்டாம்

இந்த பழக்கமுள்ளவர்கள்

நாளும் எரியோம்பல் (யோகாசனம் ) செய்க.
குளிர்ந்த நீரில் குளிக்க செய்க.
எள் நெய்குளியல் செய்க.
பாலியல் எண்ணம் கிளர்ந்தெழசெய்யும் எண்ணங்களை நீக்குக
தனிமையை தவிர்க்க செய்க.
செய்யும் தொழிலில் முழுமையான கவனம் செலுத்துக.
எந்த ஒன்றையும் பிழையானது என தெரிந்த பின்னர் அதை விலக்க
முயல்க..
வெற்றி உமதே
தமிழ கலைகளை காப்போம் தமிழன் வெற்றிகொள்ள துணைநிற்போம்.More than a Blog Aggregator

பிப்ரவரி 15, 2011

நகர மயமாதலும் பெருகும் உளவியல் நோய்களும்

Indli -   Tamil
நகர மயமாதலும் பெருகும் உளவியல் நோய்களும்

இன்றைய வாழ்க்கைமுறை பணத்தை மட்டுமே பெரிதென எண்ணுகிறது . வெறுமனே குறியீடாகி போன பணம் மனிதத்தை சிதைத்து சின்னாபின்னமாகி விடுகிறது . ஒரு மனிதனைப்பற்றிய கருத்தாக்கம் அவனின் மரபுவழிப்பட்ட அறிவைவிட அவன் சேர்த்து வைத்துள்ளபொருளின் அடிப்படையிலேயே இப்போது மதிப்பிடப்படுகிறது .இது மனிதன் நோயாளி ஆகி விட்டத்தின் காரணமாக எனலாம் . பணம் மட்டுமே எப்படி வாழ்க்கை ஆகிவிடமுடியும் ? பணம் மட்டுமே வாழ்க்கை என்பது அந்த கோட்டையின் நுழையும் முன்னம் மனித தன்மையை இழக்க செய்து மனிதத்தை பொறி (இயந்திரம் ) ஆக்கிவிடுகிறது . அதுமட்டும் அல்லாமல் மனிதநேயம் ,நேர்மை,இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்தல் என்பன வெல்லாம்
கேள்விக்குறியதாகவும்,கேலிக்குரியதகவும் ஆக்கிவிடுகிறது

இன்றைய உற்பத்திமுறை

இன்றைய உற்பத்திமுறை தேவைக்கானதாக இல்லாமல் சந்தைக்கனதாக இருப்பதால் அது மனிதனை பேயாட்டம் ஆடவைக்கிறது .

முதலில் வருகின்றவர்களுக்கே கிடக்கும் வாய்ப்புகள் அடிமையாக இருத்தல் கேள்விகேட்காமை போன்ற காரணங்களினால் பணி வாய்ப்பு நிலைக்கும் என்பதால் இவற்றின் தாக்கங்களினால் மனிதம் பொறியாகி கடுமையான உள தாக்கங்களினால் பொறி சீக்களியாகிறது . அதனால் தான் செயலாற்றும் திறனை இழந்து நீரிழிவு (சக்கரைநோய் ), இதய கோளாறுகள் ,சிறுநீரக செயலிழப்புகள் ,மூச்சிறைப்பு (ஆஸ்துமா ) போன்ற அந்த இயந்திரத்தின் கட்டமைப்பையே கெடுத்து வனாள் முழுவதும் அந்த பொறியை பழுது பார்க்கவே தன் முழு
திறனையும் செலவிடவேண்டிய தேவையை உருவாக்கிவிடுகிறது . இது அடுத்தகட்ட
மனிதத்தை சிதைக்கும் காலம் எனலாம்.

கல்விமுறை


இன்றைய கல்விமுறை
வாழ்க்கைக்கான கல்விமுறையாக இல்லாமல் அடிமையை உருவாக்குகிற கல்விமுறையாக இருப்பதனால் மனிதம், மனிதநேயம், என்ற அடித்தளத்தை ஆட்டம் கொள்ள செய்து மனித உறவுகளையே கேள்விக்குறியாக்குகிறது .
இந்த கல்விமுறை இளமையில் எல்லா உறவுகளும் ஆறாவது விரலாக மாறிவிட்டது . இதனால் வழிகாட்டிய தாத்தா,பாட்டி உறவுகள் சிதைந்து உறவுகள் குறித்த சிக்கலை இன்றைய இளைய தலைமுறை சந்தித்து வருகிறது . நம் பண்பாடு , உலகே வியந்து பார்க்கும் கூட்டு குடும்ப உறவுகள் வினாக்குறியாகிவிட்டது . இது நகரமயமாதல் என்ற போலித்தன வாழ்க்கையினால் ஆனதன்றி வேறல்ல

சுற்று சூழல் கேடு .

நகர்புறத்திலேயே எல்லா வாய்ப்புகளும் கிடைப்பதால் ஊர்ப்புறங்களை விட்டு பேருரை நோக்கி படைஎடுக்கின்றனர் .
பேரூர் தொழிற்சாலைகளின் கழிவைமட்டுமே தாங்கி நிற்ப்பதால்
நோய்களுக்கும் பஞ்சம் இல்லாமல் போய்விடுகிறது . இடநெருக்கடி காரணமாகவும் தொழிற்சாலைகள் , ஆலைபுகை,வாகனங்கள் புகை என சுற்று சூழல் கேடு அடைந்து
வளி(காற்று ) மண்டலம் மாசு அடைந்து தூய்மையான காற்று ,நீர்
என்பது எல்லாம் எட்டாத இடத்தில் சென்றுவிட்டது
தூய்மை இல்லாத நீர் சிறுநீரகம் மற்றும் பல்வேறு குடல் சம்ந்தமான நோய் களுக்கு காரணமாகிறது . மாசு அடைந்த வளி மூச்சு மண்டலம் நுரையீரல் கேடு அடைகிறது . முறையில்லாத உணவுகள் கட்டுப்பாடு இல்லாத உணவுகள்பதற்றம் ,பரபரப்பு போன்ற வற்றினால்
மனிதனின் உன்னதமான உடல் உறுப்புகள் கெடுகிறது
.
ஒளி ஒலி மாசுஅடைதல்

வளி ,வளிமண்டலம் க்டுவதினால் பல்வேறு நோய்கள் தோற்றம் கொள்ளுவது போலவே ஒலி ,மற்றும் ஓளி மாசு செய்யும் சேட்டைகள் எண்ணிலடங்கா .செவி மண்டல கோளாறுகள் பதற்றம் , எரிச்சல் , சினம் , போன்றகண்ணுக்கு தெரியாத உளவியல் நோய்கள் தோன்றி மனிதத்தை சிதைக்கியது .

இட நெருக்கடி

இட நெருக்கடி, இட பற்றாக்குறை போன்றவை பல்வேறு நோய்களை உண்டாக்கு கிறது .புதிய புதிய நோய்களை தோற்றம் கொள்ள செய்கிறது . பரிணாம வளர்சியடைய வைக்கிறது . குறிப்பாக மனிதம் இயற்கையாக வெளிப்படுத்த வேண்டிய ஈட்ருணவு(மலம் )சிறுநீர் ,குடல் காற்று , கண்ணீர் , போன்ற வற்றை வலிந்து அடக்குவதலும் , உடலில் தேங்குவதாலும் , அரச உறுப்புகள் எல்லாம் கெடுகிறது. பெண்கள் இவற்றான் அடையும் துன்பங்கள் எண்ணிலடகா
பலர் இதனால் விலை மதிப்பில்லாத வாழ்க்கையை மடித்து கொள்ளுகிறனர் . பூப்பு கால சிக்கல் அவர்களை படாத பாடு படுத்துகிறது .

புவி வெப்பம் அடைதல்

இது குறித்த எமது தனியான இடுகை உள்ளது காண்க .

புவி வெப்பம் அடைதல் முறையில்லாத உணவுகள் எப்போதும் கிளர்ச்சி யூட்டகூடிய சூழல் ,பாலியல் தொடர்பான சிந்தனை பாலியல் தொடர்பான காட்சிகளை பார்த்தல் போன்ற காரணங்களினால் பாலியல் தொடர்பான சிக்கல் களுக்கு ஆளாகின்றனர் .
இன்றைய புவி வெப்பம் அடைதல் காரணங்களினாலும் பாலியல் சிக்கல் தோன்றுகிறது .

பேருரை விரிவு படுத்த நீர் நிலைகள் கால்வாய்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டதாலும் மழை நீர் தேங்க வழி இன்மையாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாலும் கடல் நீர் நிலத்தினுள் புகுந்து நிலத்தையும் நீரையும் கெடுத்து விடுகிறது . மண்வளத்தை கேடு அடைய வைக்கிறது . ஆக மனித இனம் நகர மயமாக்கல் என்ற வறட்டு தனமான கொள்கையினால் இந்த புவிப்பந்தே வாழ இயலாத கோலமாகி வருகிறது .

அறிவுலகமே , ஆற்றல் மிகுந்தோரே, உலகினுக்கொல்லம் அறிவையும் ,வானியலையும் , அறிவியலையும் , மெய்மங்களையும் மருத்துவத்தையும் , மனித வாழ்வுக்கான இலக்கணத்தையும் கட்றுத் தந்த இனம் என்ற வகையில் மூத்த மொழிக்கு உரியவர்கள் என்பதாலும் இந்த குமுக மாற்றத்திற்கு திறவுகோலாக செய்க இயலவில்லை யாயின் செய்கிறவர்களை செய்ய விடுக்க . நல்லதை செய்ய வழிசமைப்போம் வருக .
பின்னர் விரிவாக ஆய்வு செய்வோம்
மனித இனத்தை நோயிலிருந்து காப்போம் .

இந்த இடுகை எம்மை இந்த வலையுலகிற்கு அறிமுகப்படுத்திய நண்பர் சுகுமாரன் கேட்டு கொண்டமைக்கிணங்க பதிவு செய்ய படுகிறது

More than a Blog Aggregator

பிப்ரவரி 08, 2011

காதலில் வெற்றி பெற ..., வெற்றி மட்டுமே பெற....Valentines Day Special







காதலில் வெற்றிபெற வெற்றிமட்டுமே பெற ...
பழங்காலங்களில் காதலை இலக்கியங்களில் கண்டு காமுற்றனர். இன்று வெறும் ஏட்டளவிலும் முறையல்லாத ஊடகங்களின் வாயிலாகவும் திரைப்படங்களின் வழியிலும் காதலை அடையாளம் காணுகின்றனர் . இதனால் இந்த சமூக அமைப்பு பல்வேறு சிக்கல் களுக்கு ஆளாகிறது அதைப்பற்றி இன்றைய தலைவர்களோ அல்லது ஆன்மீக மடத் தலைவர்களோ சிந்தித்த தாக தெரியவில்லை . எனவே இன்றைய இளைய தலைமுறை குறிப்பாக விடலை பருவத்தினர் உளம் போன போக்கில் தம் பாதையை செலவிடுகின்றனர் . இதனால் அடுத்தகட்ட குமுகம் (சமுகம் ) முடமாகும் நிலை உண்டாகியுள்ளது .

இந்த பதின் பருவத்தில் முறையாக கொடுக்கப்படவேண்டிய வழிகாட்டலை இந்த குமுக அமைப்பு செய்யாமையினால் இளைய தலைமுறை தவறான வழியை நாடுகின்றனர்.முறையான உடல்பற்றியும் , உள்ளம் பற்றியும் , விடலைபருவத்தில் ஏற்ப்படும் உடல் , மற்றும் பாலியல்வேட்கை,போன்ற வற்றை முறையாக அணுகி அவர்களுக்கு தெளிவு படுத்தாமையினால் முறை இல்லாத வழியில் தேடி கேட்டுப்போகின்றனர் . இதில் காலத்தை மிகையாக செலவிடுவதால் கல்வியில் எதிர்கால தேடலில் செலவிடாமல் இந்த காதல் போதையில் முழுகி குமுகத்தை முடமாக்குகின்றனர் . கற்க வேண்டிய அகவையில் கற்கமையினால் பின்னாளில் இவர்கள்தான் போக்கிலிகளாக(ரௌடிகளாக )மாறி தவறான வழியில் பொருளீட்டி இந்த குமுகத்திற்கு சவாலாக மாறுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம் . இதை பின்னர் விரிவாக கதைப்போம் .

இனக்கவர்ச்சி

இப்படி முறையல்லாத வழியில் பொறப்படும் காதல் முறையில்லாத வகையில் தொடருகிறது. காதல் ஏற்பட வேண்டிய அகவை ஆண் எனில் இருபத்து ஆறு அல்லது இருபத்து ஏழு அகவையிலும் ,பெண் எனில் இருபத்து மூன்றுஅகவையிலும் மணமுடிப்பது தான் முறையாக இருக்கும் ஏன் என்றால் அப்போது தான் தெளிவான அறிவும் நிலையான வருவாயும் கிடைக்கும். உடலும் எல்லாவற்றிற்கும் ஒத்துழைக்கும் முறையான வருவாயை கொண்டு தெளிவான இல்லறத்தை தொடரலாம் .
காதலுக்கு பெண்ணோ அல்லது ஆணோ தேவை எனில் வற்றிய மார்பகம் கூன்விழுந்த முதுகு , நரைத்த தலை தளர்ந்த உடல் இப்படி யுந்தால் அங்கு காதல் வருவதில்லை ? ஆண் எனில் பூத்து குலுங்கும் பெண் தேவை , பெண் எனில் கட்டழகு காளை தேவை ஆக இது இனக்கவற்சியின்றி வேறென்ன?

முறையல்லாத காதல்

பதின் பருவத்தில் தேவையானது கல்வி பற்றிய முறையான சிந்தனை . இதைவிட்டுவிட்டு காதலில் எண்ணத்தை செலவிட்டால் பின்னர் வாழ்க்கை கேள்வி குறியாகிவிடாதா ? இந்த சிந்தனையை இளைய பதின் பருவத்தினருக்கு ஊட்டினோமா? எல்லாவற்றையும் கடைவிரித்து காட்டிவிட்டு அதை எல்லாம் பார்க்க கூடாது என கட்டளையிடுவது கண்மூடித்தனமாக தோன்ற வில்லையா ? அல்லது தவறுகின்ற இளைய குமுகத்திற்கு மாற்றுத்திட்டத்தை கட்டினோமா?

இன்று முட்டாள்களின் பெட்டி எனப்படும் தொலைகட்சிகளிலும் ஊடகங்களிலும் காணும் காதலை உண்மையானது என நம்பி விடுகின்றனர் இது அறியாமையின் வெளிப்பாடு எனலாம் அதாவது பதின் பருவம் (டீன் ஏஜ் ) என்பது ஏதும் அறியாமையில் உள்ள அகவை. இந்த காலங்களில் சேட்டை செய்யும் குரங்கு கூட அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரியும் .இந்த சூழலில் இளைய விடலைபருவத்தினருக்கு முறையான வழிகாட்டலும் உடல் உள்ளம் பற்றிய செயல் பாடுகளை நுட்பமாக புரியவைக்கவேண்டும். ஆனால் இன்றைய நிலையில் பெரும்பான்மை ஊடகங்கள் இளைய குமுகம் தவறான பாதைக்கு இட்டுசெல்லும் அளவிற்கு வழி நடத்துகிறது எனலாம் . இந்த இன கவர்ச்சி ஊடகங்களின் வழி பெறப்படும் காதல் என்ற சொல்லாடலை உண்மையானது என புரிந்து கொள்ளுகின்றனர் . ஏதோ ஒருசிலர் பணத்தில் கொழுத்து போவதற்கு இந்த ஒட்டு மொத்த குமுகமே ஏன்
பலியாக வேண்டும் .?

முறையான வழிகாட்டல்

இந்த குமுக அமைப்பு இளைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டலை தொடங்க வில்லை ஆனால் பழியை அவர்களின் தலையில் சுமத்துகிறது கெட்டுபோவதற்கு வழிகளை சமைத்து கொடுத்துவிட்டு உருப்படவில்லை என முனகுவது ஏற்புடையதாக தெரியவில்லை.
திரைப்படம், தொலைகாட்சி, நாளிதழ்கள் போன்ற ஊடங்களில் இளைய தலைமுறையினர் உள்ளத்தை கவரும் விதத்தில் கட்சி படுத்தி காட்டிவிட்டு, காதல் தவறானது என புலம்பி ஆவது ஒன்றுமில்லை. இந்த ஊடகங்களில் இளைய தலைமுறையை சீரழிக்கும் பாலியல் தொடர்பான காட்சிகளை முன்னிலைபடுத்தி காட்டிவிட்டதால் அதில் மயங்கி அந்த காதலை உண்மையானது என நம்பி விடுகின்றனர் .

அரசியல் பிழைப்பு

இன்றைய அரசியல் பிழைப்பு வாதிகள் பண்பாடு , மொழி , இனம் என்பது பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை இதனால் நுகர்வு பண்பாடு மிகுதியாகி கிடைத்தை எல்லாம் நுகர்ந்து விடவேண்டும் என எண்ணம் கொள்ளுகின்றனர். இதன் வெளிப்பாடுதான் மக்களையும் பாடாக படுத்துகிறது . இந்த குமுகத்தை சீரழிக்கிறது .இளம் அகவையில் காட்டப்படும் பாலியல் தொடர்பான கட்சிகள் அவர்களை தவறான வழிக்கு இட்டு செல்லுகிறது.
சம அவவையுடைய எதிர் பாலினரை கண்டாலே மின்மினி பூச்சி பறக்க தொடங்கிவிடுகிறது என்கிறனர் , நெஞ்சம் குருகுருப்பதகவும் இதயம் படபடப்பதகவும், மின்சாரம் பாய்வதை போன்ற உணர்வு தோன்றுவதாகவும் சொல்லுகின்றனர். இந்த எண்ணம் கொண்டுவிட்டால் படிக்கவும் இயலவில்லை, தூங்க இயலவில்லை மூச்சி நின்றுவிடும் போல் இருக்கிறது என்கிறனர் இந்த உணர்களை தந்தது இந்த குமுக அமைப்புதானே ?
காதல் குறித்த புரட்டல் களும் செய்கைகளை தூண்டும் எண்ணங்களும் எங்கிருந்து இவர்களுக்கு வருகிறது ? ஊடகங்களின் வழிதானே பெறப்படுகிறது .அதுமட்டும் அல்ல நம் பண்பாட்டை சீரழிக்கும் ஆடைகுறைப்பும் ஒருகாரணம் எனலாம் .இந்த சமவயது காதல் எளிதில் தோல்வி அடைகிறது என உறுதியாக கூறலாம் . ஏனெனில் முறையான திருமணம் எனில் குறைந்த அளவு ஐந்து அகவை இருவருக்கும் வேறுபாடு இருக்க வேண்டும் . பெண்களைப் பொறுத்தவரை விரைவில் மூப்பு அடைந்து விடுவது இயற்கையின் காரணமாக . இந்த மூப்பு பலருக்கு வாழ்க்கையில் போராட்டத்தை உண்டாக்கு கிறது எனலாம் .

காதல் என்பது என்ன ...

உண்மையில் காதல் என்பது என்ன ? ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழ்வதற்கான ஓரு முன்நீர்ர்பாடுதாநீ ? இன்றைய காதல் அப்படி இருக்கிறதா ? கண்டதும் காதல் என்பது நாய்காதல் என்று சொல்லலாமா? நாய்கள்தான் கண்டதும் (பார்த்தத்தும்) ...... நாம் ஆறு அறிவு உள்ள மனிதர்கள் சிந்திக்க தெரிந்தவர்கள் ஆகவே காதல் செய்யும் முன் ஆண் அல்லது பெண்ணின் வெறுமனே புறத்தோற்றத்தை கண்டு காதலிக்காமல் அவள் அவன் நம் காதலுக்கு ஏற்றவனா? இணக்கவற்சியினால் உண்டானதா? நம் எண்ணம் களுக்கும் மதிப்பு அளிக்க கூடியவர்களா ? சிக்கல் நேர்ந்தால் அதை எப்படி அணுகப் போகிறோம் ? வாழ்வதற்கு பணம் தேவைப்படுமே அந்த பொருளை எப்படி ஈட்டபோகிறோம் எதிர்காலத்திட்டம் இவற்றைப்பற்றி எல்லாம் நன்கு பேசித்தானே காதல் வாழ்க்கையை தொடங்க வேண்டும் அப்படி இல்லாமல் இன்று கண்டது காதல் என்பதால் விரைந்து மன முறிவுகளும் அல்லவா உண்டாகிறது ? இதற்க்கு என்ன தீர்வு வைத்துள்ளனர்.

காதலிக்கும் முன்பாக எதிர்கால திட்டம் தம் காதல் முறையான அகவையில் முறையாக தொடங்கியது தானா எல்லைமீறிய நிறைவேறாத காதலா நான்கு வருவாய் ஈட்டும் பலர் மண முறிவுகளை சந்திக்கின்றனரே என எல்லா வகையிலும் சிந்தித்து காதல் செய்தால் இந்த
குமுகம் விழிப்படைந்து விட்டது என்பது பொருளாகும் . உங்கள் காதல் எப்படி பட்டது ?
இதைப்பற்றி எல்லாம் பெசிவிட்டுதனே பிப்ரவரி பதினான்கு பற்றி சிந்திக்க வேண்டும் அப்படி வாழ்வின் இன்பம் , துன்பம் எல்லா பக்கங்களையும் இன்பம் எனின் குதித் தெழாமல் துன்பம் வந்தவிடத்து துவண்டு போகாமல் துன்பம் நேர்ந்த விடத்து தீர்வு மணமுறிவு என எண்ணாமல் வள்ளுவ பேராசான் சொன்ன மாதிரி

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் .

என்பது போல் இல்லறத்தில் உண்டாகும் சிக்கல்களை முறையாக பொறுமையாக பேசி தீர்த்து கொண்டு வாழ்வை வாழ்ந்து காட்ட இளைய தலைமுறைக்கு வழிகாட்டுவோம் .

காலமெல்லாம் முறையான காதல் வாழ்க .
எமது விடியலை உடைப்போம் என்றநூலில் இருந்து ... ஒரு பகுதி
இன்றைய இளைய தலைமுறைக்கு முறையான தமிழ் உணர்வை ஊட்டி வாழ்வியலை படமாக வழிகாட்டும் முழுமையான நூல்.

தொடர்புக்கு :போளூர் தயாநிதி .siddhadhaya @ gmail .com
91 - 94429 53140 .
More than a Blog Aggregator

பிப்ரவரி 02, 2011

தலைவலி காரணங்கள்- சில தீர்வுகள்





தலைவலி காரணங்கள்- சில தீர்வுகள்

தலைவலி என்பது ஒரு நோய் இல்லை . அது ஒருநோயின் அறிகுறி எனலாம் .தலைவலிக்கு கரணம் என்ன என்பதை சிந்தித்துக் கொண்டிருக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை . தலைவலிக்கு காரணம்கண்டுபிடித்துக் கொண்டிருப்பதைவிட அதற்கென பெட்டிக்கடையில் விற்கப் படும் எதோ ஒருமாத்திரை வாங்கி விழுங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் இதனால் வரும் கேடுகளை சிந்திக்க நேரம் வாய்பதில்லை .

ஒரு நகைச்சுவை

ஒருவர் ; ஏன் அந்தமருத்துவரை பார்த்து ஓடுறீங்க ?

இவர் ; பல்வலின்னு போனேன் பல்ல எடுத்திட்டாரு. மீண்டும் பல்வலி வந்தது மீண்டும் ஒரு பல்லை எடுத்திட்டாரு .இப்ப எனக்கு தலைவலி அதுதான் .

ஒருவர் ; ?????????????????

இது சிரிப்பதற்காக அல்ல . சிந்திப்பதற்காக யாரோ ஒரு நண்பர் எழுதி இருந்தார் எத்தனைபேர் சிந்தித்தார்கள் என்பது தெரியவில்லை . இதில் இரண்டு உள்ளடக்கம் உள்ளது ஒன்று இப்போதெல்லாம் எந்த நோய்க்கும் அறுவை சிகிச்சைதான் தீர்வு என்ற கற்பிதம் . இரண்டாவது நோய்களின் காரணத்திற்கு அல்லாமல் நோய்களுக்கு மருந்து விழுங்குவது . இது எந்த வகையில் சரி என்பது விளங்க வில்லை .


தலைவலிக்கான காரணங்கள்

௧.நீடித்த மலச்சிக்கல் .
௨.நேரம் தவறி உண்பது.
௩.கடுமையான உழைப்பு .
௪.வேண்டிய நீர் அருந்தாமை.
௫.உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம்.
௬.மயக்கப் பொருள் (சாராயம் ,புகை ) பயன் படுத்துதல் .
௭.கடுமையான வெய்யலில் வேலைசெய்தால்.
௮.மழையின் காரணமாக.
௯.உளவியல் காரங்களினால் .சினம் ,எரிச்சல், இறுக்கம் இப்படி...
௧௦.கண்ணிற்கு கடுமையான வேலை கொடுப்பது.
௧௧.இரவு மிகையாக கண்விழித்தல்.
௧௨.இரசாயணம் கலந்த தலைசயம், கலவைகள் பூசுவது.
௧௩.பெண்களின் பூப்பு (மாதவிடாய் )காலத்தில்.
௧௪.வேருநோய் களுக்கு எடுத்துக்கொண்ட இரசாயன மருந்து களினால் .
௧௫.பினிசம் (சைனசு ) நோய்களின் போது.
௧௬.எண்ணெய் கலந்த வறுத்த உணவுகள் மிகையாக எடுத்து கொண்ட போது .
௧௭.உண்ட உணவு செரிமானம் ஆகா நிலையில் .

இப்படி தலை நோய் களுக்கான காரணங்கள் நீளுகிறது அதற்க்கு எதோ ஒரு மாத்திரை எப்படி தீர்வாக இருக்க வியலும் சற்று சிந்திப்போமா?
இந்த காரணங்களை நீக்கி கொண்டாலே நோய் நீங்கிவிடுமே எதோ ஒரு மாத்திரையை விழுங்கி நோயை பெரிது படுத்தி பின்னர் அழுவானேன்?

சில எளிய தீர்வுகள்

மேற்கண்ட காரணங்களினால் வந்த தலைவலி என்றால் அந்த பிழை நீக்குக .
சுக்கை வெந்நீரில் அரைத்து பற்றிடுக.
செரிமானமாகாத நிலை எனில் வயிற்றை பட்டினி பொடுக.
செரிக்க எளிமையான உணவுகள் எடுக்க வேண்டும்.
உளவியல் காரணங்கள் எனில் ஊழ்கத்தில் (தியானத்தில் )ஆழ்க .
காலையில் நாளும் தூய்மையான நீர் அருந்துக.

தமிழ கலைகளை காப்போம் உலகில் உயர்ந்து நிற்ப்போம் .
.More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...