மே 10, 2011

தமிழகத்து ஆண்களின் ஆண்மைக்கு என்ன நேர்ந்தது?





இப்போது தமிழகத்தில் நாளிதழ் ,பருவ இதழ் , வாரஇதழ் மஞ்சள் இதழ்கள் என
எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்மைக்குறைவை பற்றிய விளம்பரங்களை காணலாம்.
அப்படி என்ன தமிழகத்து ஆண்கள் ஆண்மையற்று போய்விட்டனர்? திருமணமே வேண்டாம்
என்கிறார்களா? பிறப்பு விகிதம் குறைந்துபோய் இருக்கிறதா ? அல்லது வேறு ஏதாவது
குறைபாடா? நாம் சிந்திக்க தொடங்கினோம்.


இன்றைய நிலையில் இப்படி பட்ட விளம்பரங்களை விட முறையான
மருத்துவத்தை முன்னெடுத்து மக்களை நல்வழிபடுத்தவேண்டிய சூழலில்
பெரும்பான்மை மாத்துவார்கள் இல்லை என்பதாக கொள்ளலாமா ? தெரியவில்லை
நீங்கள்தான் சிந்திக்கவேண்டும். உங்களிடம் விட்டுவிடுகிறேன்.

இன்றைய சூழலில் ஆண்மை குறைவிற்கு எந்த கேடும் நிகழவில்லை ஆனால் இதை
தவறாக புரிந்து கொள்ள பட்டு இருக்கிறது அல்லது தவறாகபுரியவைக்கப்பட்டு உள்ளது
தவறான கருத்தாக்கத்தை புகுத்தப்பட்டு உள்ளது .பழங்கலங்களில் பாலியல்
குறைபாடுகள் இப்படி பேசப்படவில்லை காரணம் அண்டைய சூழல் அப்படி அனால்
எல்லாவற்றிற்கும் தெளிவான விளக்கங்கள் கிடைத்து வந்தன .

உடலை கண்ணேபோல் காத்து வந்தனர் கூட்டு குடும்ப வாழ்க்கைமுறை
மனிதத்தை முறையாக பராமரித்து வந்தது. இன்றைய தனியுடமை அமைப்பு மனிதனை
பேயாட்டம் ஆடவைக்கிறது .காரணம் மனிதன் இன்று பொறியாகி (இயந்திரம் ) போனான் உடல் நிலை
சரியில்லை என்றாலும் ,அல்லது உடலியல் குறைபாடு என்றாலும் மனிதன் பொறி ( இயந்திரம்)
போல உடலை வெட்டி எடுக்கும் மாற்று (பொறி )இயந்திரத்தை பொருத்தி மனிதத்தை
ஊர்ந்து செல்ல வைக்கும் செப்படி வித்தைகள் செப்பனே நடக்கிறது ஆனால் மக்களோ
அறியாமையில் உழல்கிறனர்.

இன்றைய ஆண்மைக்குறைபாடு என்பது பல்வேறு காரணங்களை உள்ளடக்கியது .
சித்தமருத்துவம் மனிதனின் வாழ்க்கைமுறையை அழகாக படம் பிடித்து காட்டுகிறது
எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்றும், பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை
பாலுறவு கொள்ளவேண்டும் எனவும் கூறுகிறது. மூத்த பெண்களுடன் பாலுறவு கூடாது
பகலில் பாலுறவு கூடாது . என்னை தேய்த்து குளித்த அன்று பாலுறவு கூடாது என
பல்வேறு வாழ்க்கைமுறை மெய்மங்களை பாமரத்தனமாக பட்டியலிட்டு காட்டுகிறது

இன்றைய அவசர உலகம் எல்லா இன்பங்களையும் உடனே பெற்றுவிட வேண்டும் என
தூண்டுகிறது . பாலுறவை சிற்றின்பம் என்றனர் முன்னோர் . அதை பேரின்பமாக
கருதி விரைந்து எல்லா இன்பங்களை பெற்றுவிட துடித்து இளமையிலேய முடங்கி
போகின்றனர் . இவர்களுக்கு நாம் பொறுமையாகவும் அமைதியாகவும் சொல்லுவது
புரியாமலே போகிறது . பாலுறவு இன்பத்தினை நீடிக்க வேண்டி பல்வேறு ஆங்கிலமுறை
மருத்துவத்தை நாடுகிறனர் இது மாட்டிற்கு ஊசி போட்டு பால் கறப்பதற்கு
ஒப்பானது மாட்டிற்கு தீனிபோட்டு பால்கறக்கும் பழக்கம் போய் இன்று ஊசி
போட்டு பால்கரப்பது வழக்கமாகிப்போனது இது எப்படி சரியாகி வரும் என்பது
புரியவில்லை . இது மாட்டையும் மனிதனையும் அல்லவா நோயாளியாக்கும்?

வேதனை தரக்கூடிய செய்தி என்னவென்றால் இன்று பாலியல் இன்பத்தை, பாலியல்
தொடர்பான படங்களை பார்த்து அதில் வரும் காட்சிகளைபோன்று தானும் அப்படி
பாலுறவு கொள்ள வண்டும் என என்னுகிறனர். பாலுறவு காட்சிகள் படமாக்குவது ஒரு
நாளில் எடுப்பது அல்ல பலநாளில் எடுக்கப்பட்டதாகும் அதை பார்த்து தானும் நீண்ட
நேரம் பாலுறவு கொள்ள நினைப்பது நுகர்வு பண்பாடு இது மனிதத்தை
நோயாளியாக்கும். பாலுறவு காலத்தில் உடல் அளவில் பல மாற்றங்கள் நிகழுகிறது மனித
உடல் வெப்பமடைகிறது இந்த வெப்பத்தை தணித்து கொள்ள எந்த நடவடிக்கையும்
எடுப்பதில்லை . இவற்றால் பல்வேறு பாலுறவு கோளாறுகள் நிகழுகிறது. அதேவேளை மனித
உடல் விந்துவை உற்பத்தி செய்யும் பொறி (இயந்திரமல்ல ) நல்ல தரமான உணவுகள்
காய்கள் பழங்கள் எடுத்து கொள்ளவேண்டும்.கீரைகள் எடுக்கவேண்டும்

மனிதனின் இரத்தத்தில் சர்கரையின் அளவு கூடினால் பாலுறவு இன்பம்
குறையும் .அது தான் சர்க்கரை நோய்கண்டவர்கள் பாலுறவு சிக்கல் களுக்கு
ஆளாகின்றனர் .மிகையான அச்சம் , சினம் போன்ற நிலைகளிலும் பாலியல் கோளாறுகள்
உண்டாகிறது. உடலில் பவேறு நோயுள்ள நிலையில் பாலுறவு கோளாறுகள் உண்டாகிறது .
எனவே பாலுறவு கோளாறுகளுக்கு அது என்ன காரணத்தினத்தல் உண்டாயிற்று என
கண்டறிந்து முறையாக தீர்க்க வேண்டும் . பெரும்பாலும் சிக்கலே இருப்பதில்லை .
சிறிய சிறிய சிக்கல் கலை பெரிதாக்கி கொள்ளுவதுமுண்டு .தரமான தவச(தானிய ) முளைகட்டிய
உணவுகளை எடுத்து கொள்ளுவதாலும் . தரமான பழங்கள் , முறையான உணவுகள் எடுத்து
கொள்ளுதல் , எண்ணெய் தேய்த்து குளித்தல் பதினைந்து நாளுக்கு ஒருமுறை பாலுறவு
கொள்ளுதல் இப்படி முறையான பழக்கங்களை கடைபிடித்தால் பாலுறவு சிக்கல்கள் தோன்ற
வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

*சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .*More than a Blog Aggregator

4 கருத்துகள்:

  1. பல விசயங்களை அடுக்காய் கூறி இருக்கின்றீர் ..
    உணர வேண்டும் ..
    உண்மையை எண்ணி அதற்கு தகுந்த செயலை செய்ய முனைய வேண்டும் ..
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. உங்களைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் .. நேரம் இருந்தால் பார்க்கவும் ..

    நம் உடலைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் - மருத்துவ வியாழன்

    பதிலளிநீக்கு
  3. narai mudi thadupatu patri podavum

    பதிலளிநீக்கு
  4. Narai mudi irukku enakku age19 numper.8220464152

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...