ஜூலை 25, 2011

திருநங்கைகள் தோற்றம் ஒரு ஆய்வு




இப்போதெல்லாம் திருநங்கைகள் எல்லா இடங்களிலும் காண முடிகிறது . மனிதகுலத்தின் இந்த இலக்கண பிழைகளை நாமும் தெரிந்து கொள்வோமே என சிந்தித்தேன் . இந்த திருநங்கைகளின் வாழ்க்கை சற்று மாறுபட்டதாக இருக்கிறது . இவர்கள் உடலால் ஆணாக இருந்தாலும் உள்ளத்தால் பெண்ணாகவே இருக்கிறார்கள் . தங்களின் இயற்கைக்கு மீறிய இந்த நிலைபாட்டை இவர்கள் விரும்பி ஏற்கிறார்கள் . குடும்பம் இந்த உலகம் எவரை பற்றியும் எந்த கவலையும் கொள்ளது தமது வழித்தடத்தில் தானே பயணிக்கிறார்கள் .

புதிய பறவை புதிய வீடு

தங்களின் கூடுகளை பிரிந்த இந்த பறவைகள் வண்ணவண்ண கனவுகளுடன் புதிய வேடந்தாங்கலை உருவாக்கி கொள்ளுகிறது ..
இங்கு இவர்களில் சிலர் பாலியல் வெட்கைகொள்ளுவோர்களுக்கு . தங்களை பெண்ணாக மாற்றிக் கொண்டு விட எண்ணி உடலை அதற்க்கு தகவமைத்து கொள்ளுகிறனர் .அதாவது தங்களின் ஆணுறுப்பை வெட்டிக்கொண்டு அங்கே பெண்ணுருப்பினை போல செயற்கையாக உருவாக்கி கொள்ளுகிறார்கள் .

மருத்துவர் கை மாதா கை

தங்களின் ஆணுறுப்பை பெண்ணாக மாற்றிக்கொள்ள இவர்கள் பெரிதும் மருத்துவமனைகளை நாடி செல்லுவதில்லை . அதாவது முறையான அறுவை சிகிச்சை செய்துகொள்ளுவதில் இவர்களிடம் அதிக நாட்டமில்லை காரணம் மருத்துவர் களிடம் அது பெரிய மருத்துவ நடுவமாக இருந்தாலும் இவர்களுக்கு பிடிப்பதில்லை காரணம் முறையான மருத்துவமனை களுக்கு சென்று அறுவை செய்து கொண்டால் பின்னாளில் சிக்கல் உண்டாகிறதாம் செயற்கையான அந்த பெண்ணுறுப்பு வழி அடைத்து சிறுநீர் வெளியேறுவதில் சிக்கலை உண்டாக்கு கிறதாம். விரைந்து காயம் ஆறுவதில்லை என்கிறான் (ள்) சினேகா என்ற திருநங்கை. எனவே தாயம்மா எனப்படும் ஒரு முதிய திருநங்கை ஒரு நல்ல நாளில் கூரிய ஆயுதம் கொண்டு தன்னுடைய கைகளினாலே ஆணுறுப்பை நீக்கி விடுகிறாராம் . இந்த நேரத்தில் வலி மிகையாக தெரிவதில்லை என்கிறான்(ள் ) முத்தழகி என்ற திருநங்கை .
.
இந்த உறுப்பு மாற்றம் செய்து கொண்ட பிறகு நற்பது நாட்கள் கடுமையான உணவு கட்டுப்பாடுகள் கடைபிடிக்க படுகிறது .ஆண்களையும் பார்க்க கூடாதாம் .இதனால் நோயில் இருந்து காத்து கொள்வதுடன் உடல் பெண்களைப்போல மாறுகிறது மயிர் நீங்குகிறது என நம்புகின்றனர் . அதுமட்டும் அல்லது பிற மக்களைபோலவே இவர்களிடம் கட்டுபடுத்த முடியாத மூட பழக்கங்களும் குடி கொண்டிருப்பதை கானலாகிறது
அதுமட்டுமின்றி இவர்களின் பாலுறவு வேட்கை இவர்களை பெண்ணாக பாவித்து கொள்ளுவதால் ஆணின் தேவையை விரும்புவதாக கூறுகிறனர் .பாலுறவில் பெண்களைப்போலவே ஆர்கசம் எனப்படும் உச்சநிலை அடைவதாக கூறு கிறாள் (ன்)பவித்த்ரா .

சித்த மருத்துவ அறிவியல் பார்வையில் திருநங்கைகள் .

சித்த மருத்துவம் அறிவியலை உள்ளடக்கியது என்பதை நாமறிவோம்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய திருமூலர்

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்தது முதலைந்து உயிரோடே ஏறி

என பதிவு செய்கிறார் . பாலுறவு கொள்ளும் காலத்தில் தாய் , தந்தை உளநிலை , உடல் நிலை போன்றவற்றையும் மிக நுணுக்கமாக பர்க்கவேண்டியத்தின் காரணத்தை பதிவு செய்கிறது . பாலுறவு காலமும் அதன் பின் தாயின் கருக்கலமும் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டியதின் தேவையை உணத்துகிறது . இப்படி முறையாக தாய்மைப் பேற்றைக் கடைபிடித்தால் வன்முறையற்ற சிறந்த அறிவு நிறைந்த தமிழ் குமுகத்தை தோற்றங்கொள்ள செய்யலாம் .

திருநங்கைகள் தோற்றம் .....

ஆண்மிகில் ஆணாம் பெண்மிகில் பெண்ணாம்
பூணும் இரண்டோன்றிப் பொருந்தில் அலியாகும்

என்கிறார் திருமூலர் அதாவது கணவனும் மனைவியும் குழந்தை வேண்டி கூடுகையில் கணவனின் மூச்சு காற்றுவலப்பக்கம் நடந்தால் ஆண்குழந்தையும் இடப்பக்கம் நடந்தால் பெண்குழந்தையும் இரண்டு பக்கமும் உயிர்வளி நடந்தால் அலியாகவும் பிறக்கும் என்கிறார் . சித்தமருத்துவம் அறிவியல் வழிபட்டது என்கிறோம் எந்த மூகந்திரமும் இல்லாமல் முழுமையாக இவற்றை வாசிக்காமல்அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தாமல் வாட்டுவதம் புரியும் சிலர் இது அறிவியல் இல்லாததது என்கிறனர் . . இந்த கூற்றை முழுமையாக ஆய்வு செய்தால் எல்லாம் புரியும் தானே செய்யுங்கள் என்கிறோம் அல்லது செய்கிறவனை விடுங்கள் செய்து கட்டுகிறோம் இங்கே தானும் படுப்பதில்லை தள்ளியும் படுப்பதில்லை .
அன்புள்ளம் கொண்டோரே சித்தமஆத்துவ அறிவியல் இந்த உலகபந்தே பின்பற்றவேண்டிய சிறந்த அறிவியல் என்கிறேன் . சித்தர்களின் கூற்று என்றும் பொய்த்ததில்லை பொய்க்காது எனவே சித்தர்களின் மருத்துவ அறிவியல் பார்வை இன்றைய நிலையில் நுணுகி நுணுகி ஆய்ந்து மக்களுக்கு கொடுக்கவேண்டிய சிறந்த மருத்துவம் பின்பற்றுவோம் . காப்போம் .
ஆக சித்த மருத்துவ அறிவியலின் படி முறையாக குழந்தை பேற்றிற்கு முயன்றால் சிறந்த எதிர்காலத்தை நோயற்ற ஒரு குமுகத்தை உண்டாக்க முடியும் என்பது நமது வாதமாகும்

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்

அறிவான குழந்தை அறுவை சிகிச்சை இல்லாத குழந்தை சாத்தியமா?.More than a Blog Aggregator

ஜூலை 18, 2011

உங்கள் உடலை அறிய.......உங்களுக்கு வரும் நோய்களை அறிய ...



தேர்ந்த சித்த மருத்துவர் நோய்கண்டவர்களின் நாடியை முறைப்படி கண்டறிந்து என்ன நோய் வந்திருக்கிறது என சொல்லிவிடுவார்கள் அவர்கள் நோயாளிகளிடம் என்ன நோய் என கேட்டு கொண்டு இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு சித்த மருத்துவத்தின் நாடியரிதல் துல்லியமாக கணக்கிட பட்டு உள்ளது சித்தமருத்துவத்தின் என்வகைதேர்வு மனிதனின் நோய்களை அறிந்து முறைப்படி பட்டியலிடுகிறது .

மனித உடல்வகை

மனிதர்களின் உடல்வகை சித்தமருத்துவம் துல்லியமாக ஒன்பது (9 ) என கணக்கிட்டு உள்ளது .அவை வளி ,அழல் , ஐ , எனப்படும் இவற்றோடு தொந்தம் எனவும் உண்டு அதாவது வதமும் பித்தமும் கலங்கி நடந்தால் அதாவது வாதத்தின் பங்கும் பித்தத்தின் பங்கும் ஒன்றி இருப்பின் இது வாத பித்த தொந்தம் எனப்படும்

வாத உடல்வகை .

வாத உடல்வகை குளிர்ந்தும் மூக்கு ,விழி,பல், நாக்கு, ஈற்றுணவு (மலம் ) எல்லாமே கருத்து காணப்படும் .கண்ணில் நீர்வடியும் .நாக்கு கருப்பாக வறண்டு இருக்கும் . சிறுநீர் பொருமி கருமையாக இருக்கும் . ஈற்றுணவு வெளியேறுவதில் சிக்கல் காணப்படும்.
இவர்கள் தீனி மேல் மிகையான நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் . தவறான செயல்கள் நடத்தைகள் இருக்கலாம் .வளமான உடல் மற்றும் வலிமை மிகுந்த உடலை பெற்று இருப்பார்கள் . இவர்கள் காற்று பிடிப்பு நோய் களால் அவதிப்படுவர்கள்.


பித்த உடல்வகை




இவர்கள் உடல் நெருப்பாக கொதிக்கும் . மூஞ்சி ,நாக்கு ,பல், ஈற்றுணவு , எல்லாமே மஞ்சளாக இருக்கும் . வியர்வை மஞ்சளாக இருக்கும் .அதோடு இவர்களின் வியர்வை வாடை அடிக்கும் என்னதான் குளித்தாலும் இந்த சிக்கல் தீராது . இவை நீங்க கடுமையான உணவு, உள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும் . இவர்கள் அறிவில் சிறந்து விளங்குவார்கள் . ஒருதடவை படித்தாலே இவர்களின் நினைவாற்றல் உள்வாங்கி கொள்ளும் ஆற்றல் பெற்றதாக இருக்கும். இவர்களிடம் நேர்மை இருக்கும் இளமையில் /இளைய அகவையில் மயிர் நரைக்க தொடங்கும் . எப்போதும் இவர்கள் உடல் பலவீனமாக இருப்பதாக உணர்வார்கள் . இவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் , உளம் தொடர்பான நோய்கள், வரலாம்.

கப உடல்வகை

இவர்கள் உடல் மிகையாக வியர்க்கும் மூஞ்சி ,பல்,நாக்கு, சிறுநீர், ஈற்றுணவு,(மலம் )எல்லாமே வெண்மையாக இருக்கும்.கண்ணில் பீளை கட்டும்.இவர்களின் உடல் செழுமையாக அழகாக இருக்கும். எதையும் நிதானமாக செய்வார்கள். பாலுறவில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் . இவர்களின் அகவை நீண்டதாக இருக்கும் . இவர்களுக்கு தடுமன் ,( சளி )மூச்சிறைப்பு கபம் திட்ர்பன பிணிகள் தோன்றும் என சித்தமருத்துவம் பகுக்கிறது .
இது தொடர்பான விரிவான தகவல் பின்னர் விரிவாக எழுதப்படும்

சித்தமருத்துவம் காப்போம் நோய்வெல்வோம்More than a Blog Aggregator

ஜூலை 11, 2011

உள ( மன ) நோய்க்கு ஒரு மருந்து .




எதிலும் அவசரம் பரபரப்பு போன்றவை நிறைந்த இன்றைய நாளில் உள நோய் என்பது எளிமையாகி விட்டது .இந்த நோய் ஆளாளுக்கு வேறுபடுகிறது . இந்த நோயே இன்றைய எல்லா நோய்களுக்கும் காரணமாகிறது .

உளம் (மனம்) என்ற உறுப்பு

மனித உடலில் மனம் என்ற தனியான உறுப்பு ஒன்றுமில்லை . இந்த உளத்தை (மனம் ) மூளை மற்றும் நரம்பு மண்டலம் என நாம் கூறலாம். இதுதான் உளம் எனதமிழிலும் மனம் என வடமொழியிலும் வழங்கப்படுகிறது .


உள்ளம் பெருங்கோயில் ஊணுடம்பு ஆலயம் என்கிறார் திருமூலர்.

சினம் இறக்க கற்றலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் என் பராபரமே என்கிறார் தாயுமானவர் . அதனால்தான் அவர் தாயும் ஆனார்.

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்கிறார் திருமூலர் .

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் என்கிறார் வள்ளுவப் பேராசான் .

இவைகள் எல்லாமே உள்ளத்தை அடிப்படையாக கொண்டவைகளே .
வள்ளுவர் கூறும்போது ஒருவன் எந்த பொருளில் இருந்து பற்று அற்று விலகி நிற்கிறானோ அந்த பொருளினாலே துன்பம் இல்லை என்கிறார் . ஆக இன்றைய உள நோய்களுக்கு வீணான தேவையில்லாத ஏக்கங்களும் கனவுகளும் மூகமையான காரணமாகிறது .
மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர்

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக் கேடும்நோய் என பதிவு செய்கிறார்
விருப்பு வெறுப்பு அறியாமை ஆகிய இந்த குற்றங்கள் இல்லாமல் விட்டொழித்து வாழ்ந்தால் நமக்கு வருவதுற்குரிய துன்பங்கள் இல்லை என்கிறார் வள்ளுவப் பேராசான் .


உள (மன ) நோய் என்பது .

மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் என்கிறார் நம் பாட்டி ஔவை . தனி மனிதனின் மன நிலை அரக்கனின் தொழிற்சாலை என்கிறான் ஒருவன் . இந்த மன பிழற்ச்சி நோய்க்கு அடிப்படை காரணமே ஏதாவது ஒன்றின் மேல் எண்ணத்தை ஊன்றி தனக்கென ஒரு காரணத்தை கற்பித்துக்கொண்டு அதை நடைமுறை படுத்தும்போது அதில் தோல்வி அடைந்தால் அதை மன நோயாக பதிவு செய்கிறோம்.
நல்ல கணவன் இல்லை,நல்லமனைவி இல்லை ,தாய்தந்தை இல்லை ,என உறவுகளுக்காக ஏங்குவது ஒருவித மனநோய் இல்லாத ஒன்றை தானே கற்பிதம் செய்துகொண்டு நோயாளியாவது ஒருவகை
இந்த உலகில் என்னைபோல சிறந்த அறிவாளி இல்லை என சிலர் கற்பிதம் செய்து கொள்ளுகின்றனர் தான் சொல்லுவதை யாரும் கேட்பதில்லை என்பார்கள் கேட்கிறமாதிரி சொன்னீர்களா என கேட்டால் விழிப்பார்கள் . ஆக நோயும் நோய்க்கு மருந்தும் நீயே என வள்ளுவர் காமத்து பாலில் ஒரு இடத்தில் பதிவு செய்து இருப்பார் அக அதுமாதிரி இவர்கள் தன்னுடைய நோய்க்கு தானே காரணமகிறனர் .

அறிஞ்சர் பெருமக்கள்

எம் இனமான வாழும் ஒரே தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் குறிப்பிடுவார்கள் பாதையை தேடாதே உருவாக்கிகொள் . என்பார் அதுபோல நாம் பாதையை நாமே உருவாக்கி கொண்டால் சிக்கல் தீரும்தனே .

காரல் மார்கஸ் அவர்களை உங்களுக்கு பிடித்தனமது எது என கேட்டதற்கு அவர் உடனே சொன்னது போராட்டம்என எதனைபோருக்கு இந்த போராட்டம் பிடிக்கும் ஆக மனிதன் வாழ்வை எங்கோ தேடிக்கொண்டு இருக்கிறான் . ஆனால் வாழ்வு அவனுள்ளே இருக்கிறது .

மந்திரமல்ல வாழ்வு

மந்திரத்தால் மாங்காய் விழவேண்டும் அதுவும் தான் மடியில் விழவேண்டும் என நினைகிறார்கள் இது அறியமையான்றி வேறல்ல . நமது இலக்கு எதுவுமே முயன்று தேடாமல் கிடைத்துவிடுவதில்லை தேடவேண்டும் . தேடும்போது தான் கிடைக்கும் தேடாமல் எதுவும் கிடைபதில்லை . தேடலுக்கான முறையான காரணமும் இருக்கவேண்டும் .

மனிதன் களிமண் அல்ல

சிலரின் குண நலனும் ஒரு சிலரை பாதித்து மன நோயாளி யாகிவிடுகிறனர். மனிதனுக்கு மனிதன் தனியான குண நலன்கள் இருக்கிறது எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்க இயலாது . இந்த வேறுபாட்டை நாம் உள்வாங்கி கொண்டால்தான் நாம் நிம்மதியாக வாழ இயலும் .

வீண் கவலைகள்

சிலர் தானே ஒரு கருத்தை உருவாக்கி கொண்டு எந்த முன்னேர்பாட்டையும் செய்து கொள்ளாமல் எனக்கு வெற்றி கிடைக்க வில்லை என கவலை கொள்ளுகிறனர் . உங்களுக்கான உண்மையான தேடலை முறையான வழிகாட்டலை உரியவரிடம் கேட்டு வெற்றிக்கான பாதையை உருவாக்கி கொள்ளவேண்டும்

எல்லா கவலைகளும் தீர்க்க கூடியதே

மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும் என பதிவு செய்கிறார் திருமூலர் அதாவது உள நோய்க்கு மருந்து உண்டு என்பது திருமூலரின் வாதம் .மன நோய்க்கான காரணங்களை பட்டியலிடுங்கள் பார்வையில் படும்போது எல்லாம் கூர்தீட்டுங்கள் பின்னர் அதன்மீது நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள் என்கிறார் ஒரு மன நல மருத்துவர் நாம் நினைத்து கொண்டிருப்பது போல எல்லா சிக்கல் களும் தீர்க்க முடியாதவைகள் அல்ல தீர்க்க கூடியதே .

சித்தர்கள் உலகில் அறிவில் சிறந்தவர்கள் மனிதனின் எல்லா நோய்களுக்கும் அதன் அறிவியல் அடிப்படையில் இருந்தே மருந்தை கண்டார்கள் . மன நோய்க்கு அடிப்படை காரணம் பித்தம் மிகையாதல் இந்த பித்தத்தின் சீற்றத்தினால்தான் . நோய் தோற்றம் கொள்ளுகிறது என அறிவிக்கிறனர் இந்த நோய்க்கு மருந்து களையும் சொல்லுகின்றனர் மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் தூய்மை அடையவும் துரிதமாக பணியாற்றவும் இந்த மருந்துகள் உதவிடகூடும்.
அதிமதுரம் , கோட்டம், மஞ்சிட்டி ஏலக்காய், நெல்லிமுள்ளி ,சிறுநாகப்பூ , சடமாஞ்சில்,சந்தனம்,கிராம்பு, தாளிசபத்திரி,சீரகம் . இவைகளை முறைப்படி உண்டு வர நல்ல உளவற்றால் கிடைத்து வாழ்க்கை இனிக்கும் .

இது குறித்து பின்னர் விரிவாக ஆய்வு செய்வோம் .

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator

ஜூலை 04, 2011

பாலுணர்வு (Sex Appeal ) உளவியல் காரணங்கள் .





பாலுணர்வு (Sex Appeal ) இன்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது இதனால் பல்வேறு குழப்பங்களும்சண்டைகளும் தோற்றம் கொள்ளுகிறது.பாலுறவு அல்லது தாம்பத்திய உறவு என்பது ஒருகலை இதை கலைநயத்துடன்அணுக வேண்டும் . வரட்டுத்தனமாக அல்லது கடமைக்ககாக அல்லது பாலுணர்வை , பாலுணர்வு வெறித்தனத்தை , வெறித்தனத்தோடு தணித்து கொள்வதற்காக ஈடுபடும் போது அங்கே சிக்கல்கள் தொடங்குகிறது . என ஒருபுள்ளிவிவரம் கூறுகிறது .,

இன்று பெரும்பாலான முறையான திருமண உறவுகள் முதல் காதல் திருமணங்கள் வரை மண முறிவுகளை நோக்கி செல்லுகிறது இவற்றிற்கு அடிப்படை காரணம் பாலுறவில் உண்டாகும் பிழைகளும் குற்றங்களும் தான்

அக்கரைக்கு இக்கரை பச்சை

மனித உடலமைப்பு என்பது கடந்த இருபதுஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துவருகிறது .காரணம் முறையற்ற உணவுபழக்கம் முறையற்ற வாழ்க்கைமுறை எனலாம். இந்தமுறையற்ற
வாழ்க்கைமுறையில் மனிதத்தையும் மனித நேயத்தையும் இழந்து வருகிறான் மனிதன் .இந்த காரணங்களினால் பாலியல் கோளாறுகளும் உண்டாகிறது .இன்று குடும்ப உறவுகள் சீர்குலைந்து வருகிறது இதற்க்கு காரணம் அயல்மகரந்தசேர்க்கைக்கு ஆசை கொள்ளுவதுதான். . முன்பு ஒரு இடுகையில் குறிப்பிட்டது போலவே அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற கண்ணோட்டம் தான் . அதாவது நாளும் கணவனும் ஒரே இடத்தில் புழங்குவதால் ஒருவித சலிப்பு தோன்றுகிறது இந்தசலிப்புதான் ஒருவகையில் படி தாண்ட காரணமாகிறது இது இருபாலரையும் சேர்த்துதான் சொல்லபடுகிறது .



பாலுறவை பொறுத்தவரை நம்முன்னோர்கள் தெளிவான வழிகாட்டலை சொல்லியுள்ளார்கள் அதாவது வள்ளுவர் மலரினும் மெல்லிது காமம் என பதிவு செய்வர் . பாலுறவை மலரைப்போல மென்மையாக கையாளவேண்டும் என்பர் இந்த உளவியல் காரணங்களை நாம் முறையாக கடைபிடிக்காமையால் பெரிதும் பாலுறவில் சிக்கல் தோன்றுகிறது . கணவனும் மனைவியும் உளப்பூர்வமான ஒத்துழைப்போடு ஈடுபடும்போது எங்கும் சிக்கல் தோன்றுவதில்லை. ஆனால் எங்கோ பிழை நேரும்போது பாலுறவில் சிக்கல் தோன்றுகிறது .மேலும் மேலும் பாலுறவை சிக்கலாக்காமல் இருவரும் முழுமையாக ஈடுபட முதலில் எல்லாவற்றையும் பேசித்தீர்க்க வேண்டும் . தேவையில்லாத பதற்றமும் அச்சமும் பாலுறவில் சிக்கலை உண்டாக்கலாம் .

பாலுறவை நீடித்தால் நல்லதா?

இன்று பலருக்கு இந்த எண்ணம் இருக்கிறது நம்மிடம் வருகிறவர்கள் நீண்டநேர பாலுறவிற்கு மருந்துகளை கேட்கிறனர் .இந்த எண்ணம் பழங்காலம் தொட்டே இருந்துவருகிறது அன்றய முடிசூடிய மன்னர்கள் அந்த புறங்களில் பல மகளீரை வைத்து இருந்தத்தின் காரணம் நம்சித்தர்களின் ம்பந்தம் மருந்து மற்றும் ன்னும் ம்பனத்ம் மருந்துகள் வியக்க வைக்கும் வகையில் பாலுறவை நீட்டி பல மகளீரை வீழ்த்த வைத்ததது .

உளவியல் காரணங்கள்

திருமணமான காலங்களில் முதன் முதலாக பாலுறவு கொள்ளும்போது உணர்வு கொந்தளிப்பினால் அவர்களினால் முழுமையாக ஈடுபடாமல் போக வாய்ப்பு உண்டாகிறது.இதனால் முழுமையான இன்பத்தை பெறமுடியாமல் தம்பதிகளிடையே ஒருவித புரிந்து கொள்ளாமை உண்டாகிறது . தவறானான நண்பர்கள் முறையற்றவர்களின் முறையற்ற நடவடிக்கை களினால் தவறான பெண்களின் / சுய இன்ப பழக்கம் தோன்றுகிறது .இந்த சுய இன்ப பழக்கத்தினால் சக்தி முழுமையும் இழந்து விட்டதாக உளவியல் ரீதியில் எண்ணுகிறார்கள் .இதனால் பின்னாளில் பாலுறவில் சிக்கல் உண்டாகிறது .தவறான பெண்களிடம் பாலுறவு கொள்ளும்போது அவர்களின் தவறான வார்த்தை நடவடிக்கை களினால் பதற்றம் அடைவதனால் அங்கும் தாழ்வு மனப்பான்மை உண்டாகி பின்னாளில் பாலுறவில் சிக்கலை உண்டாக்குகிறது . திருமணத்திற்க்குமுன்பெண்கள் களுக்கு உண்டாகும் பாலுறவு திருமணமான பின் கணவனுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத்திலும் பாலுறவில் சிக்கலை உண்டாக்குகிறது .எனவே தவறு நடக்க கூடாது நடந்தபினர் அதையெண்ணி வருந்திக்கொண்டிருத்தலும் நோயே . நடந்தவற்றை மறந்து புதிய வாழ்வில் தவறு உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் .

முறையாக வாழவேண்டிய வாழ்கையை வீணடித்துக் கொள்ளுவது அறியமையன்றி வேறல்ல எனவே வாழ்வில் யாருமே முதலிரவில் முழுமையான இன்பத்தை பெறவில்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம் முதலில் அச்சமும், தயக்கமும், நடுக்கமும் இயல்பானதே .இதை எதிர்கொண்டு இனிமையான வாழ்கையை துவக்குவதே சிறந்த வாழ்கை .

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...