ஆகஸ்ட் 29, 2011

கோழிக்கறி (chicken ) விசமே




உறவுகளே வணக்கம் நலன் இல்லத்தில் உள்ளத்தில் நலந்தானே .
கடந்த ஆண்டு இதே நாளில் ஒரு ஞயிற்று கிழமையில் உங்களோடு அறிமுகமானேன் . அதுவரை ஏதோ ஒரு சிறிய ஊர்ப்புறத்தில் இருந்து சிறிய நகர்புறத்தில் எமது மருத்துவ நடுவத் தோடு எனது குறுகியஅளவில் பணி இருந்தது அதுவரை இந்த வலைபூ பற்றிய ஒரு விரிந்த தளத்தில் பார்வை இருந்தது இல்லை ஒரு நாளிதழில் வெளிவந்த கட்டுரை மட்டுமே வலைபூ பற்றிய பார்வையை தந்து இருந்தது .

நண்பர் சுகுமாரன் அவர்கள்தான் இந்த வலைபூ விற்கு எம்மை அறிமுகப்படுத்தி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் எமது முதல் இடுகை திருநெல்வேலி மனோன்மணியம் பல்கழகத்தில் வாசித்து அளித்த ஆய்வு கட்டுரையாகும் . இந்த கட்டுரையை தொடர்ந்து ஆறு மணிநேரம் தட்டச்சு செய்து பதிவேற்றினார் .நண்பர் சுகுமார் . அவருக்கு எமது நன்றியை மீண்டும் பதிவு செய்கிறோம் .

எமக்கு கணினியோடு பத்தாண்டுகளுக்கு மேல் தொடர்பு இருந்தாலும் நாய் பெற்ற தங்கம் பழம் போல தூர நின்று அச்சத்தோடு பார்த்துவிட்டு (இதையெல்லாம் எப்ப நாம பயன் படுத்த்போரோமோ தெரிய வில்லையே என ஏங்கி இருந்தவன்.) இந்த இடுகையின் போது தான் கணினியின் மிக அருகில் வந்து அமர்ந்தேன் . இன்னும் கணினியின் முழுமையான செயல் பாடுகள் நான் அறியாத ஒன்று முதலில் எனக்கு பின்னுட்டம் இடவும் தெரிந்து இருக்க வில்லை மீனகத்திற்க்கும் எமது பின்னுட்டம் தங்க்லீசில் தான் இட்டுவந்தேன் பின்னர் சில வலைபூ நண்பர்கள் வழி பின்னுட்டம் இடதெரிந்து கொண்டேன் அந்த அளவில்தான் எனது இன்றைய நாள் வரை இருந்து வருகிறது .

நாம் முன்பே குறிப்பிட்டது மாதிரி எமக்கு பெயரும் புகழும் வரவேண்டும் என்பதற்காக நாம் எழுத தொடங்கவில்லை எமது மொழிபண்பாடு தமிழ கலைகள் போன்றவற்றை இன்றைய சமூகத்திற்கு அறிமுகப் படுத்த வேண்டி இருக்கிறது அதை இன்றய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவே, ஆனால் இது எந்த அளவுக்கு பயன்படுத்த படுகிறது என்பது எம்மால் விளங்கி கொள்ள இயலவில்லை
தமிழர்கள் தங்களின் சொந்த மொழிமீதும் தமது கலைகள் மீதும் மிகப் பெரும்பான்மை பற்று கொண்டு இருக்கவில்லை இது இராயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் மெத்தன போக்குதான் என்றாலும் மாந்த குலத்தின் நோய்களை முறையாக நீக்குகிறது இது அறிவியல் அடிப்படையிலானது என கூவி கூவி அழைத்தாலும் இந்த தமிழர்கள் வருவதாக காணோம் நம்மோடு வாழ்ந்த வள்ளலார் பெருமான் கடைவிரித்தேன் கொள்வாரில்லை ... என வாரி சுருட்டி கொண்டு விட்டதை போல செய்ய வேண்டியே இருக்கிறது . தமிழ் சமூகம் நோயில் வீழ்ந்து கிடைக்கிறது

தமிழர்கள் எப்படி நோயில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என வினவலாம் சிறிய விளக்கம் அதாவது உண்மையான மொழி பற்றாளர்களும் கொள்கை பிடிப்பாளர்களும் வறுமையில் வாட விடுவது தமிழர்கள் வழக்கமாக இருக்கிறது இது இன்று நேற்றல்ல வள்ளுவர் காலம் தொடங்கி நம்மோடு வாழ்ந்து மறைந்த தேவநேய பாவாணர் வரை இதே கதிதான் அதனாலும் மேலும் விண்ணை முட்டும் மற்ற மருத்துவ முறை கட்டிடங்கள் உயர்ந்து இருக்கும் போது தமிழர்கள் நோயாளியாகத்தானே இருப்பார்கள்? இருக்கிறார்கள்.
தமிழ சித்தமருத்துவர்கள் வாடி கிடக்கும் போது நோயில் இருந்து விடுபடுவது சத்தியம் இல்லாத ஒன்று இந்த பார்வையை நாம் கொடுக்க வில்லை என்றால் நானும் பிழை செய்கிறேன் என்று தான் பொருள் எனவேதான் பதிவு செய்தேன்
இந்த சமயத்தில் என்னை ஊக்கு வித்து பின்னுட்டம் இட்டு இன்ட்லி மற்றும் தமிழ்மணம் போன்ற வற்றில் விருப்ப வாக்குகள் அளித்தும் ஊக்குவித்த அனைவரையும் வணங்கி மகிழுகிறேன்.

தமிழன்புடன்
போளூர்தயாநிதி.

கோழிக்கறி (chicken ) விசமே




இன்றைய விரைவு உலகம் எது நல்லது எது கேட்டது என தேடிக்கொண்டு இருப்பதில்லை கிடைத்ததை உண்டு நோயை பெறுகின்றனர். முன்பு கோழிகளின் தேவை நாட்டுப்புறவளர்ப்பு கோழிகள் ஈடு செய்தன இன்று மிகையான தேவையை ஒட்டி அதிக அளவில் வளர்ப்பு கோழிகளை மாமிசத்திற்காக பயன் படுத்தப்படுகிறது இந்த கோழிகள் விரைவாகவும் மிகையான எடையுடனும் இருப்பதற்கு இரசாயணம் கலந்த தீவிணங்கள் போடப்பட்டு வளர்க்கபடுகிறது . இந்த தீவினங்களில் உள்ள கொழுப்பு சத்தில் டயாக்சின் என்ற இரசாயணம் காணப்படுகிறதாம். இது மனிதர்களிடம் புற்று நோயை உண்டாக்கும் தன்மை வாய்ந்தது எனவே இப்படி பட்டதீவினங்களை உண்ணும் கோழி மற்றும் பன்றி போன்ற வற்றை உண்பது அபாயம் நிறைந்தது என செய்திகள் வெளியாகி உள்ளது .
நாள் 10 .01 .2011 பக்கம் 7 ல் தமிழ் முரசு வேலூர் பாதிப்பு .

தேனும் விசமா?

இயற்கையான தேனின் மருத்துவ குணத்தை சொன்னால் நாம் பலநாட்கள் இந்த இடுகையை தொடர வேண்டி இருக்கும் .அவ்வளவு சிறப்பு வாய்ந்த உணவு தேன் அதுகூட இன்று நஞ்சாக மாறிவிட்டது . இயற்கையான தேனை நீண்ட நாள்கள் பாதுகாப்பாக இருக்க அதில் எரித்ரோமைசின் என்ற மருந்து பொருளை சேர்க்க படுகிறதாம் இது நச்சு தன்மை வய்ந்தத்து என கருத்தபடுகிறது என ஒரு இதழ் கூறுகிறது
அனிதா நாராயணன் என்ற அறிவியலாளர் முன் காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளில் நச்சு உள்ளது என கண்டு ஆய்வு செய்து பரபரப்பை உண்டாக்கிய அதே அறிவயலாளர் தான் இதையும் நமக்கு ஆய்வு செய்து பதிவு செய்து இருக்கிறார்.

ஐஸ் கிரீம் பதிப்புகள்

இந்த ஐஸ் கிரீம்களில் அடங்கியுள்ள சர்க்கரை பலநோய்களை வர வழைக்கும் காரணியாகிறது .மூகமையாக நீரிழிவு (சர்க்கரை நோய் ) உண்டாகிறது அதிக இரத்த அழுத்தத்திற்கு காரணமாகிறது அதிகமான சர்க்கரையை உடைய ஐஸகிரீம் அருந்தும் போது அதை செறிக்க உடனடியாக அதிக அளவு
இன்சுலின் சுரக்கிறது அதனால் உடலில் திடீரென்று குளுக்கோசு அளவு குறைகிறது இதன் வெளிப்பாடாக தலைவலி தோன்றுகிறது
(நீங்கள் படிக்க வேண்டிய மருத்துவ நூல் ஆக்கம் டாக்டர் பூ .பழனியப்பன் பக்கம் 14 )
மிகையாக அதே நேரம் விரைவாக உண்பது இந்த மீதூண் காலத்தில் இந்த வகை ஐஸ்கிரீம் மிகையாக எடுத்து கொள்வது என எனமது உணவு பழக்கத்தை முறைபடுத்தி நோயில் இருந்து விடுபடுவோம் .

சித்தமருத்துவம் காப்போம் நோய் வென்று நீடு வாழ்வோம்
.
அன்புஉறவுகளே இராஜீவ் காந்தி மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டு சாந்தன் ,முருகன் ,பேரறிவாளன் ஆகியோரின் மரணத்தை உறுதி செய்து செப்டம்பர் 9 என நாள் குறித்து உள்ளது .இதில் பல்வேறு அரசியல் உள்ளதாக கூறப்படுகிறது . உலக நாடுகள் எல்லாம் மரண தண்டனையை நீக்கி விட்ட போதிலும் இந்தியா விடப்பிடியாக மரண தண்டனையை கையாண்டு வருகிறது இது மனித குலத்திற்கே இழுக்கானது இதற்காக நமது எதிர்ப்பை மனிதாபிமானத்துடன் காட்டுவோம் .
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன.கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் ஒழுங்கை காரணம்காட்டி நாளையோ மறுநாளோகூட தண்டனை யை நிறைவேற்ற ஆளும்தரப்பு அவசரம் காட்டுகின்றது.
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ...அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது.நாம் ஒருகணமும் தாமதிக்காமல் உடனடியாக செயற்படவேண்டும். இந்த தூக்கு தண்டனையை நிறுத்தும் சட்ட அதிகாரம் உள்ளவர்களிடமும், தூக்குதண்டனைக்கு எதிரான சர்வதேச நிறுவனங்களிடமும் இப்போதே நீதிகேட்டு மின்னஞ்சல்களையும், தகவல்களையும் அனுப்புவோம்.சாத்தியமான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி இந்த மூவரின் தூக்குதண்டனையை நிறுத்த இப்போதே முயல ஆரம்பிப்போம்.....
Send E-mail to Indian Government:
------------------------------
-------------

Her Excellency Smt. Pratibha Devisingh Patil
President of India
presidentofindia@rb.nic.in

Sri M.Hamid Ansari
Vice-President of India
vpindia@nic.in

His Excellency Mr. Manmohan Singh
Prime Minister of India
manmohansingh@sansad.nic.in

Mr. P.CHIDAMBARAM
Home Minister of India
hm@nic.in

Hon'ble Mr. Justice S.H. Kapadia
Supreme Court of India
supremecourt@nic.in

Smt.Sonia Gandhi
soniagandhi@sansad.nic.in
President, Indian National Congress

Shri L.K. Advani
Leader of Opposition in the Lok Sabha
advanilk@sansad.nic.in

Smt.Meira Kumar
speakerloksabha@sansad.nic.in
Hon’ble Lok Sabha Speaker

His Excellency Thiru Surjit Singh Barnala
Governor of Tamil Nadu
govsec@tn.nic.in

Dr. J. Jayalalitha
Chief Minister of the state of Tamil Nadu
cmcell@tn.gov.in

Hon. Justice Shri K.G. Balakrishnan
National Human Rights Commission of India
chairnhrc@nic.in

Send E-mail to Intl. Organisations against Death
-----------------------------------------------------------
Penalty:
---------

இந்தியஅரசே
மரண தண்டனை சட்டப்பிரிவை உடனே இரத்து செய்.
இப்பது உள்ள மரண தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்று.


.

More than a Blog Aggregator

ஆகஸ்ட் 22, 2011

ஆயுளை வளர்க்கும் (Oil pulling ) எண்ணெய் கொப்பளித்தல்





ஆயுளை நீட்டிக்கும் சர்வரோக நோய் நிவாரணி எங்கும் இல்லை அனால் நாம் நினைத்தால் நோயில் இருந்து விடுபட நாம் முன்னோர் பால வியக்கத்தக்க கலைகளை நம்முன் கொடையாக வழங்கி சென்று உள்ளார்கள் அதை இன்று பல மேலை நாடுகள் ஆய்வுகள் என்ற பெயரில் தமதாக்கி கொண்டு வருகிறது தமிழர்கள் எப்போது விழிக்க போகிறார்கள் என்றுதான் புரிய வில்லை . சரி செய்திக்கு வருவோம்.இந்த எண்ணெய் கொப்பளித்தல் நமது முன்னோர் தொண்டைபகுதி( கண்ட ) தூய்மையாக்கல் என்ற பெயரில் வழங்கி வந்த ஒரு முறையாகும் .

எண்ணெய் கொப்பளித்தால்

இந்த எண்ணெய் கொப்பளித்தளுக்கும் நோய் நீங்குதளுக்கும் என்ன ஒற்றுமை என வினவாலாம் பல்வேறு வகையில் மனிதனின் நோய்களை நீக்கு கிறது என்பதை மேலை நாடுகள் தமது ஆய்வுகளின் வழி காட்டுகிறது இதை நாம் முறையாக பழகி நாளும் செய்து வந்தால் பல்வேறு நோயில் இருந்து விடுபடலாம் என உறுதியாக கூறலாம்.

எண்ணெய் கொப்பளித்தால் செயல்முறை


தூய்மையான நல்லெண்ணெய் இரண்டு தேக்கரண்டி அளவு காலையில் வெறும் வயிற்றில் வாயில் ஊற்றி வாயின் எல்லா பகுதிகளுக்கும் செல்கிற மாதிரி குறைந்தது இருபது இருபத்தைந்து நிமிடங்கள் தொடர்ந்து கொப்பளித்து கொண்டே இருக்க வேண்டும்.இந்த எண்ணெய் வெண்மை நிறம் வருகிற வரையில் கொப்பளிக்க வேண்டும் மஞ்சளாக இருக்க கூடாது அதாவது நாம் கூறும் இந்த இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்கள் கொப்பளித்தால் நாம் கூறும் வெண்மை நிறத்தை நமது உமிழ்நீர் ஆக்கிவிடும் .

இந்த வெண்மை நிறம் வந்தததும் உமிழ்ந்து விட்டு வாயை நன்குதண்ணீர் கொண்டு தூய்மை செய்து கொண்டு பின்னர் பல் துலக்கலாம் இந்த செயல் செய்யும் பொது நமது தொண்டைக்குழியில் தங்கி இருக்கும் அழுக்கு களும் தேவையில்லாத நஞ்சு களும் வெளியேறுவதாக ஆய்வில் தெரிவிக்கின்றனர்.

எண்ணெய் கொப்பளிப்ப்பதால் உண்டாகும் சிறப்புகள் .

இந்த காலங்களில் எந்த உணவு கட்டுபடோ வேறு ஏதும் செய்து கொள்ளத் தேவையில்லை முறையான உணவு திட்டத்தை பழகினால் ஏன் நோய் வரப்போகிறது என நீங்கள் கேட்பது நமக்கு புரிகிறது இப்படி செய்வதால் எந்த பின் விளைவும் இல்லை என்பது இனிப்பான செய்தி சிலர் எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை (இப்படி பட்டவர்கள் காலையில் கழிவறைக்கு செல்கையில் செய்யலாமே நான் மாலையில் தான் மலம் கழிக்கிறேன் என்றால் நாம் பொறுப்பல்ல )என்பார்கள் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள் அதாவது வேறு யாருக்காகவோ செய்வது போல இருக்கிறார்கள் அவர்கள் அல்ல நமதுஇலக்கு நோயின்றி இருக்க வேண்டும் என எண்ணுகிறவர்கள் நமது இலக்கு. இந்த எண்ணெய் கொப்பளிப்ப்பதால் பல்வேறு நோய்கள் நீங்குவத மருத்துவ வல்லுனர்கள் கூறு கின்றனர் .புற்று நோய் கூட கட்டு படுகிறது என்கிறார்கள்

.எண்ணெய் கொப்பளித்தல் (Oil pulling ) செய்வாதால்

நல்ல உறக்கம் உண்டாகிறது
பற்கள் வெண்மை நிறமடைகிறது.
வாய் புண் நீங்குகிறது.
வாயு தொந்தரவு நீங்குகிறது.
தசை நோய்கள் விலகுகிறது
மார்பு நோய் நீங்கு கிறது.
நெஞ்சக தடுமன் (சளி )நீங்குகிறது
இரைப்பிருமல் நீங்குகிறது .
முதுகு வலி குறைகிறது .
இதய நோய்கள் நீங்குகிறது .
பல் நோய்கள் விலகுகிறது
காதுநோய்கள் விலகுகிறது
கண் நோய்கள் விலகுகிறது
குடல் தொடர்பான நோய்கள் விலகுகிறது
நீண்டகால இரத்த நோய்கள் விலகுகிறது.
மூச்சு குழல் நோய்கள் விலகுகிறது
நரம்பு நோய்கள் விலகுகிறது
தோல் நோய்கள் விலகுகிறது
கழுத்து பிடிப்பு நோய்கள் விலகுகிறது
மூல நோய்கள் விலகுகிறது
காச நோய்கள் விலகுகிறது
சிறுநீரகம் தொடர்பான சிக்கல் கள் நீங்குகிறது .
பக்கவாத நோய் விலகுகிறது.
வலிப்பு நோய்கள் விலகுகிறது
புற்று நோய் கட்டிகள் ,மாதவிடாய்
ஒழுங்கு இல்லாமை நோய்கள் விலகுகிறது.
இப்படி பலவேறு நோய்கள் விலகு கிறது இது அறிவியல் அடிப்படையிலானது தான் எனவே முறைப்படி இதை செய்து நோய் வெல்வோம் .

இந்திய அரசே தமிழக மீனவர்களை துன்புறுத்தும் சிங்களவன் மீது நடவடிக்கை எடு இல்லையென்றால் தமிழ மீனவர்களுக்கு, ( சிங்களவனுக்கு கொடுத்த கருவிகளை )தமிழக மீனவர்களுக்கும் கொடு .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்


More than a Blog Aggregator

ஆகஸ்ட் 15, 2011

மார்பகம் பெரிதாக ( Breast Develop )



கடந்த வாரம் வெளிவந்த ஒரு வார இதழின் கேள்வி பதில் பகுதியில் வெளிவந்த வினா ஒன்று

நான் கல்லுரி மாணவி என் அகவை 20 உயரம் 150 செமி எடை 50 கிலோ என் மார்பகம் சிறியதாக இருக்கிறது மார்பக வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் இதற்காக உணவு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா ?இப்படியாக வினா தொடுத்து இருந்தார் .

இது ஒரு கல்லுரி மாணவியின் வினா. இப்படியான வினாக்கள் படித்தவர்களிடம் இருந்து தயக்கமின்றி வருகிறது ஆனால் பெரும்பாலும் நோய்களைப்பற்றி மிகையாக சிந்தப்பதாக தெரியவில்லை நாம் குறையாக கூறவில்லை இருந்தாலும் மார்பகம் என்பது தாய்மையின் உயர்ந்த ஒரு உடல் உறுப்பு இதே மாதிரியான வினாக்கள் ஆண்களிடமும் இருந்து வருகிறது அதாவது என் ஆண்குறி சிறியதாக இருக்கிறது இதற்க்கு என்ன செய்யவ்ண்டும்? என்பதுமாதிரியான வினாக்கள்தான்

உடல் உறுப்புகள் ஆண்குறி சிறியதை பெரியதக்குகிறேன் பெண்களின் மார்பகத்தை பெரியதாக்கு கிறேன் என தமிழ இதழ் களில் மிகுதியான விளம்பரங்கள் வருகின்றன இதையும் .கண்டு பெரும்பான்மை மக்கள் தங்களின் அறியாமையால் தேடவைக்கிறது
பெரும்பான்மை படிக்காத வர்களிடம் இதுமாதிர்யான வினாக்கள் வருவதில்லை வாழ்வில் மகிழ்வுடன் பெரும்பாலும் இருக்கின்றனர் இவர்க்ளைடம் கடுமையான உழைப்பு இருப்பதால் இவர்களின் தேவை இருப்பதை கொண்டு சிறப்புடன் வழவைக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது .

மனித உடல் அமைப்பு நாம் உண்ணும் உணவு செய்கிற பயிற்சிகள் வாழ்கை நடைமுறை போன்றவற்றின் அடிப்படையிலும் மரபியல் கூறுகள் அடிப்படையிலும் பெரியதோ அல்லது சிறியதோ
தோற்றம் அளிக்கிறது . இந்த உறுப்புகளை பெரியாதாக்கும் எந்த மருந்துகளும் பெரும்பாலும் மாற்றத்தை உண்டாக்குவதில்லை ஆனால் சில முறையான பயிற்சிகளை பழக்குவத்தின் மூலம் நம் உடல் அமைப்பை மாற்றி கொள்ளலாம். அதற்க்கு அரிதின் முயன்று பயிற்ச்சி செய்ய வேண்டும் முறையான உணவு திட்டத்தை கைகொள்ள வேண்டும் .
பெண்களை பொறுத்தவரை அவர்களின் பூப்புக்கு பின்னர் அவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் அடிப்படியிலேயே உடலுறுப்புகள் உருவாகிறது . ஈஸ்ரோஜென் ஹார்மோன் சுரப்பு சிறப்பாக இருக்கையில் அவர்களின் உடலமைப்பு நல்ல கட்டுடலாக மாற்றி இந்த உலகிற்கு அறிவிக்கிறது

உடலுருப்புகளை பொறுத்தவரை முறையான உணவு திட்டத்தில் இருந்து தோற்றம் கொள்ளுகிறது . முன்பெல்லாம் பெண்களின் பூப்பு கலத்திக்கு முன்பாகவே பெண்களின் தாய்மைகருதி அவர்களை ஆயத்தபடுத்துவார்கள் . இந்த விரைவு உலகத்தில் எல்லாவற்றையும் மருந்தில் இருந்து தொடங்கு கிறார்கள் . பழங்காலங்களில் பெண்களுக்கு அவர்களின் எதிர்கால பெண்மையை ஊக்கு விக்கும் விதமாக புரத உணவுகளையும் கொழுப்பு உணவுகளையும் முறையாக வழங்கி வந்தனர் அவர்கள் பத்து குழந்தைகள் பெற்றெடுத்தும் இளைமை குறையாமல் நீண்ட நாள் வாழ்ந்தனர் இன்று அவ்வாறு இல்லாமைக்கு முறையில்லாத உணவு பழக்கமே காரணம் எனலாம்.

தீர்வுகள் .

பெண்களின் ஏழு அகவையில் இருந்தே பெண்மையை போற்றும் உணவுமுறைகளை வழங்க கற்க வேண்டும் . தரமான தாவர , விலங்கு புரதங்களை உண்ண பழக வேண்டும் .உளுந்து ,பச்சைபயறு ,சோயா , போன்ற பயறுவகைகள் பெண்மையை வளர்க்க கூடியன .கீரைகள் மற்றும் சரிவிகித உணவுகளை எடுக்கும் போது இந்த சிக்கல் தோன்றுவதில்லை .முறையான கொழுப்பு உணவுகளை முறையாக கொடுக்க வேண்டும் இல்லையெனில் மிகவும் குறித்த அகவையிலேயே பெண்குழந்தைகள் பூப்பு எய்தி விடுவார்கள் .ஆசனங்களில் சர்வாங்காசனம் பெண்களின் பெண்மையை வளர்க்க கூடியது .இவற்றை முறைப்படி பழகுக .நேரே நின்று கையை மேலே உயர்த்தி மேலும் கீழுமாக சீரான வேகத்தில் ஐந்து முதல் பத்து எண்ணிகையில் இரண்டு கைகளையும் தனித்தனியே சுற்றுக.இரண்டு உள்ளங்கைகளையும் தோள்மீது வைத்து கொண்டு முன்னும் பின்னும் இயக்குக . அதாவது வாயற்படி அருகில் நின்று வயற்படியின் மீது இரண்டு கைகளையும் வைத்து கொண்டு முன்னும் பின்னும் உடலை இயக்குக இந்த பயிற்சியினால் நல்ல பலனை எதிபார்க்கலாம். அதிமதுரம் என்ற மருந்தை வாங்கி வந்து தூளாக்கி துணியில் வடிகட்டி தாய்பாலில் குழைத்து மார்பகத்தில் பூசி சற்று பிடித்துவிட நல்ல பலனை எதிர்பார்கலாம் இந்த மருந்தை இரவில் பூசி காலையில் குளிப்பது சிறந்தது . பாலியல் தொடர்பான குறைபாடுகளை மட்டும் அல்லது மனிதனின் எல்லா நோய்களையும் நீக்க வல்லன நம் சீரிய சித்த மருத்துவம் .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .

நாம் முன்னமே குறிப்பிட்டபடி பார்த்தீனியம் என்ற நச்சு செடியைமுற்றாக நீக்கவேண்டும் என எழுதி இருந்தோம் .கடந்த வாரத்தில் இதை முற்றாக நீக்கப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்த மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி களையும் பாராட்டுகளையும் கூறி வணங்கி மகிழுகிறோம் .

அதேவேளை ஈழம் தொடர்பான முதல்வரின் நடவடிக்கை களை கொச்சை படுத்திய இனவெறி சிங்களனை வன்மையாக கண்டிக்கிறோம் .
More than a Blog Aggregator

ஆகஸ்ட் 07, 2011

கணினி பணியும் கண் பாதுகாப்பும் (மென் பொருள் துறையினர் நலன் கருதி )




இன்றைய அறிவியல் உலகில் கணினி, உணவு, உடை, போல மனித உறுப்பு ஆகி போனது கணினியை தவிர்க்க இயலாத படியாகி விட்டது . ஆனால் அதை பயன்படுத்துவதால் பல்வேறு சிக்கல்கள் வந்து விடுகிறதே என கவலைப்படுகிறவர்கள் மிகுதியாக இருக்கிறனர் அதில் கண்களுக்கு உண்டாகும் சிக்கலும் மிகையாக இருக்கிறது என்பது உண்மை .

உடலோம்பளும் கண் பாதுகாப்பும்

முன்பே கண் பற்றிய தனியான இடுகையில் பல செய்திகளை குறிப்பிட்டு இருந்தேன் . இருப்பினும் இதில் சில செய்திகளை பதிவு செய்திருக்கிறேன் . தேவையை ஒட்டியே இந்த செய்தி. மனித உடல் பெரும்பாலும் விரைவில் கெடுவதில்லை . இயன்றவரை தன்னை முழுமையாக அர்பணித்து கொள்ளவே விரும்புகிறது நமது உடலுறுப்புகள் . இருப்பினும் தொடர்ந்து நாம் அவற்றிற்கு முறையான பயிற்ச்சி வழங்காமையால் மனிதனுக்கு கேடுகள் உண்டாகிறது இந்த கேட்டில் இருந்து மனிதன் தப்பித்து கொள்ள விரும்பின் எல்லா பிணிகளில் இருந்தும் தன்னை பாது காத்துக் கொள்ளலாம். எனவேதான்
முறையான வழிமுறைக்கு வருவதை பற்றி சிந்திப்போம் .

இன்றைய முறையல்லாத உணவு பழக்கம் முறை இல்லாத வாழ்க்கைமுறை போன்றவற்றின் காரணமாக கண் தொடர்பான பிணி தோற்றம் கொள்ளுகிறது .தாய் கருவுற்றிருக்கும் போது புளி /புளிப்பு சேர்ந்த உணவுகள் மிகையாக எடுக்கும் போது குழந்தையின் . கண் பார்வையை அது பாதிப்பதாக சொல்லப்படுகிறது . இதுமாதிரி உணவுகளை நீக்கி விடலாம் அல்லவா?

பார்வை குறைபாடு நோயா

மனித உடல் நோய்க்கு காரணமாக வாழ்க்கைமுறை சூழலும் ஒரு காரணம் என குறிப்பிட்டு இருந்தோம் . இரவில் மிகையாக கண் விழித்தல் மயக்கப் பொருட்களான மது ,புகை மிகையாக எடுத்தல் உப்பு உணவில் மிகையாக எடுத்தல் எல்லா நேரங்களிளுக் மிகையாக கவலையுடன் இருத்தால் போன்ற காரணங்களும் நோய்க்கு காரணமாக இருக்கிறது.

இவை எல்லா வற்றையும் விட சத்து பற்றாக்குறை பற்றி நம் மக்கள் கவலை கொள்ளுவதே இல்லை . பெரும்பாலும் நோய்களுக்கு சத்து பற்றாக்குறையும் ஒரு மூகாமையான காரணமாக இருக்கிறது . எல்லா உடல் உறுப்புகளுக்கும் தனியான சத்து தேவையிருக்கிறது இந்த தேவையை அறிந்து இட்டு நிரப்பாமையினால் நோய் நம்மோடு ஒட்டிக்கொள்ளுகிறது.

கண் பாதுகாப்புகள்

எந்த ஒரு பொருளையும் மிகையாக பயன் படுத்தும் போது அது கேடு அடையும் தானே? கண்களை கடினமாக வேலை வாங்கினால் விரைந்து அது ஓய்வு எடுத்து கொள்ளுகிறது . கடினமாக வேலை வாங்கும் போது அதை முறையாக பழக்கினால் அதனால் வரும் கேடுகளை நீக்கி கொள்ள லாம்

கண்ணிற்கும் கணினிக்குமான இடைவெளியை முறைபடுத்துக .
கண்ணிற்கு தொடர்ந்து களைப்பு தரும் வேலையை குறைத்து கொள்க .
சிவப்பு வண்ணங்களை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்க்கவும்.
கண்களுக்கு நாளும் முறையான பயிற்ச்சி தருக அதாவது அதிகாலையில் வயிற்றை தூய்மை செய்து கொண்டபின் நேரே நின்று இடம் ,வலமாக முறையே கழுத்தை திருப்பும் ஆசன பயிற்ச்சி செய்க . பின்னர் நேரே நின்று மூஞ்சியை திருப்பாமலே கண்களை மட்டும் எல்லா பக்கங்களையும் பார்க்கும் படி சுழற்றுக . தலை அசைய கூடாது கண்களை மட்டுமே சுற்ற வேண்டும் .முறையே மூன்று ,மூன்று முறை மாற்றி மாற்றி செய்க .
உணவில் முருங்கை கீரை , சிறுகீரை, குறிப்பாக கண்களை பலப்படுத்தும் பொன்னாங்கண்ணி கீரையை நாளும் உணவில் பயன்படுத்துக .கேரட் முறைப்படி பயன்படுத்துக.
தலைக்கு நாளும் திரிபலா என அழைக்கப்படும் நெல்லிக்காய் ,தான்றிக்காய் ,கடுக்காய் சேர்ந்த எண்ணெய் தலைக்கு தடவி குளிக்க செய்க.
பகல் உணவிற்கு பின் பத்து நிமிடம் கருப்பு துணி கட்டி ஓய்வு எடுக்கவும் தூங்க கூடாது தூங்கினால் தீங்கில்லை பகலுறக்கம் கூடாது என்பது சித்தமருத்துவ விதி .
இவற்றை முறைப்படி பழக கண் இரவிலும் உங்களுக்கு பணி செய்ய காத்திருக்கும் .
நோய் வெல்வோம் சித்த மருத்துவம் காப்போம் More than a Blog Aggregator

ஆகஸ்ட் 01, 2011

மண்சோறும் குழந்தைப் பேறும் (இளம் பெண் களின் கருப்பைக் கோளாறுகள் )




இப்போதெல்லாம் குழந்தைவரம் வேண்டி பெண்கள் கடுந்தவம் செய்யவேண்டி இருக்கிறது .
இவை எல்லாம் முறையல்லாத உணவு பழக்கத்தினால் அன்றி வேறல்ல. முறையில்லாத நடவடிக்கையும் கூட .பெண்களுக்கு உண்டாகும் பெரும்பான்மை கருப்பை சார்ந்த குற்றங்கள் எளிதில் தீர்க்க கூடியன . ஆனால் ஆண்களின் சிக்கல் சற்று கடுமையாக இருக்கிறது . ஒருவீட்டில் குழந்தைப்பேறு இல்லை என்றால் அதற்க்கு மூகாமையான காரணம் பெண்ஆகிவிடுகிறாள். இந்த முறையற்ற குமுகம் ஆணாதிக்க குமுகம் பெண்ணை பிள்ளை பேறும் பொறியாக (இயந்திரமாக )பார்க்கிறது . குழந்தை பேரு இல்லை என்றால் இன்னொரு திருமணம் ஆணுக்கு ஆனால் ஆண் குழந்தை பெற தகுதி இல்லாதவன் என்ற நிலையில் பெண்கள் வேறு திருமணத்தை நாடுவதில்லை.

கருப்பை சார்ந்த குறைபாடுகள் .

வெப்ப நாடுகளில் பெண்கள் பாலியல் சார்ந்த பல்வேறு நோய்களுடனே காலத்தை கடத்த வேண்டியுள்ளது . முறையான உணவுத்திட்டம் பற்றிய கோரிக்கைகளை முறையில்லாத மருத்துவ முறை களிடம் வைக்கபடுகிறது . பாவம் மக்கள் ஆங்கிலேய அடிமை ஆட்சிமுறை நம்மை மெக்கலன் சொன்னமாதிரியே அவனுக்கு அடிமையாகவே ஆக்கி விட்டது . இந்த பெண்மைக்
குறைபாடுகளை முறையாக ஆய்ந்த நாம் அறிவு சார்ந்த முன்னவர்களான சித்தர்கள் பருண்மையாக ஆய்வு செய்து மக்களுக்கு கொடையாக வழங்கி இருக்கிறார்கள் .
1 .பெண்களுக்கு கருக்குழி விளக்கமற்று பாசு படிந்து இருந்தாலும்.
2 .கருக்குழி வளி மிகுந்து இருந்தாலும் .
3 .கருக்குழாயில் சதை வளர்ந்து இருந்தாலும்.
4 .கருக்குழையில் பூச்சிகள் இருந்தாலும்.
5 .கருக்குழாயில் இரத்தம் கட்டி இருந்தாலும்.
6 .கருக்குழாயில் தசை திரண்டு மதத்திருந்தலும்
கருக்குழாய் உள்ளே விந்தணுக்கள் செல்லாது . என பருண்மையாக ஆய்வு செய்து இருக்கிறார்கள் . இவை களுக்கு முறையே தனியே ஒவ் ஒன்றக்கும். தனியான குறி குணங்களும் தனியான மருத்துவமும் கூறப்பட்டு உள்ளது .முறையான மருத்துவர் எந்த நோய் பற்றி இருக்கிறது என கண்டறிந்து நோயில் இருந்து விடுவிப்பார் .

மண்சோறு

இந்த சிக்கலுக்கு மண் சோறு எங்ஙனம் தீர்வாக இருக்க முடியும் ? இதுவும் அறிவியல் பார்வை கொண்டது தான் அதாவது முறையாக எரியோம்பல் (ஆசனப்பயிற்சி ) செய்ய கூறினால் எனக்கு வேலை இருக்கிறது செய்ய இயலாது என வாய் கூசாமல் கூறும் தாய் குளங்கள் இப்படி கண்மூடித்தனமான செய்கை களை கூறினால் ஏற்பார்கள் என்பதால் இப்படி செய்யப்பட்டதாகும்.
இந்த மண்சோறு அடிப்படையில்
மகா முத்ரா என்ற ஆசனம் ஆகும் இந்த ஆசனம் செய்வதால் பெண்களின் கருப்பை குற்றங்கள் பெரும்பான்மை தீரும் . எனவே இன்றைய இளம் பெண்கள் இந்த மகாமுத்தர ஆசனத்தை நாளும் பழகி வந்தால் கருப்பை குறைபாடுகள் தீரும் . அவற்றோடு ஜானு காசியாசனம் என்ற ஆசனங்களை முறைப்படி செய்து வரலாம் . இவற்றோடு கருப்பையை வெப்பம் அடைய செய்யும் காரம் ,புளி, தள்ளி எள் நெய் குளியல் செய்து கருப்பை பலமடையும் குமரி சேர்ந்த மருந்து களை எடுத்துவர நல்ல பலனை எதிர்பார்க்கலாம் குழந்தைபேறு எளிதில் கிட்டும் அதேவேளை காபின், கோக் போன்றவை சேர்ந்த மயக்கப் பொருட்களை நீக்க வேண்டியது தேவையாகும்.

நோய் வெல்வோம் சித்த மருத்துவம் காப்போம் .

முன்னர் குறிப்பிட்ட மாதிரி நாம் நோயில்லாத குழந்தைபேறு பற்றி இந்த இடுகை செய்ய எண்ணினோம் . மண் சோறு பற்றிய செய்தி நாளிதழ் களில் இருந்தது நம் கண்ணில் பட்டுவிட இந்த இடுகை பதிவிட வேண்டிய தாயிற்று .


வினா தொடுத்தமைக்கு உளம் கனிந்த பாராட்டுகள் .அடிப்படியில் நான்தான் விவரமாக எழுதி இருக்கவேண்டும் ஐயம் தெளிய வைப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும் என கருதுகிறவன் . இருந்தாலும் விரவு கருதி விவரமாக சொல்லவில்லை பிழைக்கு பொறுத்தருள்க .

சித்தமருத்துவம் அடிப்படையில் அறிவியல் கொண்டது என தொடர்ந்து பதிவு செய்துவருகிறேன் .அந்தவகையில் சித்தர்கள் மாந்தர்களின் உடற்கூரை நன்குஆய்வு செய்து மருந்துகளையும் மருத்துவ் முறைகளையும் கொடையாக வழங்கினர்கள். இந்த மகா முத்ரா ஆசன பயிற்சி வஜ்ராசன நிலையில் அமர்ந்து பின்னர் ஸ்லாமியர்கள் தொழுகை நடத்துகிறார்களே அதுமாதிரி செய்கிற ஆசன பயிற்சிதான் மகா முத்தரா என்ற ஆசனம் செய்கிற முறையாகும் . மண்சோறு சடங்கில் இதே நிலையில் பெண்கள் கீழே மண்தரையில் / உணவை வைத்து விட்டு கையில் எடுத்து உணவு உண்ணாமல் வஜ்ஜிரசன்னா நிலையில் அப்படியே குனிந்து வாயினால் உண்பதாகும் . இதுதான் குறிப்பிட இந்த மகா முத்ரா ஆசனத்தை முறைப்படி பழக வேண்டும் என்கிறோம் . பெண்களுக்கு பெரும்பாலும் கருப்பை முறுக்கி கொள்ளுதல் போன்ற கருப்பையின் உள்பகுதியில் நுட்பமாக உண்டாகும் குற்றங்களை இந்த ஆசனம் நீக்குகிறது என்பது உண்மை .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...