டிசம்பர் 27, 2011

வயிற்று பூச்சிகள் தொந்தந்தரவு ஏன் ? .
        இப்போது பலர் வயிற்று பூச்சி தொந்தரவோடு வருகிறார்கள் . இது எப்படி வருகிறது ஏன் வருகிறது எப்படி தீர்ப்பது என மிகப் பெரிய வினாக்குறியோடு வருகிறார்கள் . இது மிகப் பெரிய தீர்க்க இயலாத சிக்கலோ அல்லது மிகப் பெரிய நோயோ அல்ல .இந்த சிக்கலுக்கு ஆளாகாத வர்களே இல்லை எனலாம் இதற்க்கு பல விதமான மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள் . இதனால் வயிற்றில் நன்மை செய்யும் பாக்ட்டீரீயாக்களும் மரித்துப் போகிறது என்பது அனைவரு அறிந்துகொள்ள வேண்டிய செய்தியாகும் .

இன்றய நுகர்வு பண்பாடு எப்படி வேண்டுமானாலும் பொருளீட்டலாம் எதைவேண்டுமானாலும் தின்று தீர்க்கலாம் என வந்தாகிவிட்டது . இதனால் முறையில்லாத சில கேடுகள் மனிதனுக்கு வந்து சேருகிறது .உணவு பழக்கம் என்பது உடலை வளர்ப்பதற்கும் நோயின்றி வாழ்வதற்கும் என இருந்த காலம் போய் நாவை அடக்கமால் கண்டபடி தின்று நோவை பெற்றுக் கொள்கிறார்கள் . உணவு எல்லா சுவைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும் .கசப்பு, துவர்ப்பு, காரம் , இனிப்பு ,உப்பு ,புளிப்பு என அனைத்தையும் முறையாக எடுத்துக் கொண்டால பொரும்பாலும் நோய் கொஞ்சம் தள்ளியே நிற்கும் . அப்படி இல்லமால் வெறுமனே இனிப்பையும் புளிப்பையும் காரத்தையும் எடுக்கும் பலர்கசப்பையும் , துவர்ப்பையும் தள்ளிவிடு கிறார்கள் இதுதான் நோய்க்கு அடிப்படை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . இந்த முறையில்லாத இனிப்பும் சில சுவைகள் மட்டுமே வயிற்றில் பூச்சிகள் வளர காரணமாகி விடுகிறது . 

இந்த வயிற்று பூச்சிகள் சிலசுவைகளுக்கு அச்சப்பட்டு தள்ளியே நிற்கும் அதுதான் கசப்பு இதை நேரடியாக இல்லாமலும் சில காய்கள் மூலம் பெறலாம் .பாகல், சுண்டை , வேப்பம் பூ , வாழைப்பூ , தேங்காய் போன்றவை இந்த வயிற்று பூச்சிகளை நீக்க கூடியது நாளும் தேங்காயை வெறும் வயிற்றில் உண்டுவர பூச்சி தொந்தரவு நீங்கும் . எனவே மேற்கண்ட இந்த சுவைகளை முறையாக எடுத்துவர வயிற்று பூச்சிகள் இல்லாமல் நீடுவழ முடியும் .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் 

        எதிர் வரும்  தமிழர்  புத்தாண்டு  மட்டும்  பொங்கல்  திருநாள்  முன்னிட்டு  எங்களின் ஊர் பகுதிகளில்  

தமிழறிஞ்சர்கள் 
தமிழ  கலைகள் 
தமிழ  விளையாட்டுகள்
பேச்சு போட்டிகள் 
பா வரங்கம் 
கட்டுரைபோட்டி 
 என  நடத்துகிறோம்  வெளிநாட்டு தமிழர்கள் இதே வடிவத்தை  தங்களின் இருப்பிடங்களில்  செய்யலாம் தமிழ  நாட்டிலும்  எல்லா இடங்களிலும்  இப்படி  பண்பாடு  விழாக்களை  நடத்தலாமே  ?









More than a Blog Aggregator

டிசம்பர் 19, 2011

நமக்குத்தேவை வலி நீக்கும் மருந்தா வலி நிவாரண மருந்தா ?
நமது உண்மையான நோக்கம் நோயில்லாத குமுகத்தை படைப்பது என்பதால் அதற்க்கான கருத்தாக்கத்தை உண்டாக்குவது முறைஎன்பதால் அது குறித்து கொஞ்சம் சிந்திப்போம் .இப்போது உடலில் அல்லது தலைவலி , அல்லது மூட்டுவலி என வைத்துக் கொள்வோம் இதற்க்கு நேரான மருந்து என்ன ? வலி நிவாரண மருந்தா அல்லது வலியை நீக்கும் மருந்தா இதை நாம் கண்டு பிடித்து விட்டால் எது சரியான மருந்து, முறையான மருந்து என கண்டறிந்துவிடுவோம் . இதில் தானே சிக்கல் நமக்கு . மூட்டு வலி என வைத்துக் கொள்வோம் , இந்த மூட்டுவலி அல்லது தலைவலி இதற்க்கு குறிப்பிட்ட பகுதிகளில் உண்டாகும் வலியை நீக்க ( குறிப்பிட்ட பகுதில் உள்ள நரம்பு மண்டலத்தை போதையூட்டி நோய் நீக்குவது மருந்து வீரியம் குறைந்ததும் நோய் மீண்டும் வரும் ) மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் கொடுக்கப் படுகிறது இது தற்காலிக நிவாரணத்தை கொடுக்கிறது . இந்த மருந்துகள் முற்றாக குறிப்பிட்ட வலியை நீக்குவதில்லை. தற்காலிக தீர்வை தருகிறது இந்த மருந்துகள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது நோய் கண்டவர் நோயிலிருந்து விடுதலை அடைவார் ஆனால் மருந்தை நிறுத்தியதும் முன்பைவிட நோயினால் மிகையாக துன்பப் படுவார் . ஹோமியோபதி மருத்துவத்தை கண்ட சமுவேல் ஆனிமன் அவர்கள் ஹோமியோபதி மருத்துவத்திற்கு வருவதற்கு முன்பாக சிறந்த ஆங்கில மருத்துவராவார் இவர் நீண்ட காலமாக ஆங்கில முறை மருத்துவம் செய்தவர் இவரிடம் வரும் நோயாளிகள் தொடர்ந்து ஒரே நோய்க்கு மீண்டும் மீண்டும் வந்தனர் தான் மருந்து முறையாக வழங்க வில்லையோ என எண்ணி தான் அளித்த மருந்துகளை சரிபார்த்தார் மருந்துகள் சரி. தான் சரியில்லையோ என எண்ணினார் தானும் மிகவும் சரியாக இருப்பத உணர்ந்தார் ஆக இந்த முத்துவ முறை தான் சரியில்லை இது மீண்டும் மீண்டும் நோய் கண்டவரை வரவழைக்க்றது என கண்டு அந்த மருத்துவ முறைக்கு முழுக்கு போட்டார் . இதை விட்டு ஹோமியோபதி மருத்துவத்தை தன்னுடைய வாழ்நாளில் தொண்ணுற்று ஒன்பது மருந்துகளை தன்னையே ஆய்வுக்கு உட்படுத்தி கண்டறிந்தார் . நீரிழிவு , இதயநோய், மூட்டுவலி, இப்படி பலநோய்களுக்கு ஆண்டு கணக்கில் மருந்து எடுத்து கொள்கிறவர்களும் மருந்து கொடுக்கிறவர்களும் இங்கு உண்டு . நீண்ட நாளுக்கு எடுக்கப் படும் இரசாயணம் கலந்த மருந்துகள் பின் விளைவை உண்டாக்குகிறது என இன்றைய பட்ட மேற்ப்படிப்பு படித்த ஆங்கில முறை மருத்துவர்களே கூறத் தொடங்கி விட்டனர் . வலி நீக்கும் மருந்துகளை விட்டு அதற்கு மாறாக தூய தமிழ மருத்துவத்தை முறையான மருத்துவர்களிடம் எடுக்கத் தொடங்கினால் முதலில் கக்கல் , கழிச்சல் மருந்துகளை கொடுத்து உடலையும் குடலையும் தூய்மையாக்கி வள்ளுவரின் குறள் போல நோய் கண்டவரின் அகவை, நோயின் நிலை ,அவரின் உணவுமுறை வழக்கம் , காலம் , போன்ற எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துக் கொண்டு முறையான மருந்துகளை வழங்குவார். இதனால் நோயில் இருந்து விடுபட்டு நோய் நீங்கி நீடுவாழ்வார் . சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்More than a Blog Aggregator

டிசம்பர் 12, 2011

மூலிகை மருந்துகள் எல்லா நோய்களையும் நீக்குமா ?



சோற்று கற்றாழை

மனித உடல் கோடான கோடி நூண்ணியசெல்களின் தொகுப்பு என்பதை நாமறிவோம் . இந்த கோடானுகோடி நுண்ணிய செல் அமைப்புகள் தன்னைத்தானே சிதைத்துக் கொண்டு பல செல்களாக மாற்றம்பெற்று மனிதத் தொழிற்சாலை தான் அச்சில் அதற்கான முழுமையான ஆற்றல்களை பெற்று அது நீடித்துவாழ்நாள் முழுவதும் நோய் இல்லாத வாழ்வு வாழ்வதற்கான கட்டமைப்பை உண்டாக்குகிறது
.
"மறுப்பது சாவை மருந்தென லாமே " என திருமூலர் பதிவு செய்கிறார் , அதாவது மனிதத்தை சாவில் இருந்து மீட்பதற்கான மருந்துகள்தமிழ மண்ணில் கொட்டி கிடப்பதாக இந்த உலகிற்கு அறிவிக்கிறார் , இப்படி பட்ட உயரிய அதே சமயம் அரிய மருத்துவமுறை உலக நாகரீகம் எல்லாம் தோற்றம் கொள்ளுவதற்கு முன்பாகவே சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்கள் இன்றும் சித்தமருத்துவத்தில் பயன் படுத்தும் மருந்துப் பொருட்களை பயன் படுட்த்தியமைக் காண குறிப்புகள் காண கிடைகிறது ,

இப்படி பட உயரிய மருத்துவ முறை இருந்தும் தமிழன் நோயில் வீழ்ந்து கிடக்கிறான் என என்னும் போதுதான் வேதனை கொள்ள நேரிடுகிறது தமிழை, அதன் சிறப்பை , அதில் பொதிந்துள்ள அறிவியலை இன்னும் தமிழன் அதன் முழுமையான கோணத்தில் உணரவே இல்லை . தமிழல் ஒன்று படாத ஒரு இனமாக இன்று கிடக்கிறான் .இப்படிப்பட்டவனை தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடவா முடியும் .அதுதான் இவ்வளவு சிறப்புகள் இருந்தும் தமிழர்கள் பயன் படுத்திக் கொள்ள வில்லை என்பதால் வேதனை பட வைக்கிறது.

ஆங்கில மருத்துவத்தை எடுத்துக் கொள்வோம் இந்த மருத்துவ முறை தமிழ மருத்துவத்தில் இருந்து கடன் பெற்று கிபி நான்காம் நூற்றாண்டில் தோற்றம் கொண்டவையாகும் இந்த மருத்துவம் இயற்கையாக அல்லாமல் இதளியங்களை (இரசாயணம் ) முதன்மையாக கொண்டு அவற்றையே மருந்தாக்கி இயற்கையோடு இணைந்த மனித உடலுக்கு நோய் நீங்க மருந்தாக அளிக்கப்படுகிறது.இது மனிதனை மனிதனாக அல்லாமல் பொறியாக ( இயந்திரமாக ) பார்த்தமையின் காரணமெனலாம் .

மேலை நாட்டு சூழல் ஆண் ,பெண் ,குழந்தைகள் என எல்லோரும் குடித்து கூத்தடிக்கும் சூழல் காரணம் ஆண்டு முழுவதும் பனிபொழிவும் கடுமையான மழையும் இருக்கிற சூழல் உடலை சூடேற்றி கொள்ள அவன் அதை நாட வேண்டியிருந்தத்து அதேபோல தனது மருத்துவத்தையும் இரசாயன மூலத்தை கொண்டான் தமிழ முந்தைய அறிவர்கள் பற்றிய முழுமையான புரிதலை பெறாமை அதனால் தான் அவன் ரெய்ன் ரெய்ன் கோ அவே என அவன் குழந்தைக்கு சொல்ல சொல்லி கொடுக்கிறான் தமிழ அறிவர்கள் இங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு அதாவது ஆண்டு முழுவதும் கடுமையான வெப்பத்தினால் வாடுகிறோம் எனவே மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என தன்னுடைய குழந்தைகளுக்கு சொல்லித்தந்தனர்

உறவுகளே இங்குதான் நாம் உங்களை சிந்திக்க வேண்டுகிறேன் அதாவது இப்படிப்பட்ட அரிய கலைகள் நம்தமிழமண்ணில் விளைந்து கிடக்கிறது இதை தமிழன் பயன் படுத்திக் கொள்ள வில்லையே என்ற எண்ணம் நம்மை தமிழர்களை பழிக்க செய்கிறது. உலகே வியந்து பார்க்கும் அறிவியலும் மெய்மமும் நமக்கானது இதை விடுத்து வரட்டுத்தனத்தில் வீழ்கிறானே என சலிப்படைய வைக்கிறது.இயற்கையான வளர் சிதை மாற்றங்கள் metabolism மூலம் மனித உடல் தன்னைத்தனே புதுபித்துக் கொள்ளுகிறது செயற்கையான இதளியம் (இரசாயணம் )உடலில் வந்து சேருவதை எதிர்த்துப்போராடுகிறது . தொடர் வருகையால் அதையும் எதிர்த்துப் போராடுகிறது .

மூலிகை மருத்துவம் என்பது எளிமையான மென்மையான (mild ) அணுகுமுறை கொண்டது மனித உடலில் தேங்கியுள்ள முறையில்லாத கிழிவுப்பொருளை நீக்கி கோடிக்கணக்கான செல்களுக்கு புத்துயிரூட்டி குறிப்பிட்ட நோவில் இருந்து விடுவிக்கிறது அதுமட்டும் அல்லாமல் மற்ற நோயில் இருந்தும் விடுவிக்கிறது .பின்னர் வெளியேறுகிறது .

சித்தர்கள் மெய்மங்கள் (தத்துவங்கள் ) உடலியங்கியலை (physiology ) . நூட்பமாக ஆய்வு செய்து மருத்துவனுக்கு(phsician ) உள்ள கடமையை கடுமையாக பட்டியலிடுகிறது .அதாவது

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

நோயை முழுமையாக ஆய்வு செய்து நோய் வந்த வழியையும் ஆய்ந்துவந்த நோயை முறையான மருந்துகள் மூலம் நீக்கும் வழியை ஆய்வு செய்து, கொடுக்கும் மருந்து நோய்கண்டவனுக்கு எந்த பின் விளைவையும் உண்டாக்க கூடாது என குறளாசான் கூறுகிறார்
அடுத்து

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்

என்கிறது வள்ளுவம் அதாவது மருத்துவ நூலை கற்றவன் நோய்கண்டவனின் அகவை,நோயின் அளவு நோய் வந்துள்ள கலாம் என நோயின் முழுமையான நோய்க்கான காரணங்களை ஆய்ந்து மருத்துவம் அளிக்க வேண்டும் என பதிவு செய்கிறது.

பன்னெடுங் காலத்திற்கு முன்பே தமிழர்கள் அறிவியலில் மருத்துவத்தில் உயர்ந்தும் சிறந்தும் இருந்தனர் என்பதை

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பபால்நாற் கூற்றே மருந்து .

என நோய்கண்டவன் , நோய் தீர்க்கும் மருத்துவன் , செவிலி , மருந்து என தனித்தனி துறைகள் தமிழ மருத்துவத்தில் இருந்துள்ளமை இதன்வழி அறியலாகிறது ஆக தமிழ மருத்துவம் பன்னெடுங் காலத்திற்கு முன்பே சிறந்தும் உயர்ந்தும் இந்த உலகிற்கு வழிகாட்டியாக இருந்தமை தெரிந்து கொள்ள முடிகிறதல்லவா ஆக தமிழ மருத்துவம் எல்லா நோய்களையும் நீக்கும் மனிதனை நோயில் இருந்து விடுவிக்கும் என்பது நூறு விழுக்காடு உண்மைதானே

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்

நாங்கள் மீண்டும் காட்டு வாழ்வுக்கு ஆயத்தமாகி விட்டோம் எப்போது மின்சாரம் வரும் வராது என தெரியாதது போலவே எமது இடுகையும் ....More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...