மார்ச் 21, 2011

அயல் மகரந்த சேர்க்கைக்கு (அடுத்தவர் மனைவிக்கு ) ஆசைபடுவதேன் ?


அயல் மகரந்த சேர்க்கைக்கு (அடுத்தவர் மனைவிக்கு ) ஆசைபடுவதேன் ?

இப்போது எல்லாம் குடும்ப உறவுகள் எல்லாம் சிதைந்து போகும் படியான
சூழ்நிலைகளே பெரிதும் கானலாகிறது இது ஏதோ இங்கொன்றும் அங்கொன்றும்
இருந்தால் பரவாயில்லை அனால் பெரும்பான்மை குடும்பங்கள் இந்த சீரழிவில்
சின்னாபின்னமாக ஆகிவருகிறது . இந்த கோட்பாடுகள் எங்கிருந்து வருகிறது .
உலகின் நாகரீகங்களுக்கும் ஒட்டுமொத்த உலகின் கூட்டுக்குடும்ப முறைகளுக்கும்
நமது வாழ்க்கைமுறை முன்னுதாரணமாக இருந்து வந்ததை நாம் அறிவோம் , அனால்
இன்று நமது கூட்டு குடும்ப முறைகளே வினாக்குரியாகிவருவதின் காரணமென்ன.
ஐரோப்பிய நாடுகளே வியந்து போற்றிய நாம் வாழ்க்கைமுறை எங்கே ?
இந்த குமுகமும் இந்த சிக்கலில் தவிப்பதானால் இதுவும் மாந்த குலத்தின் நோயே
என்பதால் இதற்கும் நம் தீர்வை கூறவேண்டும் தானே ?

பழமையான வாழ்க்கைமுறை என்பது நாம் நம் முன்னோர்கள் கட்டி காத்து வந்த
வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்து வந்தது ஆகும் .
இப்போது அது சிதைந்து வருகிறது கற்பு என்பது கற்று அதன்படி ஒழுகுவதுதனே ?
அதன் படிபார்த்தால் பிழை இன்றைய முறையில்லாத வாழ்வியலில் இருந்து
தொடங்குகிறது எனலாம் . அறிவுரை கூறி நல்வழி படுத்திய பெரியவர்கள் இன்று
ஆறாவது விரலாக்கி போயினர் ,. அதனால் அவர்களின் அறிவுரை இல்லாமலே போனதுஅதுவே
பிழைகளுக்கு முதன்மையான காரணமாகி
போனது .

பெரும்பாலும் பழங்காலங்களில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்
அப்போது தன் குடும்பத்திற்கு வேண்டியதை தாய் பார்த்து பார்த்து
செய்தாள் கணவன் மனைவி பாலியல் உறவுகளும் முறையாக இருந்தது கட்டுப்பாடு
இல்லாமல் இன்றுபோல் இருந்தது இல்லை . கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதனால்
இன்று கணவன் மனைவி உறவும் கூட விரைந்து கசந்து போகிறது .
குடும்பங்களில் நடக்கும் சிறிய சிறிய தவறுகளை சுட்டிகாட்டி நல்வழிபடுத்தி
நல்ல வழிகாட்டியாக இருந்து வந்தனர் பெரியோர் . அனால் அதற்க்கு எல்லாம் இன்று
வாய்ப்பில்லாமல் போகவே இன்று குடும்பங்கள் சிதைவை நோக்கி பயணமாகிறது .

தனியுடமை அமைப்பு என்பதால் இங்கு பணம் மட்டுமே குறிக்கோள் ஆகி
போனது? பணம் மட்டுமே வாழ்க்கை என்றால் பணம் வைத்து இருப்பவர்கள் எல்லாம்
மகிழ்வுடன் தானே இருக்கவேண்டும் அப்படி எல்லாம் இருப்பதாக தெரியவில்லையே ?
விண்ணைமுட்டும் கட்டிடங்களை (மருத்துவ நடுவங்களுக்கு ) நோக்கியல்லவா
ஓடுகின்றனர் . இது பற்றி சிந்திப்பார்களா?

அதுமட்டும் அல்லாமல் இன்று விரைந்தோடும் வாழ்க்கைமுறை என்பதால்
எல்லாவற்றிலும் தெளிவையும் அறிவையும் தேடும் வழக்கம் எல்லாம் இருக்கவில்லை
உண்மையை பற்றி எங்களுக்கு கவலையில்லை இந்த நிமிடம் மகிழ்வோடு இருக்கிறோமா
என்கிறனர் இது நோயன்றி வேறல்ல . தேவையில்லாத விடயங்களில் காட்டும் ஆர்வம்
இந்த குமுகத்திற்கு தேவையானத்தில் காட்டுவதே இல்லை .

பாலியல் உறவுகளை பொறுத்தவை முறையான அறிவு தோவை இதில் இந்த குமுகம்
அக்கறை காட்டுவதில்லை இன்றைய புதிய புதிய கண்டுபிடிப்புகளினால் தொழில்
நுட்பங்களினால் உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் செய்திகளும் நம் வீட்டின்
கதவங்களை தட்டுகிறது கணினி . செல்பேசி இவைகளை கூறலாம் இன்று இவைகள்
முறையில்லாத வகையில் பாலியலை படம் பிடித்து காட்டுவதை நாம் அறிவோம் . இதை
பார்த்துவிட்டு இயற்க்கைக்கு முரணாக நீண்ட நேர பாலியல் வேட்கையில்
நாட்டம் கொள்ளுகின்றனர் .இது நோயே . பாலியல் இன்பத்தை சிற்றின்பம் என்பர் .
அதுதான் இயல்பானதும் கூட . அதைவிடுத்து நீண்ட நேர பாலியல் இன்பத்திற்கு
வேட்கைகொள்ளுவது தவறான வழிக்கு வித்திடுகிறது .

இன்றைய காதல் மணம் புரிந்தவர்கள் கூட மணம் முறிவுகளை நோக்கி
ஓடுகின்றனர் . இதற்க்கு காரணம் வாழ்கையை முழுமையாக புரிந்து கொள்ளாத
காரணத்தினால் தான் எனலாம் எதையோ கற்பனை செய்து கொள்ளுகின்றனர் ஆனால்
இயல்பாக கிடைக்கும் பாலியல் இன்பத்தால் ஏமாற்றம் அடைகின்றனர் தம்
முறையில்லாத வகையில் கேட்டதற்கும் நடைமுறைக்கும் உள்ள வேறுபாடு அவர்களை
வேறுபட வைக்கிறது அதுமட்டும் அல்லாமல் மனித உடல் விந்து உற்பத்தி செய்யும்
பொறி (இயந்திரம் ) என எண்ணிவிடுகிறனர். இதும் தெளிவு பெறவேண்டிய செய்தியே .
அதுமட்டும் அல்லாமல் திருமண அல்லது காதலிக்கும் காலங்களில்
பார்க்கும் கணவன் அல்லது காதலன் வேறு திருமணம் முடிந்து பார்க்கும் கணவன் அல்லது மனைவி வேறுபாடு அதிகமாக தெரிகிறது காரணம் புரிந்து கொல்லாமை .பெரும்பாலும் வேலியை தாண்டுவதற்கு உளவியலும் ஒருகாரமகிறதுதிருமணத்திற்கு முன் அல்லது காதலிக்கும் முன் இருவரின் மாறுபட்ட குணன் நலன்களை அல்லது விருப்பு ,வெறுப்புகளை அறிந்து கொள்ளுவதில்லை . பணவருவாய் உள்ளவரா? அழகு இருக்கிறதா என்ற கண்ணோட்டத்தில் வினா நீளுகிறதே தவிர இருவரின் உளவாற்றல் பொருந்தியுள்ளதா என்பதை பற்றி சிந்திப்பதே இல்லை . அழகாக இருப்பவர்கள் எல்லோருமே அறிவாளியாக இருக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை .அழகை மட்டுமே பார்த்து காதலிப்பது அல்லது மணமுடிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பாகும் . பின்னாளில் இந்த அழகே சிக்கலுக்குரியதாக மாறிவிடுகிறது

பெண்கள் குழந்தை பேற்றிற்கு பின் உடல் அளவில் தளர்ச்சி அடைகிறார்கள் . இது இயல்பானதே . இது மட்டுமல்லாமல் திருமணத்திற்கு முன் அல்லது காதலிக்கும் முன் இருவரும் சந்தித்த விதம் வேறுமாதிரியானது ஆனால் உண்மையில் கணவன் மனைவியாக ஒன்றாக வாழும் போது இருக்கும் நிலை வேறுமாதிரியானது . அப்போது எல்லாம் நீட்டாக உடையுடுத்தி ஒருவரைஒருவர் கவர்ந்தனர் ஆனால் திருமணம் ஆனதும் கிழிந்த உடை , தளர்ந்த உடல் முகச்சாயம் இல்லாத மூஞ்சி இவை எல்லாம் அடுத்த வீட்டு பெண்ணை , அல்லது ஆணை பார்க்கும்படி செய்துவிடுகிறது .

இங்கு மற்றொன்றையும் தெளிந்து கொள்ள வேண்டிய நிலையிருக்கிறது . சினத்திற்கும் வெறுப்பிற்கும் பெரிதாக வேறுபாடு இல்லை என்ற கண்ணோட்டத்தை கொண்டிருப்பது தான். கணவன் அல்லது காதலன் இவர்களின் மேல் சினம் இருந்து விட்டால் இதை சரி செய்து கொள்ளலாம் . அனால் வெறுப்பு அடைந்து விட்டால் அவ்வளவு எளிதில் வெறுப்பை சரி செய்து கொள்ள இயலாது .அதனால் இருவரும் வெறுப்பு வராமல் பார்த்து கொள்ள வேண்டியது தேவையாகிறது .

முழுமையான வாழ்வு என்பது எங்கு வாழுகிறோம் என்பதல்ல யாருடன் வாழுகிறோம் என்பதுதான் . இந்த உத்தியை தெரிந்து கொள்ளதவ்ர்களின் வாழ்வில் சிக்கல்தான் விளையாடுகிறது .

சலிப்பில்லாது வாழ
உள்ளம் முழுவதையும் இருவரும் முழுமையாக புரிந்து கொள்க .
விட்டு கொடுத்து வாழ பழகுக .
இருவரும் இணைந்து விவாதம் முறையாக நடத்துக .
குறைகளை புண்படாத வகையில் சுட்டிகட்டுக .
எப்போதும் பளிச்சென இருக்க பழகுக .
பாலியல் ரீதியான குறைபாடுகள் இருப்பின் தீர்க்கசெய்க .
மணமுறிவு தீர்வு என எக்காலத்திலும் எண்ணாதீர்கள் .
வள்ளுவர் காட்டிய இன்பத்து பால் இருநூற்று ஐம்பது பாடல்களை இருவரும் சேர்ந்து படிக்க செய்க .
நம்புங்கள் நூறாண்டுகள் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ முடியும் அதற்க்கு முயற்சி செய்க .
வாழ்க்கை வாழ்வதற்கே .
தமிழ கலைகளை காப்போம் மீட்போம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...