அக்டோபர் 03, 2011

நல்லதோர் தாய்மை நல்லதெரு குழந்தைப்பேறு



நல்லதோர் தாய்மை நல்லதெரு குழந்தைப்பேறு


இன்று பலர் குழந்தைபேறு என்றாலே அச்சப்படுகின்றனர் கரணம் எதற்கு எடுத்தாலும் அறுவை சிகிச்சை தான்தீர்வு அதாவது தாய் அல்லது சேய் இருவரில் ஒருவரைத்தான் காப்பாற்ற இயலும் அல்லது அறுவைசிகிச்சைதான் தீர்வு என கூறுவார்கள் ஒரு சின்ன அறுவைசிகிச்சை தானே செய்து விட்டு போகட்டுமே என எண்ணம் கொள்ளலாம் தவறில்லை . ஆனால் இந்த அறுவை சிகிச்சையால் எதிர் காலத்தில் என்ன சிக்கல் நேரும் என பெரும்பாலும் நம் மக்கள் அறிந்து இருக்கவில்லை .

அப்படி என்னதான் சிக்கல் நேரும்?

குழந்தைபேறு என்பது நம் நாட்டில் மிகவும் எளிமையாக சிக்கலின்றி பெரும்பாலும் நடந்து வந்திருக்கிறது முன்பெல்லாம் பத்துக்கு
மேற்பட்ட குழந்தைகள் மிகவும் எளிமையாக பெற்றுக்கொண்டார்கள் இந்த சூழலில் அடுத்த குழந்தைக்கு ஆயத்தமாகி விடுவார்கள் எப்படி அவர்களால் முடிந்ததது? எதாவது கண் கட்டி வித்தை கற்றிருந்தார்களா என்ன? அது எல்லாம் இல்லை அவர்களின் வாழ்க்கை முறை இயற்கையை ஒட்டிய முறையில் இருந்தாது . சீரான வாழ்க்கைமுறை நல்ல உணவுத்திட்டம் கடுமையான உழைப்பு எதையும் பதற்றமின்றி செய்யும் உளவாற்றல் என பழைய வாழ்க்கைமுறை இயற்கையும் எளிமையையும் ஒட்டியதாக இருந்தது . இன்று வாழ்வே சிக்கலாகி நாற்றமெடுக்க தொடங்கி விட்டது இதனால் நோய்கள் வானாளாவ வளரத்தொடங்கி விட்டது . இந்த சிக்கலான வாழ்க்கை முறையால் குழந்தைப்பேறு சிக்கலாகிறது
சிக்கலாகும் குழந்தைப் பேறினால் பலநோய்கள் தோற்றம் கொள்ளுகிறது அளவுக்கதிகமாக முக்கி முக்கி உந்தித்தள்ளி குழந்தைபெற்றிக்கு ஆயத்தமாகும் போது கருப்பை சார்ந்த நோய்கள் பல அதாவது கருப்பை இறக்கம் முதல் பல்வேறு நோய்கள் ... அதுமட்டுமின்றி அறுவைசிகிச்சையால் அல்லது வலுக்கட்டாயமாக குழந்தையை இழுக்கப்படும் போது பல நோய்கள் தொடருகிறது கொஞ்சம் இருமினால் ,அல்லது சிரித்தால் , அல்லது தும்மினால் தம்மையும் அறியாமல் சிறுநீர் வெளியேறிஆடையை மாற்றும் அளவிற்கு சூழ்நிலை உண்டாகிறது இப்படி உளவியல் ரீதியான சிக்கலை உண்டாக்கி தொடர் நோயாளியாக்குகிறது .

இதற்க்கு எல்லாம் காரணம் முறையில்லாத வாழ்க்கைமுறை என நாம் கூறத் தேவையில்லை முறையில்லாத உணவுத்திட்டம் . இந்த காரணங்களினால் சிக்கலான குழந்தைப் பேறு உண்டாகிறது அவைமட்டுமின்றி உணவுத்திட்டம் மிகையான கொழுப்பு உணவுகள் மிகையான இனிப்பு வகைகள் இந்த இனிப்பு உணவுகள் குழந்தையை சற்று மிகையான எடையுள்ளதாக ஆக்கும் இப்படி உழைப்பு இல்லமால் மிகையான உணவு எடுத்துக் கொள்ளும் பொது குழந்தை மிகையான எடையுடன் பிறக்கிறது அதற்க்கு ஏற்றபடி தமது உடலை ஆயத்தப் படுத்திக் கொள்ளுவதில்லை ஆறாவது ஏழாவது மாதத்தில் இருந்து குழந்தைப் பேற்றிற்கு தமது உடலை ஆயத்தப் படுத்தும் சிலவகை இதற்க்கெனசித்த மருத்துவத்தில் சிறப்பாக தயாரிக்கப் படும் எண்ணெய் வகைகளை பிறப்பு உறுப்பு, இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் நாளும் பூசிவர உடல் குழந்தப் பேற்றிக்கு ஆயத்தமாகி எளிமையான குழந்தைப் பேறு கிடைக்கிறது .

அடுத்தப் பதிவிலும் விரிவாக தொடர்வோம்....
தாய்ப்பால் சீராக கிடக்க .....
தாய்ப்பால் பெருக .....
நோயில்லா குழந்தை வளர்ப்பு.... .
குழந்தை பேற்றிற்கு பின் .....மற்றும் உங்களின் வினாக்களுடன் ......

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...