அக்டோபர் 10, 2011

எளிமையான குழந்தைப் பேறு நோயில்லா இன்ப வாழ்வு


இப்போது எல்லாம் குழந்தை பருவத்திலேயே நோயாளி ஆக்கிகிவிடுவது பழக்கமாக இருக்கிறது இதற்க்கு அடிப்படியில் காரணம் என்ன வென்றால் நம்மிடையே கொட்டி கிடக்கும் சித்த மருத்துவ முறையை பற்றி அறியாமல் இருத்தல் எனலாம் நாம் கடந்த நானூறு , நானூற்றைம்பது ஆண்டுகளாக ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடிமைத்தனத்தில் இருந்தமையால் நமது கலைகளை மறந்தோம் அல்லது மறக்க அடிக்கப் பட்டோம் ஆக இன்று பெரும்பான்மையான மக்களுக்கு நமது மிகப் பெரிய கலையான சித்தமருத்துவத்தைப் பற்றி நாம் விளக்கி சொல்ல வேண்டி இருக்கிறது நமது கலைகளை நம் மக்களிடமே தொடக்கத்தில் இருந்தே கற்பிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது ஆங்கில வருகையை இன்னும் சிறப்பித்துக் கூறும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது இந்த அடிவருடிகள்தான் நமது கலைகளுக்கு அடிப்படியில் பகைவர்களாக இருக்கிறார்கள் .

தண்டாமைறையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்..... என்பதைப்போல தாமரையின் மலரில் உள்ள சுவையை அறியாத தவளையைப் போல நமது சிறந்த மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் உள்ள சிறப்புகளை அறியாமல் அதன் பயனையும் அறியாமல் அவற்றில் உள்ள சிறப்புகளை அறியாமல் கேலி பேசி நம்மை நோக செய்வர் பாவம் இவர்களை விட்டு நமது இலக்கை தொடருவது தான் சிறப்பாக இருக்கயியலும் ஆக இந்த அறியாமையில் உழலும் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்ல வேண்டி இருக்கிறது சித்தமருத்துவம் ஆலமரமாக வளர்ந்து இருக்கிற மருத்துவமுறை உலகினுக்கே வழிகட்டியகவும் நோய்களை நீக்க கூடிய நல்ல வாய்ப்பினை பெற்று இருந்தும் நமது மக்கள் நோயில் வீழ்ந்து கிடப்பதை எண்ணி வேதனை பட வைக்கிறது .

சிலமாதங் களுக்கு முன் தமிழகத்தின் நாளிதழான தினமணியில் ஒரு செய்தி பழநியருகே மலைவாழ் மக்கள் மகப்பேறுக்காக முதல் முறையாக மருத்துவ மனைக்கு செல்ல அங்கு குழந்தைபேறு சிக்கலாகியுள்ளது பெரிய மருத்துவ மனைக்கு செல்லுங்கள் அங்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுப்பார்கள் எனகூறி பெரிய மருத்துவ மனைக்கு அனுப்ப அவர்களில் பட்டறிவு நிறைந்த ஒருவர் இதுக்கெல்லாம் அறுவை சிகிச்சையா என கேட்டு எளிமையாக குழந்தையை திருப்பி குழந்தைப் பேற்றை உண்டாக்கி இருக்கிறார் அங்கிருந்த பெரிய மருத்துவர்களே வியந்து போயிருக்கிறார்கள் ஆக நமது பழமையான கலைகள் முறையாக பயன் படுத்தும் போது இந்த மண்ணில் மிகப் பெரிய மருத்துவ மாற்றத்தை உண்டாக்க இயலும் .

குழந்தைப்பேறு என்பது இயற்க்கை இந்த உலக உயிரினங்களுக்கு வழங்கிய மிகப் பெரிய கொடை இது எளிமையாகவும் சிக்கலின்றியும் மிகவும் நேர்த்தியாகவும் நடைபெறக் கூடியது அனால் இன்று இது அச்சப்பட கூடிய அளவிற்கு மாறியுள்ளது முன்பு குழந்தை களுக்கு பிறந்தது முதல் முறையாக சித்த மருந்துகள் வழங்கி நோயில் இருந்து வென்று எடுப்பார்கள் அதை உரைமருந்துகள் என வழங்குவர் இந்த மருந்துகள் சுக்கு, சித்தரத்தை . கடுக்காய் , மாசிக்காய் , குலக்காய்(ஜாதிக்காய் ) போன்ற மருந்துப் பொருட்களை முறைப்படி தூய்மைப் படுத்தி வைத்துக் கொண்டு நோய் நிலைக்கு ஏற்ப மருந்துப் பொருட்களை பயன்படுத்தி எல்லாவித நோயில் இருந்தும் வென்று நலமுடன் வாழுவர் . அதேபோல தாயையும் பாதுகாப்பதில் தமிழர்கள் சிறந்து விளங்கினர் இந்த மருந்துகளை முறைப்படி எடுத்துவர தாய்மையை வலிமையுடன் போற்றி வளர்த்து வந்தார்கள் அந்த குழந்தைகளும் வலிமையுயடன் இருந்தார்கள் ..

குழந்தைகளும் முறையான சித்த மருந்துகளும் அடுத்த பதிவில் சிந்திப்போம் ...

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் நோவில் இருந்து இந்த உலகத்தை காப்போம்.More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...