அக்டோபர் 18, 2011

நோயில்லா குழந்தை ......


கடந்த இடுகைகளில் குழந்தைபேறு அதன் முதன்மையான குறிக்கோள் இன்றைய சமூகம் சித்த்ம்ருத்துவ்த்தை முறையாக பயன் படுத்திக் கொள்ளாமைஅதைபற்றிய நமது விமர்சன கண்ணோட்டம் போன்றவை மற்றவர்களை எரிச்சல் அடைய வைத்திருக்கலாம் காரணம் உண்மைகள் முறையான விமர்சனங்கள் பலரை எரிச்சல் அடையவே செய்யும் . இந்த உலகமே நோயின்றி வாழுகிற சிறந்த ஒரு முறை அதாவது தமிழ கலைகள் இருக்கிறது அவற்ற்றை பயன் படுத்திக் கொள்ளவில்லை என்றால் இன்று அந்த சித்தர்களே என்றாலும் எரிச்சல் அடைவார்கள் அவர்கள் (சித்தர்கள் )உண்மையில் இந்த உலகம் முழுமையும் நோயின்றி வாழ்வதற்கான அரிய கலை தங்களின் கூரிய மதி நுட்பத்தால் பறந்து பட்ட மக்களுக்கு வழங்கு கிறார்கள் அதையோ பயன் படுத்திக் கொள்ளவில்லை என்றால் சினம் உண்டகும்தனே .

இன்றய குழந்தைப் பேற்றிற்கு முன்னதாக நாம் சிந்திக்க வேண்டியது தாய்மையின் கருப்பையைதான் இதை கண்ணேபோல காக்கவேண்டும் பருவ அகவையில் கண்மூடித்தனமாக பெண்மையை இழந்து இளமையிலேயே உடலை நாசப்படுத்திக் கொள்ளுகிறார்கள் இதனால் கருவை தாங்கி நிற்கும் கருப் பையில் பல்வேறு நோய்கள் தாக்கி குழந்தைப் பெற்றிக்கு ஆயத்தமகா நிலையில் இருக்கிறனர் அல்லது நோயாளியாகி விடுகிறனர் . இளமையில் திருமணத்திற்கு முன்னதாக கரு உண்டாகமால் தடுக்கும் கருத்ததடை மத்த்ரைகள் பயன்படுத்துவது கண்டிப்பாக எல்லோரையும் நோயாளியாக்கும் என்பது உண்மை . இதுபற்றி தனியாக ஒரு இடுகை வரும்.முதல் குழந்தையை கருக்கலைப்பு செய்து கொள்வது முற்றிலும் பிழையானது பின்னர் குழந்தைபேறு உண்டாகமால் போக வாய்ப்புமுண்டு .

முந்தய இடுகையில் குழந்தைப் பெற்றிக்கு பிறகு உரைமருந்துகள் பற்றி எழுதிஇருந்தேன் கடுக்காய் , மாசிக்காய், குலக்காய் (ஜாதிக்காய் )சுக்கு ,சித்தரத்தை ,போன்ற மருந்துப் பொருட்களை நெல்லாவியில் வேகவைத்து தூய்மையாக்கி கொண்டு மருந்துகளை அரைக்க தூய்மையான கல்லை ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும் இந்த உரைமருந்துகளை நோய்க்கு தக்கபடி பயன் படுத்தி குழந்தைக்கு வரும் எல்லா நோய்களில் இருந்தும் விடுவிக்கலாம். அதுமட்டும் அல்லாமல் தாய் முறையான மருந்துகளை எடுப்பதன் மூலம் தாயையும் சேயையும் பாதுகாத்துக் கொள்ளமுடியும் இந்த கண்ணோட்டத்தை பெற வேண்டும் என்பதற்காக இங்கு பதிவு செய்கிறோம் .இந்த காலத்தில் தாய்க்கு தாய்பால் இல்லாமை அல்லதுவேலைக்கு போகிறவர்கள் தாய்ப்பாலை வலுக்கட்டாயமாக நிறுத்த முயலுதல் போன்ற செயல்களில் ஈடு படுகிறனர் இதற்க்கு முறையான சித்த மருந்துகள் எடுக்க நாம் விரும்பும் எல்லாவற்றையும் பெறாலாம் . குழந்தைக்கு ஓராண்டு வரையில் தாய்ப்பாலை கொடுக்க வேண்டும் பிறந்த ஆறுமாதத்திற்கு பின்னர் இணை உணவு கொடுக்க பழக வேண்டும் இந்த சூழலில் டப்பாவில் அடைக்கப் பட்ட உணவுகள் கண்டிப்பாக கூடாது இது குழந்தையின் பசியை அடக்கிவிடும் குழந்தையின் எதிர்கால வாழ்வை முடமாக்கிவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் தரமான பருப்பு வகைகள் கீரைக்ச்ல் நெய் சேர்த்து கொடுக்க பழக வேண்டும்

அடுத்த இடுகையில் வரிவாக சிந்திப்போம் .....

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...