ஜனவரி 09, 2012

நோய்களை  நீக்கும் மருத்துவக்  குளியல்கள்

  பழந்தமிழர்கள்  நோயின்றி  வாழ்வதற்க்கான  கட்டமைப்பை  குளியல்  மூலமாகவும் மருத்துவ  ரீதியான  குளியல்கள்  முறையிலும்  கண்டறிந்தார்கள்   தமிழர்கள் அறிவு  சார்ந்து சிந்தித்தார்கள்  நான் கடந்த காலத்தில் இருந்தார்கள் என  குறிப்பிடுகிறேன் . இப்போது இல்லையா என்றால்  இருக்கிறார்கள் அவர்கள் மண்ணிற்குள்  வேராக பழமையை  முறைப்படி காத்து வருகிறார்கள் . இந்த அறிவு  சார்ந்து சிந்தித்ததின்  பலனான  நோயின்றி  வாழ்தலை  மக்களுக்கு கொடையாக  வழங்கினார்கள். அந்த கொடைதான். இன்று நமக்கு புதையலாக  நோயின்றி  வாழ  வழிகாட்டுகிறது  அந்த புதையலினுள்  நுழைவோமே ?

       பழமையை  கடைபிடிப்பதும் , காப்பதும்  சிரமம்  என இன்றைய  சமகால  இளசுகள்   சொல்லும் போது   என்ன செய்வது  என புரியாமல்  தவிப்பதுண்டு  சரி அது கிடக்கட்டும்  மீண்டும் வேதாளம் முருங்கை  மரத்தில் ஏறிய கதையாக ஆகிவிடும்  ஆகையால்  நேரே  செய்திக்கு செல்வோம்.

     நோயை நீக்குகிற  குளியல் முறைகளை  தமது பட்டறிவால்  பழந்தமிழர்களும்  சித்தர்களும் நமக்கு கொடையாக  வழங்கினார்கள் . அவைகள்
.
௧.மழை நீரில்  குளித்தல்      (Rain  bath  or  natural  bath )
௨.மண் குளியல்                      (Mud  bath )
௩.வாழை இலைக் குளியல்   (Sun  bath  through  the bnana  leaves )
௪.தொட்டிக் குளியல்               (Tup  bath )
௫.எண்ணைக் குளியல்          (Oil  bath )
௬.முதுகுத் தண்டு குளியல்  (Spinal cord )
௭.இடுப்புக் குளியல்                  (Hip  bath )
௮.குறிக் குளியல்                      (Chits  bath )
௯.நீராவிக் குளியல்                 (Steam bath )
௧௦.ஆதவக் குளியல்                 (Sun  bath )

       என பலவகைக்  குளியல் முறைகள்  தமிழகத்தில் இருந்து வருகிறது  இந்த முறைகள்  நோய் வராமல் காக்கவும்  வந்த நோயை  நீக்கவும்  செய்கிறது .

௧.மழை நீரில்  குளித்தல்  (Rain Bath )
      இந்த குளியல்  உலக  உயிர்கள்  அனைத்திற்கும்  ஏற்றதான ஒரு குளியல் முறையாகும்.மழை நீரில்  அளவற்ற  உயிர்வளி (ஆக்சிஜன் ) கொட்டிக்  கிடக்கும்  என்பது  நமக்குத்  தெரியும்  இந்த நீரை  நாம்  அமிழ்தம்  என்போம்  இந்த நீரின்  சுவையும்  தூய்மையும்  எங்கும்  கிடைக்காதவை  என்பதும் நாமறிந்த ஒன்றே  ஆனால்  அதை  நாம்  குடிக்க மாட்டோம் என்பது வேறு  செய்தி . இந்த மழை நீரில் அளவற்ற  உயிர்வளி (ஆக்சிஜன் ) உள்ளமையால்  உடலில் உள்ள  மயிர்க்  கால்கள்  வழியே  உள்சென்று  குருதி  ஓட்டத்தை  சீராக்குகிறது . இதனால்  உடல்  புத்துணர்வு  பெற்றுவதுடன்  நோயற்ற  வாழ்வை  தருகிறது .

௨.மண் குளியல் (Mud Bath )

   பழங்  காலந் தொட்டே  மண்குளியல் சிறப்பான  இடத்தில்  நிற்கிறது  இந்த மண் குளியல்  பல்வேறு வகையானது  குளிப்பதற்கு  பல்வேறு வகையான மண்ணை  பயன் படுத்தி  வந்து இருக்கிறார்கள்

௧.புற்று  மண்
௨. செம்மண்
௩.களிமண்

 இப்படி  பல்வேறு வகையான  மண் குளியல்கள்  இருந்து  வந்து இருக்கிறது  அடுத்த பதிவிலும்  முறையாக  தொடர்வோம் ......


சித்தமருந்துவங்  காப்போம்  நோய்வென்று  நீடு  வாழ்வோம் .


கூடுதலான  தமிழ் புத்தாண்டு  மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள்

More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...