ஜனவரி 31, 2012

௨.மண் குளியல் (Mud bath )



       இன்றைய  வாழ்க்கை முறை  மிகவும் மாறித்தான் போயிருக்கிறது. பழமை  மாறி புதுமை  அந்த  இடத்தை  பிடித்துவிட்டது கூடவே நோயும்.  பழமை நமது  உணவுமுறையும் வாழ்க்கைமுறையும் அறிவியல்  நோக்கில் இருந்தன  அதை நாம் மறந்து விட்டோம்  அதனால்  நோய்கள்  நம்மை பின்தொடர  விட்டுவிட்டோம் . முன்பு  குளிக்கும் முறைகூட  அறிவியல்  அடிப்படையில்  இருந்து நோயில்  இருந்து காத்தத்து  இன்று  குளியலே  நோயை  உண்டாக்குவதாக  இருக்கிறது . இன்றைய  வழலைக்கட்டி (சோப்பு )வெறுமனே காஸ்டிக்சோடா  போட்டு குளிப்பதால்  உடலில்  இருந்து  இயற்கையாக  சுரக்கும்  எண்ணத்  தன்மை  முழுவதும்  நீங்கி  எலும்புகள்  கலகலத்து போய் நோயில்  மரித்து போகிறனர் .

       இந்நிலை  கூடாதென  என  எண்ணிய  நமது  பழம் பெரும்  சித்த மருத்துவ அறிவர்கள் மனிதனை நோயில் இருந்து விடுவிக்க  பல நிலைகளை  கண்டறிந்து மக்களுக்கு கொடையாக  வழங்கினர் . அவற்றில்  ஒன்றுதான்  மண் குளியல் (Mud  bath ) இந்த  குளியல்  சிறந்த  குளியல் முறைகளில்  ஒன்றானது  என  நாம்  சிந்திக்க வேண்டிய  நிலையில் இருக்கிறோம் .

           புற்று மண்  , களிமண் , இவற்றை  எதை  தெரிவு  செய்து  குளிக்க முயண்டறாலும் தேவையான  மண்ணை  தூய்மையான  இடத்தில்  இரண்டு  அங்குலம்  அளவிற்கு   எடுத்துவிட்டு  தூய மண்ணை  எடுத்து தேவையான அளவு  நீர்விட்டு  குழைத்து  உடல் முழுவதும்  பூசி  இள வெயிலில்  அரை  அல்லது முக்கால் மணிநேரம்  இருந்து குளிர்ந்த நீரில் குளிப்பது  மிகவும்  சிறந்தது  இந்த குளியல் தோல்  சம்பந்த  நோயில்  சிறந்த பலனைத்தரும் .

        பெரும்பாலும்  குளிப்பவர்கள்  வெந்நீரில்   குளிக்கின்றனர்  இது தவறானது எண்ணெய்த் தேய்த்த நிலையில்  வெந்நீரில்  குளிக்கலாம்  ஆனால்  எண்ணெய் தேய்த்து  குளிக்கத நிலையில்  வெந்நீர்  குளியல்  நோயை  உண்டாக்கும்  என்பதறிக  எண்ணைக் குளியல்  செய்த  அன்று  வழலைக்  கட்டியை  பயன்  படுத்த  தேவையில்லை . சீயக்காய்  போட்டி குளிக்க வேண்டும்

மீண்டும்  அடுத்த இடுகையில்  சிந்திப்போம் .
சித்த மருத்துவம்  காப்போம்  நோய் வெல்வோம் .










More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...