பிப்ரவரி 27, 2012

இன்றைய இளைஞ்சர்களும் ஆண்மைக் குறைவுகளும் .



          இன்றைய  பதின்  பருவத்தினர்  அல்லது அதைத்  தாண்டிய  சிறு  அகவையிலேயே   பல  நோய்களை  சந்திக்கிறனர் . எம்மிடம் எழுபது  அகவை  இளையவர்களும்  இருபத்தைந்து  அகவை  கிழவர்களும்  பாலியல்  குறைபாடு என  கூறி  வருகின்றனார் . எழுபது அகவை  இளையவர்களை  வழிநடத்துவது  எனக்கு  களைப்பைத்  தரவில்லை . சொல்லுவதை  புரிந்து கொள்ளுகிறார்கள்  நல்ல பலனளிப்பதாக  கூறி  வாழ்த்துகளையும்  மகிழ்வையுயம்   உளமார சொல்லுகிறார்கள்   ஆனால்   இந்த   இருபது  தொடங்கும்   கிழவர்களின்   தொல்லை   சொல்லி மாளவில்லை .

     

    நோயற்ற  வாழ்வு என்பது  தமிழர்களுகானது . ஏன் எனின்  இங்குதான்  மறுப்பது சாவையும்  மருந்தென லாமே  என  மரணமிலாப்  பெருவாழ்வு  என அனைத்து மெய்மங்களும் (தத்துவங்களும் )  கொட்டிகிடக்கிறன .அதை  தொடுவார் இன்றி இருக்கிறது . இன்றைய  நிலையில் பல நிலைகளில்  ஆண்மைக்குறைவு  களுக்கான  காரணங்களை  கொண்டு  இருக்கிறாகள் . இதை தன்னுடைய வாழ்நிலையை  மாற்றிக்கொள்ளுவதாலும். நோயிலிருந்து  விடுபட முடியும்.

     இன்றைய  வாழ்க்கை முறை  யாருக்காகவோ  வாழ்வது போல  வாழ்கிறார்கள்  . மயக்கப் பொருட்களைப்   பயன்படுத்தி   சீரழிகின்றவர்கள்  பலர்  (குடி ,பீடி ,லேடி  இல்லாதவன்  பேடியாம்?) பலர்  முறைதவறிய   பாலுறவு அதாவது  மிகவும்  இளமையிலேயே...  . இன்னும்  பலர்  முறைதவறிய  நடவடிக்கை  நீண்ட  நேரம்  கண்விழித்து  இருத்தல்  மற்றும்  புட்டியில் அடைக்கப்  பட்டப்  பொருட்களைப் பயன்படுத்துவதால் அல்லது இராசயானங்கலந்து  உள்ள உணவுகளை  உண்ணுதல்   எந்த  வித கட்டுப் பாடுக்களுமின்றி   நேரம் காலம் இல்லாமல்  உண்ணுதல் இப்படி   பலகேடுகளே...நோயாக  பரிமாணம்   அடைகிறது  எல்லா நேரத்திலும் பாலுறவைப் பற்றிய  சிந்தனை  கொண்டு இருத்தல்  பாலுறவு பட  காட்சிகளைப்   பார்த்துப்  பரவசமடைவது ,   இவை  எல்லாமே   மனிதனை  மிருக  நிலைக்கு  இட்டுச்   செல்லக்  கூடியவைகள்  என்பது எவருக்கும்  புரிவதில்லை .

       நமது  கருத்தியல் வாதிகள் கூட  இதை  சிற்றின்பம்  எனவும்  கூறுவர் ஒருவகையில்   நாம் சிற்றின்பம்  என எடுத்துக் கொண்டாலும்  இதே நினைவுடன்பாலுறவு  எண்ணத்துடன்    இருத்தல்  மனிதனை  நோயளையக்குமே யன்றி  வேறல்ல .  ஒருநாளில்  சில நிமிட நேரங்களை  கொண்டது பாலுறவு அதைப் பற்றியே  சிந்தித்துக் கொண்டே  இருத்தல்  பிழைதானே ?

         இன்றைய  நோய்களில்  பல புரதப்  பற்றாக்குறை  நோயாக இருக்கறது . இந்த முறையான புரதப் பற்றாக்குறை  தான்  மிகையான  குழந்தைபேற்றை  உண்டாக்குகிறது  மேலை நாடுகளில்  மாமிச  புரதம் கிடைத்து விடுவதால்   சிக்கல் இல்லாமல் போகிறது ஏழ்மை நாடுகளில்  இந்த புரதப் பற்றாக்குறையே நாம் மக்களை பாடாய் படுத்து கிறது . இந்தவகை புரதம்  கிழங்குகள் , பச்சைப் பயறு  போன்றவற்றில்  மிகையாக கிடைகிறது  இதை  எடுக்கலாம் .

      திருமணத்திற்கு முன்பாகவே  உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக் கொள்ளுகின்றனர் . இது பலவழிகளில்  நோவைத்தருகிறது  உடலை பேணுதல் என்பது   என்னவென  புரிவதில்லை . இன்றைய ஊடகங்களும்  அவர்களை  தூண்டில்  மீனாக   இழுக்கிறது  அதன் பின்னரே  சுற்றி  தங்களையும்  இந்த குமுகத்தையும்  சீராழிகிறனர் .

    உடலை  ஒட்டி இறுக்கமான  ஆடைகளை அணிவாதல்  பாலுறவுக் குறைபாடு    உண்டாக்கும். மிகையான  புளிப்பும்  காரமும் சிக்கலை உண்டு பண்ணும் .நேரம் தவறிய  தூக்கமும்  பாலுறவை  பாழ்படுத்தும்  நாளும் வெந்நீரில்  மிகையான  வெப்பத்தில்  குளிப்பதாலும்  பாலுறவில்  நாட்டத்தை  குறைக்கும் .விந்தணுக்களை  அழிக்கும்

வாரம்  ஓர்  நாள்  எண்ணெய்க்  குளியல் செய்க.
சரிவிகித உணவு கொள்க .
பதப்படுத்தப் பட்ட  உணவுகளை  தவிக்க செய்க.
மயக்கப் பொருட்களை  நீக்குக.
குளிர்ந்த நீரில் குளிக்க செய்க.
கீரைகள் பழங்கள்  இரசாயணம் கலவாமல்  உண்க.
இரவில் நீண்டநேரம்  கண்விழிக்காமல்  இருக்க செய்க.

நோயும்  நீங்கும்  வாழ்வும் இனிக்கும் .

சித்த மருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம். 




More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...