ஏப்ரல் 16, 2013

ஆண்மைக்குறைவும் மக்களின் அறியாமையும்

 


             இப்போது  தடி எடுத்தவனெல்லாம்  தண்டல்காரன் போல ஆகிவிடுகிறார்கள் அல்லது ஆக்கி விடுகிறார்கள் . ஒரு தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் அழகுப் பதுமை அவர். வழமையாக  ஒரு  சமையல்கலை குறித்தான  நிகழ்வில்  பங்கேற்கிறார் . அந்த நிகழ்ச்சியை  தொலைக்கட்சியில்  கண்டவர்கள் எல்லாம் அந்த  அழகுப்  பதுமையை  நல்ல சமையல் கலைவல்லுனராகவே  சித்தரித்து  விட்டார்கள்  பாவம். அதன் பொருட்டு  கேள்விமேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்க  இறுதியில் அந்த அழகுப் பதுமை  உண்மையை போட்டு உடைக்க  அப்போதும் கூட  அவரை வட்டமிட்டு  வினாத் தொடுத்தார்கள்  சமையல் கலையை பற்றி கூறுங்கள் என்று . அவர் மீண்டும் மீண்டும் சொன்னது  நான் இதுவரை வீட்டில் கூட சமையல்  செய்தது இல்லை , தொலைக் காட்சி  படப்பிடிப்பிற்காக  நடித்தேன்  அவ்வளவு தான் .பாவம்  அறியாமை  மக்களை என்ன பாடு படுத்துகிறது பாருங்கள் ..!

            ஒரு மருத்துவனுக்கான  நல்ல அறிகுறி மக்களை நோயில் இருந்து விடுவிப்பது . ஆனால் செத்துப் போன நிலையிலும்  பணத்தாசை பிடித்து  பணத்தை கட்டிவிட்டுத்தான்  பிணத்தை எடுத்துச்  செல்லச் சொல்லுகிறது இன்றைய  சில மருத்துவமனைகள் . அறியாமை பிடித்த மக்கள்  மீண்டும் மீண்டும் அங்கேயே  வட்டமிடுவது  எதைக்காட்டுகிறது ?

           ஆண்மைக் குறைவு  என்ற  வெற்றுச் செல்லாடலும்  இப்படியே...! இன்றைய புதிய அறிவியலும்  ஆண்குறிக்குச்  செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதால்  ஆண்குறி எழுச்சி  இருப்பதில்லை என்கிறது . தூய தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் ஏழு தாதுக்களும்  பலம் குன்றுவதால் பாலியல் குறைபாடு உண்டாகிறது என்று தெளிவாக கூறுகிறது. சித்தர்கள்  உடலின் ஏழு  தாதுக்களும் பலமடைய  முறையான தீர்வினை  மரங்களின்வேர்கள் , பட்டைகள் , இலைகள்  ஆகியவற்றின் மூலமாக வழங்குகிறார்கள் . மருந்துப் பொருட்களை முறையாக முழுத் தூய்மை செய்தல்  சித்த மருத்துவத்தின்  தனிச்சிறப்பாகும்.  
       
           இன்றைய  ஆண்மைத் தளர்ச்சிக்கு (Male Impotence)முகாமையான   காரணம் இரத்த ஓட்டக் குறைபாடு  என்கிறது  புதிய ஆய்வு முடிவுகள் . உடனே  ஆண்குறிக்குச் செல்லும்  இரத்த குழாயில் உண்டாகும் குறைபாடுதானே இது முன்னமே தெரியும்  என்கிறீர்களா ? அதுதான் இல்லை . ஒருசிலர்  உளவியல் குறைபாடு  என்கிறார்கள் இதுவும் இல்லை .தமனி (artery ) குழாய்  களில் உண்டாகும்   இரத்த ஓட்டத்  தடையே ஆண்மைத்திறனை  குறைத்து விடுகிறதாம்.ஆண்களின் பாலுணர்வு கிளர்ந்து எழுவதற்கு நைட்ரிக்  ஆக்சைடு  பேருதவி செய்கிறதாம்.   எப்படி...? என்றால்  ஆண்களின் உள்ளம் பாலுணர்வில் திளைக்கும் போது  அந்த உணர்வை  உடலின் மெல்லிய உறுப்புகள்  உணர்ச்சியாக  மாற்றி  ஆணுறுப்பு  விரைத்தெழ  காரணமாக இருப்பது  இந்த நைட்ரிக் ஆக்சைடுதான் .  இதை  மேலை நாடுகளில் ஜிங்கோ  என மரப்பட்டையில் இருந்துதான்  எடுக்கிறார்கள் .... இது தமிழர்களின்  அறிவு சார் சொத்துரிமையின் ஒரு பகுதிதான் என நான் சொல்ல வேண்டுமா என்ன  ? தமிழர்கள்  விழிப்படைய வேண்டும் என்பது தான் நமது எண்ணமெல்லாம் .

More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...